Latest Updates
-
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம்
மார்பக புற்று நோயைப் பற்றி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை !!
155,000 பெண்கள் மார்பக புற்றுநோயால் புதிதாக கண்டறியப்படுகிறார்கள்.இதில்,70,000 பெண்கள் இறக்கிறார்கள். இந்தியாவில் கர்ப்பப்பைவாய் புற்றுநோயை அடுத்து இந்த புற்றுநோயால்தான் பெண்கள்பாதிக்கப்படுகிறார்கள்
மார்பக புற்று நோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்று நோய்களில் ஒன்று. இதனை ஆரம்ப நிலையிலேயே கவனித்துவிட்டால் சிரமமே இல்லாமல் எளிதாய் குணப்படுத்திவிடலாம்.

மற்ற புற்று நோய்களைப் போள் காலதாமதமாக இதன் அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. ஆரம்பத்திலேயே தெரிய வந்துவிடும். எனவே அவ்வப்போது நீங்களாகவே பரிசோதனை செய்வது மிகவும் நல்லது. அவ்வகையில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை கீழே.

சுய பரிசோதனை எப்படி செய்து கொள்வது ?
மார்பை கழுவி லேசாக சோப்பை போட்டு அதன் பின் மார்பை பரிசோதித்தால் சிறு கட்டிகள் இருந்தாலும் எளிதாய் கையில் அகப்படும். எனவே வீட்டிலேயே செய்யும்போது இவ்வாறு செய்து பாருங்கள்.

மார்பில் சிறு கட்டிகள் :
உங்கள் மார்பை அழுத்தும் போது உருண்டையாக சிறி சிறு கட்டிகள் தென்படுகிறதா? மாதவிடாய் சமயத்தில் இவ்வாறு சிறு உருண்டைகள் தென்படுவதுண்டு.
அதனை குழப்பிக் கொள்ளாதீர்கள். எப்ப்பதும் இருந்தால் அவசியம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கடினமாக இருந்தால் :
மார்பகம் வழக்கத்திற்கு மாறாக தடிமனாக கெட்டியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

மார்பக வலி :
மார்பகத்தில், தாங்க முடியாத வலி இருந்தால் உடனடியாக கவனியுங்கள். சிலருக்கு மாதவிடாய் சமயத்தில் வரும். அது சாதரணமானதே. ஆனால் வலி தொடர்ந்தால் உடனே கவனிக்கவும்.

காம்பில் நீர் வடிகிறதா?
மார்பக காம்பில் மஞ்சள் போன்ற திரவமோ அல்லது நீரோ வடிந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சிலருக்கு குழந்தை பிறந்து சில வருடங்களுக்கு மார்பக காம்பில் இது போல் திரவம் வரலாம். ஆனாலும் பரிசோதித்திக் கொள்வது முக்கியம்

சரும எரிச்சல்?
மார்பகத்தை சுற்றிலும் சரும எரிச்சல் இருந்தாலும் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனென்றால் மார்பகத்தில் உண்டாகும் எரிச்சலும் புற்று நோயின் முக்கியமான அறிகுறியாகும்.



Click it and Unblock the Notifications











