Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
மாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்...
வலிப்பு நோய் மாங்கொட்டையையும் திராட்சை சாறையும் இப்படி செய்து சாப்பிட்டால் உடனே வலிப்பு நோய் தீரும். இதுபோன்ற பாட்டி வைத்தியங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாகவே வலிப்பு நோய் உள்ளவர்கள் பற்றி அவர்களுக்கு பயம் இருக்கிறதோ இல்லையோ அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பயம் இருக்கும். காரணம் எந்த நேரத்தில் வலிப்பு வரும், வெளியில் சென்றிருக்கும் போது வந்துவிட்டால் என்கிற பயம் தான். வலிப்பு நோய் மாங்கொட்டையையும் திராட்சை சாறையும் இப்படி செய்து சாப்பிட்டால் உடனே வலிப்பு நோய் தீரும். இதுபோன்ற பாட்டி வைத்தியங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது வலிப்பு நோய் சம்பந்தப்பட்ட நரம்பு பிரச்சினைகள் இருந்தால், அவர்களுக்கு இந்த கீழ்வரும் பாட்டி வைத்தியத்தை அவர்குளுடன் பகிர்நு்து கொண்டு அவர்களுடைய நோய் தீர்க்க உதவி செய்யுங்கள். ஏதோ நம்மளால முடிஞ்சது.

பாட்டி வைத்தியம்
நமக்கு தெரிந்தவர்கள் எவருக்கேனும் வலிப்பு நோய் வந்துவிட்டால் நம் மனதில் பெரும் பயம் எழுந்து விடுகின்றது. ஆம் உணமையில் வலிப்பு நோயென்பது சிலவேளைகளில் உயிரையும் பறிக்கக் கூடிய ஆபத்தான ஒரு நோயாகும். வலிப்பு நோய் தீர்ப்பதற்கு நம்முடைய வீடுகளிலேயு கிச்சனில் உள்ள சின்ன சின்ன பொருள்களைப் பற்றி பார்க்கலாம்.

வெள்ளை வெங்காயம்
நாம் பெரும்பாலும் வீடுகளில் தினசரி சமையலில் சிவப்பு வெங்காயத்தைத் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அதைவிடவும் வெள்ளை வெங்காயத்தில் இன்னும் கூடுதலான ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருக்கின்றன. அது வலிப்பு நோய்க்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது.
வெள்ளை வெங்காயத்தை நன்கு கைகளால் இடித்து (மிச்சியில் போட வேண்டாம்) சாறெடுத்து வலிப்பு வருபவர்களின் காதுகளில் 3 அல்லது 4 சொட்டுக்கள் அளவில் அடிக்கடி விட்டு வந்தால், வலிப்பு வேகமாக அடங்கும்.

மாங்கொட்டை
மாம்பழத்தையோ காயையோ சாப்பிட்டு விட்டு, கொட்டையை அப்படியே தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அது நீரிழிவு நோயிலிருந்து மேலும் பல நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது. அது வலிப்பு நோய்க்கும் சிறந்த தீர்வாக இருக்கும். சரி இந்த மாங்கொட்டையை வலிப்பு நோய்க்கு மருந்தாக எப்படி கொடுப்பது?
மாங்கொட்டைக்குள் இருக்கும் வெள்ளை நிற விதையை எடுத்து நன்கு வேகவைக்க வேண்டும். நன்கு வெந்தபின் எடுத்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலநோய்கள், காக்காய் வலிப்பு மற்றும் வெயில் காலங்களில் ஏற்படுகின்ற சூட்டுப் பிரச்சினைகளும் கூட தீரும்.

முருங்கைப்பட்டை
முருங்கை மரத்தில் இலை, காய்,விதை ஆகியவற்றில் ஏராளமான சத்துக்கள் உள்ளது என்றும் அதில் உள்ளது போன்று இரும்புச் சத்து எதிலும் கிடையாது என்பதும் கீரைகளுக்கு அரசி இதுதான் என்பதும் நமக்குத் தெரிந்தது தான். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா வெறும் இலை, காய், விதையில் மட்டுமில்லை மருத்துவ குணங்கள். முருங்கை மரத்தின் வேர், பட்டை என அத்தனையும் மருந்து தான். இந்த வலிப்பு நோய்க்கும் கூட முருங்கை மரத்தின் பட்டை தான் தீர்வாக இருக்கப் போகிறது.
அதாவது முருங்கை மரத்தினுடைய பட்டையை எடுத்து நீர்விட்டு அரைத்து அதை வடிகட்டி சாறெடுத்து ரசமாக மாற்றிக் கொண்டு, அதை அரிசி சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் குளிர்க் காய்ச்சல், வலிப்பு நோய் ஆகியவை வேகமாகத் தீரும்.

பெருங்காயம்
பெருங்காயம் வாயுத் தொல்லை மட்டுமில்லை. வலிப்பு நோயையும் தீர்க்கும். இரண்டு கிராம் அளவுக்கு பொரித்த பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் வலிப்பு ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கிறதோ அதையெல்லாம் சரிசெய்யலாம்.
இது வாத நோய், தலையில் நீர்க்கோர்த்தல், ஜன்னி, வயிற்றுப் பிரச்சினைகள் அத்தனையும் தீர்ந்து போகும்.

திராட்சை
திராட்சைப் பழம் வலிப்பு நோய்க்கு மிக நல்ல குணத்தைக் கொடுக்கும். திராட்சைப் பழத்தைப் பிழிந்து சாறெடுத்து அதை இரண்டு தேக்கரண்டி வீதம் தினமும் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.
அப்படி தொடர்ந்து மருந்துகளோடு இதையும் சாப்பிட்டு வந்தால், வலிப்பு நோய் மிக வேகமாகத் தீரும்.



Click it and Unblock the Notifications