Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
பனியில் இருந்து பட்டுக்கூந்தலை பாதுகாக்க டிப்ஸ்….!

குளிர்காலத்தில் கூந்தலின் ஈரப்பதம் பாதிப்பிற்குள்ளாவது இயல்பு. இதனால் நுனி வெடித்து கூந்தலின் அழகு பாதிக்கப்படும் எனவே கூந்தலின் ஈரப்பதத்தை தக்கவைக்க மாய்ஸ்சரைசர் உபயோகிக்கலாம். இதனால் கூந்தலின் உலர்தன்மை கட்டுப்படும்.
என்னதான் தலைபோகிற வேலையாக இருந்தாலும் தலையை பாதுகாக்க நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். குளிர்காலத்தில் குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் வரை குடித்தால் கூந்தல் உலர்ந்து போவதில் இருந்து தடுக்கப்படும்.
லூஸ் ஹேர் வேண்டாம்
மாசடைந்த இன்றைய சுற்றுப்புறச் சூழலில் லூஸ் ஹேர் விடுவது கூந்தலுக்கு ஆபத்தானது என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவே வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே பின்னல் போட்டு இறுக்கி கட்டவேண்டும் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள். இதுவே பாதுகாப்பானது என்கின்றனர் அவர்கள்.
கர்ச்சீப் கவசம் அவசியம்
அதிகாலையில் பனி பெய்யும் போது வீட்டைவிட்டு வெளியே செல்ல நேர்ந்தால் தலையில் துணியை வைத்து கட்டிக்கொள்ள வேண்டும். ஏனெனில் குளிர் காற்று கூந்தலை தாக்கினால் கூந்தலின் ஈரப்பதம் பாதிக்கப்படுவதோடு டல்லாகிவிடும் அதை தவிர்க்கவே இந்த துணிக் கவசம்.
வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல்
தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி அதனுடன், ஆலிவ் அல்லது பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலை புத்துணர்ச்சி அடைவதோடு கூந்தல் பாதுகாக்கப்படும்.
வெது வெதுப்பான நன்னீர்
எப்பொழுதுமே கூந்தலை வெதுவெதுப்பான நீரிலேயே அலசவேண்டும். அதீத சூடு நீரில் அலசினால் கூந்தல் உடைந்து பாதிப்பு ஏற்படும் என்பது அழகியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications