Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
விருக்ஷாசனம் செய்தால் உங்கள் கால்களை உறுதியாக்கலாம்!!
விளையாட்டு வீரர்களுக்கு கால்களின் உறுதி மிக முக்கியம். பலம் வாய்ந்த கால்களால் வெற்றியை இன்னும் உறுதியாக்கலாம். கால்களை வலுப்படுத்த உடற்ப்யிற்சிகள் எத்தனையோ உள்ளது.

உடற்பயிற்சிகள் எப்படி கால்களை பலப்படுத்துகிறதோ, அதற்கு யோகா சற்றும் சளைத்ததில்லை. யோகாவில் மனம் உடல் திடப்படுத்த பலவிதமான ஆசனங்கள் உள்ளன. இதில் விருஷாசனா கால்களை வலுப்படுத்துகிறது.

விருஷாசனா :
விருக்ஷம் என்றால் விருத்தி என்று என்று பொருள். குறுகிய கால்களிலிருந்து விரிந்த மரம் போல் இந்த ஆசனத்தை செய்வதால் இப்பெயர் பெற்றுள்ளது.

செய்முறை :
முதலில் கால்களை நேராக வைத்து தடாசனாவில் நிற்க வேண்டும். முதுகை நிமிர்ந்து வைத்திருக்க வேண்டும்.
பின்னர் இடது காலை மடக்கி வலது தொடையில் பதியுங்கள்.

செய்முறை :
சம நிலைப் படுத்தி ஸ்திரமாக நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக கைகளை மேலே தூக்கி நமஸ்காரம் செய்வது போல் வையுங்கள்.

செய்முறை :
கண்களை நேராக பார்க்கவேண்டும். ஆடாமல் சில நொடிகள் நில்லுங்கள்.பின்னர் கால்களை கீழே வைத்து இப்போது வலது காலை மடக்கி இதேபோல் செய்ய வேண்டும்.

பலன்கள் :
கால்கள் வலுப்படுத்த உதவும். புஜங்கள் விரிவடையும். மனதை ஒரு நிலைப்படுத்தமுடியும். முதுகில் நெகிழ்வுத்தன்மை உண்டாகும்.

குறிப்பு :
ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.



Click it and Unblock the Notifications