Latest Updates
-
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா?
ஞானப் பல் வலி தாங்க முடியலையா? இதோ அதற்கான சில எளிய தீர்வுகள்!
ஞானப் பல் முளைக்கும் போது ஒருவித அசௌகரியம் மற்றும் சிறு வலி ஏற்படலாம். இந்த வலியைப் போக்க எளிய முறையில் வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம்.
ஒரு மனிதனுக்கு ஞானப் பல் முளைக்கும் போது மனிதனின் அறிவு மேலும் வளர்கிறது என்று பெரியவர்கள் கூறி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். பெரும்பாலும் ஞானப் பல் 17-25 வயதிற்கு இடையில் முளைக்கிறது. இவை கடவாய்ப் பற்கள் என்று அறியப்படுகின்றன. இவற்றால் எந்த ஒரு பயனும் இல்லை. ஞானப் பல் முளைக்கும் போது ஒருவித அசௌகரியம் மற்றும் சிறு வலி ஏற்படலாம். இது மட்டுமில்லாமல் ஈறுகள் வீக்கமடையலாம், சிவந்து போகலாம் அல்லது சில நேரங்களில் புண் ஏற்படலாம்.

ஞானப் பல் வளர போதுமான இடைவெளி இல்லாதபட்சத்தில் பற்களின் வரிசையில் இடையூறு ஏற்பட்டு இந்த பாதிப்புகள் உண்டாகலாம். ஆகவே வாயில் உண்டாகும் இந்த பாதிப்புகளை போக்க எளிய முறையில் வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம். இதனால் பற்களில் தொற்று பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் தடுக்கப்படுகிறது.

ஞானப் பல் முளைக்கும் போது உண்டாகும் வலிக்கான காரணம் என்ன?
ஞானப் பல் முளைக்கும் போது உண்டாகும் ஒரு சிறு வலி குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இதற்கான காரணம் குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதனைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
ஞானப் பல் முளைக்கும் முன் மற்ற எல்லா பற்களும் ஏற்கனவே முளைத்திருக்கும். ஞானப் பல் முளைக்க போதிய இடம் இருக்காது என்பதால் மற்ற பற்களை அழுத்தி தனக்கான இடத்தை பெற முயற்சிக்கும். இதனால் ஈறுகளில் ஒருவித அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக ஈறுகள் மற்றும் பற்கள் ஆகியவற்றில் வலி உண்டாகலாம்.
சில நேரங்களில் வலியுடன் கூட ஒருவித துர்நாற்றம் ஏற்படக்கூடும், சாப்பிடுவதில் சிரமம் மற்றும் தலைவலியும் தோன்றலாம். இந்த வலி குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நீடிக்கலாம். இவ்வளவு நேரம் இந்த வலியைத் தாங்கிக் கொள்வது சற்று கடினமான காரியம். சிலருக்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் விட்டுவிட்டு இந்த வலி தொடரலாம். ஒரு வலி நிவாரணி மாத்திரை பயன்படுத்தி இந்த வலியைக் கட்டுப்படுத்துவதை விட சில எளிய தீர்வுகளை முயற்சித்து இந்த வலியை கட்டுப்படுத்த முடியும். இதனால் பற்களில் உண்டாகும் தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.

ஞானப் பல்லால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவும் எளிய வீட்டுத் தீர்வுகள்:
உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பது
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும். உப்பு மிக அதிகம் இல்லாமல் ஒரு சிட்டிகை மட்டுமே போடவும். அதுவே போதுமானது. உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் ஈறுகள் வீக்கமடைவது குறையும்.

வலி நிவாரணத்திற்கு உதவும் பூண்டு
ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டி-பயாட்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த பூண்டு, ஞானப் பல்லால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவும். வலி இருக்கும் பல் அல்லது ஈறுகளில் பூண்டு எண்ணெய் தடவுவதால் தாங்க முடியாத வலியும் குறையும்.

கிராம்பு எண்ணெய்
ஞானப் பல்லில் தீவிர வலி ஏற்பட்டால் பற்களில் மற்றும் ஈறுகளில் கிராம்பு எண்ணெய் தடவலாம். இதனை பின்பற்றுவதால் வலியில் இருந்து நிவாரணம் பெற முடியும். மேலும் இதனால் வாய் ஆரோக்கியம் மேம்படும். தொற்று பாதிப்பு இருந்தாலும் கிராம்பு பயன்படுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை. அடிப்படையில் கிராம்பு எண்ணெய் பற்களுக்கான சிகிச்சையில் சிறந்த தீர்வளிக்கும்.

குறிப்பு
மேலே கூறிய தீர்வுகள் அனைத்தும் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் நல்ல பலனை தரக் கூடியவையாகும். இந்த தீர்வுகளை முயற்சித்தும் எந்த ஒரு பலனும் இல்லாமல் வலி தொடர்ந்து நீடித்தால் பல் மருத்துவரிடம் செல்வது நல்லது. சில நேரங்களில் ஞானப் பல்லை எடுத்து விட்டால் மட்டுமே தீரக்கூடிய சில சிக்கல்களும் ஏற்படக்கூடும். அதனால் பல் மருத்துவரை அணுகுவது நன்மை தரும்.



Click it and Unblock the Notifications











