Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
ஈரல் நோய்களை குணமாக்கும் சிக்கரி

சிக்கரி தாவரம் பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசத்தில் காட்டியல்பாக வளரும். பீகார், பஞ்சாப், இமாசலப்பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, ஒரிஸ்ஸா, உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள், வேர் போன்றவை மருத்துவப் பயன் உடையவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இலைகள் மற்றும் வேரில் சிக்கோரியின் எஸ்கியுபின், எஸ்கியு லெட்டின் போன்றவை உள்ளன. கனிகளில் அசிட்டிக், சிட்ரிக், ஃபார்மிக், ஃபியூமரிக் ஹைட்ராக்ஸி அசிட்டிக் லாக்டிக், மாலிக் போன்றவை காணப்படுகின்றன.
சூட்டைத் தணிக்கும்
மூச்சுத்திணறலைத் தடுக்கும், அஜீரணத்தைப் போக்கும், தலைவலி போக்கும். மூளைக்கு நன்மருந்து. கசாயம் மாதவிடாய் போக்கினை, ஈரல் நோய்களை குணமாக்கும். யுனானி மருத்துவத்தில் இதயத்துக்கு நன்மருந்தாக பயன்படும், சூட்டைத்தணிக்கும். சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்தும். மூளை பாதிப்புகளுக்கு நல்லமருந்து.
செரிமானத்துக்கு உதவும், தூக்கம் உண்டாக்கும். வேர் ( உலர்ந்தது) அஜீரணத்தைப் போக்கும். சிறுநீர்க் கழிவை அதிகரிக்கும். மஞ்சள்காமாலை, கல்லீரல் பெரிதாதல், கீழ்வாய் நோய்களைப் போக்கும். கசப்பான நன்மருந்து.
காப்பியின் சுவை கூட்டும் சிக்கரி
காப்பி பிரியர்களுக்கு சிக்கரி சேர்த்தால்தான் பிடிக்கும். சிக்கரியில் "கேஃபீன்" இல்லை. ஆனால் அதனை காப்பியுடன் கலந்தால் "கும்"மென்று ஒரு "வறுபட்ட" வாசனை தூக்கி நிற்கும். அதனால் இந்தக் கலவையை பலர் விரும்புகின்றனர். மேலும் அது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, ஈரலுக்கும் நல்லது என்கிறார்கள். விலையும் காப்பியைவிட மிகக் குறைவு. ஆகையால் சுமார் இருநூறு ஆண்டுகளாக காப்பியுடன் சிக்கரி கலந்து அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. 80% காஃபீ + 20% சிக்கரி "பிளெண்ட்" என்பது இப்போதெல்லாம் "பில்டர் காப்பி"ப்பொடியின் நிலையான அலகாகிவிட்டது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications