Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
மார்பக புற்று நோயைப் பற்றி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை !!
155,000 பெண்கள் மார்பக புற்றுநோயால் புதிதாக கண்டறியப்படுகிறார்கள்.இதில்,70,000 பெண்கள் இறக்கிறார்கள். இந்தியாவில் கர்ப்பப்பைவாய் புற்றுநோயை அடுத்து இந்த புற்றுநோயால்தான் பெண்கள்பாதிக்கப்படுகிறார்கள்
மார்பக புற்று நோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்று நோய்களில் ஒன்று. இதனை ஆரம்ப நிலையிலேயே கவனித்துவிட்டால் சிரமமே இல்லாமல் எளிதாய் குணப்படுத்திவிடலாம்.

மற்ற புற்று நோய்களைப் போள் காலதாமதமாக இதன் அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. ஆரம்பத்திலேயே தெரிய வந்துவிடும். எனவே அவ்வப்போது நீங்களாகவே பரிசோதனை செய்வது மிகவும் நல்லது. அவ்வகையில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை கீழே.

சுய பரிசோதனை எப்படி செய்து கொள்வது ?
மார்பை கழுவி லேசாக சோப்பை போட்டு அதன் பின் மார்பை பரிசோதித்தால் சிறு கட்டிகள் இருந்தாலும் எளிதாய் கையில் அகப்படும். எனவே வீட்டிலேயே செய்யும்போது இவ்வாறு செய்து பாருங்கள்.

மார்பில் சிறு கட்டிகள் :
உங்கள் மார்பை அழுத்தும் போது உருண்டையாக சிறி சிறு கட்டிகள் தென்படுகிறதா? மாதவிடாய் சமயத்தில் இவ்வாறு சிறு உருண்டைகள் தென்படுவதுண்டு.
அதனை குழப்பிக் கொள்ளாதீர்கள். எப்ப்பதும் இருந்தால் அவசியம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கடினமாக இருந்தால் :
மார்பகம் வழக்கத்திற்கு மாறாக தடிமனாக கெட்டியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

மார்பக வலி :
மார்பகத்தில், தாங்க முடியாத வலி இருந்தால் உடனடியாக கவனியுங்கள். சிலருக்கு மாதவிடாய் சமயத்தில் வரும். அது சாதரணமானதே. ஆனால் வலி தொடர்ந்தால் உடனே கவனிக்கவும்.

காம்பில் நீர் வடிகிறதா?
மார்பக காம்பில் மஞ்சள் போன்ற திரவமோ அல்லது நீரோ வடிந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சிலருக்கு குழந்தை பிறந்து சில வருடங்களுக்கு மார்பக காம்பில் இது போல் திரவம் வரலாம். ஆனாலும் பரிசோதித்திக் கொள்வது முக்கியம்

சரும எரிச்சல்?
மார்பகத்தை சுற்றிலும் சரும எரிச்சல் இருந்தாலும் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனென்றால் மார்பகத்தில் உண்டாகும் எரிச்சலும் புற்று நோயின் முக்கியமான அறிகுறியாகும்.



Click it and Unblock the Notifications