Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
மார்பக புற்று நோயைப் பற்றி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை !!
155,000 பெண்கள் மார்பக புற்றுநோயால் புதிதாக கண்டறியப்படுகிறார்கள்.இதில்,70,000 பெண்கள் இறக்கிறார்கள். இந்தியாவில் கர்ப்பப்பைவாய் புற்றுநோயை அடுத்து இந்த புற்றுநோயால்தான் பெண்கள்பாதிக்கப்படுகிறார்கள்
மார்பக புற்று நோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்று நோய்களில் ஒன்று. இதனை ஆரம்ப நிலையிலேயே கவனித்துவிட்டால் சிரமமே இல்லாமல் எளிதாய் குணப்படுத்திவிடலாம்.

மற்ற புற்று நோய்களைப் போள் காலதாமதமாக இதன் அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. ஆரம்பத்திலேயே தெரிய வந்துவிடும். எனவே அவ்வப்போது நீங்களாகவே பரிசோதனை செய்வது மிகவும் நல்லது. அவ்வகையில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை கீழே.

சுய பரிசோதனை எப்படி செய்து கொள்வது ?
மார்பை கழுவி லேசாக சோப்பை போட்டு அதன் பின் மார்பை பரிசோதித்தால் சிறு கட்டிகள் இருந்தாலும் எளிதாய் கையில் அகப்படும். எனவே வீட்டிலேயே செய்யும்போது இவ்வாறு செய்து பாருங்கள்.

மார்பில் சிறு கட்டிகள் :
உங்கள் மார்பை அழுத்தும் போது உருண்டையாக சிறி சிறு கட்டிகள் தென்படுகிறதா? மாதவிடாய் சமயத்தில் இவ்வாறு சிறு உருண்டைகள் தென்படுவதுண்டு.
அதனை குழப்பிக் கொள்ளாதீர்கள். எப்ப்பதும் இருந்தால் அவசியம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கடினமாக இருந்தால் :
மார்பகம் வழக்கத்திற்கு மாறாக தடிமனாக கெட்டியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

மார்பக வலி :
மார்பகத்தில், தாங்க முடியாத வலி இருந்தால் உடனடியாக கவனியுங்கள். சிலருக்கு மாதவிடாய் சமயத்தில் வரும். அது சாதரணமானதே. ஆனால் வலி தொடர்ந்தால் உடனே கவனிக்கவும்.

காம்பில் நீர் வடிகிறதா?
மார்பக காம்பில் மஞ்சள் போன்ற திரவமோ அல்லது நீரோ வடிந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சிலருக்கு குழந்தை பிறந்து சில வருடங்களுக்கு மார்பக காம்பில் இது போல் திரவம் வரலாம். ஆனாலும் பரிசோதித்திக் கொள்வது முக்கியம்

சரும எரிச்சல்?
மார்பகத்தை சுற்றிலும் சரும எரிச்சல் இருந்தாலும் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனென்றால் மார்பகத்தில் உண்டாகும் எரிச்சலும் புற்று நோயின் முக்கியமான அறிகுறியாகும்.



Click it and Unblock the Notifications











