Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
விருக்ஷாசனம் செய்தால் உங்கள் கால்களை உறுதியாக்கலாம்!!
விளையாட்டு வீரர்களுக்கு கால்களின் உறுதி மிக முக்கியம். பலம் வாய்ந்த கால்களால் வெற்றியை இன்னும் உறுதியாக்கலாம். கால்களை வலுப்படுத்த உடற்ப்யிற்சிகள் எத்தனையோ உள்ளது.

உடற்பயிற்சிகள் எப்படி கால்களை பலப்படுத்துகிறதோ, அதற்கு யோகா சற்றும் சளைத்ததில்லை. யோகாவில் மனம் உடல் திடப்படுத்த பலவிதமான ஆசனங்கள் உள்ளன. இதில் விருஷாசனா கால்களை வலுப்படுத்துகிறது.

விருஷாசனா :
விருக்ஷம் என்றால் விருத்தி என்று என்று பொருள். குறுகிய கால்களிலிருந்து விரிந்த மரம் போல் இந்த ஆசனத்தை செய்வதால் இப்பெயர் பெற்றுள்ளது.

செய்முறை :
முதலில் கால்களை நேராக வைத்து தடாசனாவில் நிற்க வேண்டும். முதுகை நிமிர்ந்து வைத்திருக்க வேண்டும்.
பின்னர் இடது காலை மடக்கி வலது தொடையில் பதியுங்கள்.

செய்முறை :
சம நிலைப் படுத்தி ஸ்திரமாக நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக கைகளை மேலே தூக்கி நமஸ்காரம் செய்வது போல் வையுங்கள்.

செய்முறை :
கண்களை நேராக பார்க்கவேண்டும். ஆடாமல் சில நொடிகள் நில்லுங்கள்.பின்னர் கால்களை கீழே வைத்து இப்போது வலது காலை மடக்கி இதேபோல் செய்ய வேண்டும்.

பலன்கள் :
கால்கள் வலுப்படுத்த உதவும். புஜங்கள் விரிவடையும். மனதை ஒரு நிலைப்படுத்தமுடியும். முதுகில் நெகிழ்வுத்தன்மை உண்டாகும்.

குறிப்பு :
ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.



Click it and Unblock the Notifications