Latest Updates
-
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்!
வயிறு நோய் தீர்க்கும் காட்டுக்கொட்டைக் கிழங்கு!

தாது விருத்தி சூரணம்
இக்கிழங்கை துண்டுகளாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைத்து இடித்து தூளாக்கி சலித்து சூரணமாக தயாரிக்கலாம். இந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட தாது விருத்தியாகும். போக சக்தியைத் தூண்டும். இதனால் சிறுநீரகம் தொடர்புடைய நோய்களும் தீரும். வாதம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
சளி, கபம் குணமடையும்
இந்த கிழங்கின் சூரணத்தை தேனில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர கபம் நோய் குணமடையும். இஞ்சி சாற்றுடன் இந்த சூரணத்தை கலந்து சாப்பிட கபம் குணமடையும்.
அஜீரணத்தால் பசியின்மை ஏற்படும். இதனால் சாப்பிடவும் பிடிக்காது. இந்த நிலையில் காட்டுக்கொட்டைக்கிழங்கின் சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் போகும். அஜீரணம் சரியாகி பசி ஏற்படும். சீரகத்துடன் இத்தூளை சேர்த்து கஷாயம் போட்டும் சாப்பிடலாம்.
வயிற்றில் கசடு நீங்கும்
வயிற்றில் சேர்ந்துள்ள கசடுகளை நீக்க இதனை மலமிளக்கியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். இக்கிழங்கை பச்சையாக அரைத்து சிறிதளவு இளஞ்சூடான நீரில் கலந்து சாப்பிட்டால் இதனால் நன்றாக பேதியாகும். வயிற்றில் உள்ள கசடுகள் வெளியேறும். வாயுக்கள் வெளிப்படும். இதனால் ஆரோக்கியம் ஏற்படும்.
பேதி அதிகமானலோ, பேதியை நிறுத்த வேண்டும் என்றாலோ, புளித்த மோரையோ, எலுமிச்சம் பழச் சாற்றையோ சிறிது அருந்தினால் பேதி நின்றுவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications