Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
ஈரல் நோய்களை குணமாக்கும் சிக்கரி

சிக்கரி தாவரம் பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசத்தில் காட்டியல்பாக வளரும். பீகார், பஞ்சாப், இமாசலப்பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, ஒரிஸ்ஸா, உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள், வேர் போன்றவை மருத்துவப் பயன் உடையவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இலைகள் மற்றும் வேரில் சிக்கோரியின் எஸ்கியுபின், எஸ்கியு லெட்டின் போன்றவை உள்ளன. கனிகளில் அசிட்டிக், சிட்ரிக், ஃபார்மிக், ஃபியூமரிக் ஹைட்ராக்ஸி அசிட்டிக் லாக்டிக், மாலிக் போன்றவை காணப்படுகின்றன.
சூட்டைத் தணிக்கும்
மூச்சுத்திணறலைத் தடுக்கும், அஜீரணத்தைப் போக்கும், தலைவலி போக்கும். மூளைக்கு நன்மருந்து. கசாயம் மாதவிடாய் போக்கினை, ஈரல் நோய்களை குணமாக்கும். யுனானி மருத்துவத்தில் இதயத்துக்கு நன்மருந்தாக பயன்படும், சூட்டைத்தணிக்கும். சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்தும். மூளை பாதிப்புகளுக்கு நல்லமருந்து.
செரிமானத்துக்கு உதவும், தூக்கம் உண்டாக்கும். வேர் ( உலர்ந்தது) அஜீரணத்தைப் போக்கும். சிறுநீர்க் கழிவை அதிகரிக்கும். மஞ்சள்காமாலை, கல்லீரல் பெரிதாதல், கீழ்வாய் நோய்களைப் போக்கும். கசப்பான நன்மருந்து.
காப்பியின் சுவை கூட்டும் சிக்கரி
காப்பி பிரியர்களுக்கு சிக்கரி சேர்த்தால்தான் பிடிக்கும். சிக்கரியில் "கேஃபீன்" இல்லை. ஆனால் அதனை காப்பியுடன் கலந்தால் "கும்"மென்று ஒரு "வறுபட்ட" வாசனை தூக்கி நிற்கும். அதனால் இந்தக் கலவையை பலர் விரும்புகின்றனர். மேலும் அது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, ஈரலுக்கும் நல்லது என்கிறார்கள். விலையும் காப்பியைவிட மிகக் குறைவு. ஆகையால் சுமார் இருநூறு ஆண்டுகளாக காப்பியுடன் சிக்கரி கலந்து அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. 80% காஃபீ + 20% சிக்கரி "பிளெண்ட்" என்பது இப்போதெல்லாம் "பில்டர் காப்பி"ப்பொடியின் நிலையான அலகாகிவிட்டது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications