Latest Updates
-
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா?
Union Budget 2026: இந்த வருட பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வந்துள்ளது தெரியுமா?
Union Budget 2026: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஒன்பதாவது முறை மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளார். 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், இந்தியாவின் பாரம்பரிய நல்வாழ்வு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஒரு உறுதியான அடியை எடுத்து வைத்துள்ளது.
இன்றைய பட்ஜெட்டில் ஆயுர்வேதம், யோகா, மனநல சேவைகள் மற்றும் அது சார்ந்த சுகாதாரக் கல்வி ஆகியவற்றை விரிவுபடுத்துவதையும், அதே நேரத்தில் இந்தியாவை ஒரு உலகளாவிய மருத்துவச் சுற்றுலா மையமாக நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் ஒரு முக்கிய அம்சம், யோகா மற்றும் ஆயுர்வேத சேவைகளில் 1.5 லட்சம் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டமாகும்.

இது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பாரம்பரிய மற்றும் தடுப்பு சுகாதாரப் பராமரிப்புக்கான வளர்ந்து வரும் தேவையை வலியுறுத்துகிறது. மேலும் நிதியமைச்சர், மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும், மேலும் வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பத்து புதிய துணை சுகாதாரத் துறைகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.
சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம்
ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் மருந்து பரிசோதனை ஆய்வகங்களை மேம்படுத்துதல், ஆயுர்வேத பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் ஜாம்நகரில் உள்ள WHO உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் போன்ற உலகளாவிய நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை பட்ஜெட் முன்மொழிகிறது. இது மட்டுமின்றி புதிய தேசிய மனநல நிறுவனம்(National Mental Health Institute), நிம்ஹான்ஸ் 2 மற்றும் ஐந்து பிராந்திய மருத்துவ சுற்றுலா மையங்கள் போன்ற அறிவிப்புகளுடன், 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், நல்வாழ்வு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உலகளாவிய சுகாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கிறது.
ஆயுர்வேதம் மற்றும் யோகா துறையில் வேலைவாய்ப்பு
இந்த பட்ஜெட்டில் பாரம்பரிய நலவாழ்வு முறைகளில் திறன் மேம்பாட்டிற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. 2026-27 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், யோகா மற்றும் ஆயுர்வேத அடிப்படையிலான சேவைகளை வழங்க 1.5 லட்சம் பராமரிப்பாளர்கள் பயிற்சி அளிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கை, நலவாழ்வுப் பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்துவதோடு, பெருமளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, பத்து புதிய துணை மருத்துவத் துறைகளை அறிமுகப்படுத்துவது ஒரு லட்சம் நிபுணர்களுக்குப் பயிற்சி அளிக்க உதவும், இது மருத்துவமனைகள், ஆரோக்கிய மையங்கள் மற்றும் மருத்துவ சுற்றுலா வசதிகள் என ஒட்டுமொத்த சுகாதார அமைப்பையும் வலுப்படுத்தும்.
மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள்
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் நிறுவப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் ஆயுர்வேதக் கல்வியின் தரத்தை மேம்படுத்தி, நாடு முழுவதும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், அரசாங்கம் ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களையும் மேம்படுத்தும். இது சிறந்த தரக் கட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் பரவலான கிடைப்பதை உறுதி செய்யும். ஆயுஷ் துறைக்குத் தேவையான திறமையான பணியாளர்களை உருவாக்குவதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மனநலம் மற்றும் மருத்துவச் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம்
இந்த ஆண்டு பட்ஜெட்டில் மனநல மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர், ஒரு புதிய தேசிய மனநல நிறுவனத்தை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்தார். அத்துடன, கன்டென்ட் உருவாக்குநர்கள் மற்றும் டிஜிட்டல் வல்லுநர்கள் எதிர்கொள்ளும் மனநல சவால்களைக் கையாள்வதில் கவனம் செலுத்தும் 'நிம்ஹான்ஸ் 2' என்ற புதிய நிறுவனமும் அமைக்கப்பட உள்ளது.
சர்வதேச சுற்றுலா மையம்
இந்தியாவை மருத்துவச் சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்காக, ஐந்து பிராந்திய மருத்துவச் சுற்றுலா மையங்களை அமைப்பதில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும். இந்த மையங்கள் சர்வதேச நோயாளிகளைக் கவர்வதோடு, சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி, அது தொடர்புடைய சேவைகளில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு நிதி ஒதுக்குவதையும் தாண்டி ஆயுர்வேதம், யோகா, மனநலம், திறன் பயிற்சி மற்றும் உலகளாவிய நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், அரசாங்கம் ஒரு முழுமையான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












