Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
வயிறு நோய் தீர்க்கும் காட்டுக்கொட்டைக் கிழங்கு!

தாது விருத்தி சூரணம்
இக்கிழங்கை துண்டுகளாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைத்து இடித்து தூளாக்கி சலித்து சூரணமாக தயாரிக்கலாம். இந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட தாது விருத்தியாகும். போக சக்தியைத் தூண்டும். இதனால் சிறுநீரகம் தொடர்புடைய நோய்களும் தீரும். வாதம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
சளி, கபம் குணமடையும்
இந்த கிழங்கின் சூரணத்தை தேனில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர கபம் நோய் குணமடையும். இஞ்சி சாற்றுடன் இந்த சூரணத்தை கலந்து சாப்பிட கபம் குணமடையும்.
அஜீரணத்தால் பசியின்மை ஏற்படும். இதனால் சாப்பிடவும் பிடிக்காது. இந்த நிலையில் காட்டுக்கொட்டைக்கிழங்கின் சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் போகும். அஜீரணம் சரியாகி பசி ஏற்படும். சீரகத்துடன் இத்தூளை சேர்த்து கஷாயம் போட்டும் சாப்பிடலாம்.
வயிற்றில் கசடு நீங்கும்
வயிற்றில் சேர்ந்துள்ள கசடுகளை நீக்க இதனை மலமிளக்கியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். இக்கிழங்கை பச்சையாக அரைத்து சிறிதளவு இளஞ்சூடான நீரில் கலந்து சாப்பிட்டால் இதனால் நன்றாக பேதியாகும். வயிற்றில் உள்ள கசடுகள் வெளியேறும். வாயுக்கள் வெளிப்படும். இதனால் ஆரோக்கியம் ஏற்படும்.
பேதி அதிகமானலோ, பேதியை நிறுத்த வேண்டும் என்றாலோ, புளித்த மோரையோ, எலுமிச்சம் பழச் சாற்றையோ சிறிது அருந்தினால் பேதி நின்றுவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











