Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
மாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்...
வலிப்பு நோய் மாங்கொட்டையையும் திராட்சை சாறையும் இப்படி செய்து சாப்பிட்டால் உடனே வலிப்பு நோய் தீரும். இதுபோன்ற பாட்டி வைத்தியங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாகவே வலிப்பு நோய் உள்ளவர்கள் பற்றி அவர்களுக்கு பயம் இருக்கிறதோ இல்லையோ அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பயம் இருக்கும். காரணம் எந்த நேரத்தில் வலிப்பு வரும், வெளியில் சென்றிருக்கும் போது வந்துவிட்டால் என்கிற பயம் தான். வலிப்பு நோய் மாங்கொட்டையையும் திராட்சை சாறையும் இப்படி செய்து சாப்பிட்டால் உடனே வலிப்பு நோய் தீரும். இதுபோன்ற பாட்டி வைத்தியங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது வலிப்பு நோய் சம்பந்தப்பட்ட நரம்பு பிரச்சினைகள் இருந்தால், அவர்களுக்கு இந்த கீழ்வரும் பாட்டி வைத்தியத்தை அவர்குளுடன் பகிர்நு்து கொண்டு அவர்களுடைய நோய் தீர்க்க உதவி செய்யுங்கள். ஏதோ நம்மளால முடிஞ்சது.

பாட்டி வைத்தியம்
நமக்கு தெரிந்தவர்கள் எவருக்கேனும் வலிப்பு நோய் வந்துவிட்டால் நம் மனதில் பெரும் பயம் எழுந்து விடுகின்றது. ஆம் உணமையில் வலிப்பு நோயென்பது சிலவேளைகளில் உயிரையும் பறிக்கக் கூடிய ஆபத்தான ஒரு நோயாகும். வலிப்பு நோய் தீர்ப்பதற்கு நம்முடைய வீடுகளிலேயு கிச்சனில் உள்ள சின்ன சின்ன பொருள்களைப் பற்றி பார்க்கலாம்.

வெள்ளை வெங்காயம்
நாம் பெரும்பாலும் வீடுகளில் தினசரி சமையலில் சிவப்பு வெங்காயத்தைத் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அதைவிடவும் வெள்ளை வெங்காயத்தில் இன்னும் கூடுதலான ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருக்கின்றன. அது வலிப்பு நோய்க்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது.
வெள்ளை வெங்காயத்தை நன்கு கைகளால் இடித்து (மிச்சியில் போட வேண்டாம்) சாறெடுத்து வலிப்பு வருபவர்களின் காதுகளில் 3 அல்லது 4 சொட்டுக்கள் அளவில் அடிக்கடி விட்டு வந்தால், வலிப்பு வேகமாக அடங்கும்.

மாங்கொட்டை
மாம்பழத்தையோ காயையோ சாப்பிட்டு விட்டு, கொட்டையை அப்படியே தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அது நீரிழிவு நோயிலிருந்து மேலும் பல நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது. அது வலிப்பு நோய்க்கும் சிறந்த தீர்வாக இருக்கும். சரி இந்த மாங்கொட்டையை வலிப்பு நோய்க்கு மருந்தாக எப்படி கொடுப்பது?
மாங்கொட்டைக்குள் இருக்கும் வெள்ளை நிற விதையை எடுத்து நன்கு வேகவைக்க வேண்டும். நன்கு வெந்தபின் எடுத்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலநோய்கள், காக்காய் வலிப்பு மற்றும் வெயில் காலங்களில் ஏற்படுகின்ற சூட்டுப் பிரச்சினைகளும் கூட தீரும்.

முருங்கைப்பட்டை
முருங்கை மரத்தில் இலை, காய்,விதை ஆகியவற்றில் ஏராளமான சத்துக்கள் உள்ளது என்றும் அதில் உள்ளது போன்று இரும்புச் சத்து எதிலும் கிடையாது என்பதும் கீரைகளுக்கு அரசி இதுதான் என்பதும் நமக்குத் தெரிந்தது தான். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா வெறும் இலை, காய், விதையில் மட்டுமில்லை மருத்துவ குணங்கள். முருங்கை மரத்தின் வேர், பட்டை என அத்தனையும் மருந்து தான். இந்த வலிப்பு நோய்க்கும் கூட முருங்கை மரத்தின் பட்டை தான் தீர்வாக இருக்கப் போகிறது.
அதாவது முருங்கை மரத்தினுடைய பட்டையை எடுத்து நீர்விட்டு அரைத்து அதை வடிகட்டி சாறெடுத்து ரசமாக மாற்றிக் கொண்டு, அதை அரிசி சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் குளிர்க் காய்ச்சல், வலிப்பு நோய் ஆகியவை வேகமாகத் தீரும்.

பெருங்காயம்
பெருங்காயம் வாயுத் தொல்லை மட்டுமில்லை. வலிப்பு நோயையும் தீர்க்கும். இரண்டு கிராம் அளவுக்கு பொரித்த பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் வலிப்பு ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கிறதோ அதையெல்லாம் சரிசெய்யலாம்.
இது வாத நோய், தலையில் நீர்க்கோர்த்தல், ஜன்னி, வயிற்றுப் பிரச்சினைகள் அத்தனையும் தீர்ந்து போகும்.

திராட்சை
திராட்சைப் பழம் வலிப்பு நோய்க்கு மிக நல்ல குணத்தைக் கொடுக்கும். திராட்சைப் பழத்தைப் பிழிந்து சாறெடுத்து அதை இரண்டு தேக்கரண்டி வீதம் தினமும் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.
அப்படி தொடர்ந்து மருந்துகளோடு இதையும் சாப்பிட்டு வந்தால், வலிப்பு நோய் மிக வேகமாகத் தீரும்.



Click it and Unblock the Notifications











