Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
'ஹெலிகாப்டர் பெற்றோரா' நீங்கள்?: அதிக அக்கறை ஆபத்து

ஹெலிகாப்டர் பெற்றோர்கள்
குழந்தை எங்கே கீழே விழுந்து காயம்பட்டுக் கொள்ளுமோ என்று மேற்கண்ட பெற்றோர் கருதி விளையாடாமல் தடுப்பதால், அவர்களின் எடை கூடும் அபாயம் அதிகரிக்கிறதாம். இப்படி பிள்ளைகள் குறித்து எதற்கெடுத்தாலும் பயப்படும், அதீத அக்கறை காட்டும் தாய்- தந்தையரைத்தான் ஹெலிகாப்டர் பெற்றோர் என்கிறார்கள்.
இதுதொடர்பான ஆய்வை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இவர்கள் அமெரிக்காவில் 20 பூங்காக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். பூங்காவுக்கு வரும் குடும்பங்களைக் கவனித்தனர். அங்கு வந்துள்ள குழந்தைகளை, விளையாடாமல் அமைதியாக உட்கார்ந்திருப்பவை, ஓரளவு ஓடியாடுபவை, ரொம்பத் தீவிரமாக விளையாடுபவை என்று தரம் பிரித்தார்கள்.
அப்போது, அதிக அக்கறை பெற்றோர் தங்கள் குழந்தைகள் அதிகம் ஓடியாடாமல், விளையாட்டு அமைப்புகளில் ஏறி விளையாடாமல் பார்த்துக் கொண்டனர். குழந்தைகள் இயல்பாக விளையாடுவதைத் தடுத்த இந்தப் பெற்றோர், அவர்களை பெஞ்சுகளில் உட்கார வைப்பதில் கவனமாக இருந்தனர். இதனால் குழந்தைகள் சுறுசுறுப்பு தன்மை குறைந்தது.
அதீத அக்கறை ஆபத்து
இந்த ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான ஜேசன் பொக்காரோ, இன்று பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிகக் கவலை கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவேதான் அவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த கண்காணிப்பினால், குழந்தைகள் தங்கள் சமவயது நண்பர்கள், அண்டை அயலாருடன் விளையாடும் வாய்ப்புக் குறைகிறது. தொலைக்காட்சி அல்லது கணினி முன்னிலையிலேயே உட்கார்ந்திருக்கும் நிலை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.
பெற்றோர்களுக்கு எல்லை
தங்கள் ஆய்வின் அடிப்படையில், கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள், பொதுப் பூங்கா அமைப்பை வடிவமைக்கலாம், அதன் மூலம் பெற்றோரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் குழந்தைகளை நெருங்க முடியாமல், அமர்ந்து கண்காணிக்கும் வகையில் செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











