Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
பனியில் இருந்து பட்டுக்கூந்தலை பாதுகாக்க டிப்ஸ்….!

குளிர்காலத்தில் கூந்தலின் ஈரப்பதம் பாதிப்பிற்குள்ளாவது இயல்பு. இதனால் நுனி வெடித்து கூந்தலின் அழகு பாதிக்கப்படும் எனவே கூந்தலின் ஈரப்பதத்தை தக்கவைக்க மாய்ஸ்சரைசர் உபயோகிக்கலாம். இதனால் கூந்தலின் உலர்தன்மை கட்டுப்படும்.
என்னதான் தலைபோகிற வேலையாக இருந்தாலும் தலையை பாதுகாக்க நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். குளிர்காலத்தில் குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் வரை குடித்தால் கூந்தல் உலர்ந்து போவதில் இருந்து தடுக்கப்படும்.
லூஸ் ஹேர் வேண்டாம்
மாசடைந்த இன்றைய சுற்றுப்புறச் சூழலில் லூஸ் ஹேர் விடுவது கூந்தலுக்கு ஆபத்தானது என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவே வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே பின்னல் போட்டு இறுக்கி கட்டவேண்டும் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள். இதுவே பாதுகாப்பானது என்கின்றனர் அவர்கள்.
கர்ச்சீப் கவசம் அவசியம்
அதிகாலையில் பனி பெய்யும் போது வீட்டைவிட்டு வெளியே செல்ல நேர்ந்தால் தலையில் துணியை வைத்து கட்டிக்கொள்ள வேண்டும். ஏனெனில் குளிர் காற்று கூந்தலை தாக்கினால் கூந்தலின் ஈரப்பதம் பாதிக்கப்படுவதோடு டல்லாகிவிடும் அதை தவிர்க்கவே இந்த துணிக் கவசம்.
வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல்
தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி அதனுடன், ஆலிவ் அல்லது பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலை புத்துணர்ச்சி அடைவதோடு கூந்தல் பாதுகாக்கப்படும்.
வெது வெதுப்பான நன்னீர்
எப்பொழுதுமே கூந்தலை வெதுவெதுப்பான நீரிலேயே அலசவேண்டும். அதீத சூடு நீரில் அலசினால் கூந்தல் உடைந்து பாதிப்பு ஏற்படும் என்பது அழகியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications