Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பெண்களே! இந்த பிரச்சினைகள் புற்றுநோயின் அறிகுறிகளாம்... அலட்சியமா இருக்காதீங்க... இல்லனா உயிருக்கே ஆபத்து...!
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் குடும்பம், அலுவலக வேலை என பலவற்றில் தங்களை ஈடுபடுத்தி, திறம்பட செய்து சாதித்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் உறவுகள், அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னிற்கும் அவர்கள், தங்களின் ஆரோக்கியத்திற்கான முன்னுரிமையை தவிர்ப்பதோடு ஏற்படும் சில முன்னறிகுறிகளை கவனிக்கவும், அதற்கு முக்கியத்துவம் தரவும் தவறிவிடுகின்றனர்.
பெரும்பாலும் போதுமான விழிப்புணர்வு இல்லாமலும், குறிப்பாக பெண்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதே பிரச்சனையாகிவிடுகிறது. இது புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களைத் தடுப்பதற்கும் முன்கூட்டியே கண்டறிவதற்குமான வாய்ப்பையும் இழக்க செய்கிறது.

புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வது மோசமான விளைவுகளை தவிர்ப்பதற்கு அவசியமாகிறது. இருப்பினும், புற்றுநோயின் பல அறிகுறிகளை, அவை மற்ற காரணங்களால் ஏற்படுகின்றன என்று கருதி, பெண்கள் பெரும்பாலும் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
புற்றுநோய் போன்றவை ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது ஏற்படும் அறிகுறிகளை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். பெண்கள் கவனிக்க வேண்டிய மற்றும் புறக்கணிக்க கூடாத சில அறிகுறிகளை இங்கு பார்க்கலாம்.
மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள்
மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் ஏற்படும் கட்டிகள் அல்லது வீக்கம் புற்றுநோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதர மாற்றங்கள் மார்பக புற்றுநோயை குறிக்கலாம். மங்கல், தோல் எரிச்சல், தோலின் மேற்பகுதி சிவந்திருப்பது, முலைக்காம்பில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது முலைக்காம்பிலிருந்து இரத்தத்துடன் கலந்த திரவ வெளியேற்றம் ஆகியவை இதன் அறிகுறிகள். மார்பகத்தின் தோற்றத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
கட்டிகள், தடித்தல் அல்லது மார்பக அளவு அல்லது வடிவத்தில் மாற்றங்கள் இருப்பதைக் கண்டறிந்தால் பரிசோதனை மேற்கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் இவை மார்பக புற்றுநோயுடன் தொடர்புடையதால் இவற்றை நிராகரிக்க கூடாது. அனைத்துப் பெண்களும் மாதந்தோறும் ஒருமுறையாவது தங்கள் மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாதியில் மார்பக சுய பரிசோதனையை மேற்கொள்ளவது, மாற்றங்களை அறிந்து கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.
அசாதாரண இரத்தப்போக்கு
மாதவிடாய் சுழற்சி அல்லாத சமயத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு கவலைப்பட வேண்டிய அறிகுறியாகும். மாதவிடாய் முழுவதுமாக நின்ற பின் அல்லது உடலுறவின் போது ஏற்படும் இரத்தப்போக்கும் இதில் அடங்கும். கர்ப்பப்பை வாய் அல்லது எண்டோமெட்ரியல் புற்றுநோயை நிராகரிக்க இந்த அறிகுறிகளை கண்டால் மருத்துவரை அணுகவும்.
மாதவிடாய் சுழற்சிகளுக்கு இடையில் ஏற்படும் இரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பின், உடலுறவு (பாலியல் செயல்பாடு) இரத்தப்போக்கு, இது சாதாரண மாதவிடாயாக கருதப்படலாம். இவை கர்ப்பப்பை வாய், கருப்பை அல்லது கருப்பை புற்றுநோய் போன்றவற்றை குறிக்கலாம்.
தொடர்ந்து இருமல் அல்லது கரகரப்பு
மருத்துவ ஆராய்ச்சிகளின் படி, சில வாரங்களுக்கு மேல் நீடித்த இருமல் அல்லது தொண்டை கரகரப்பு இருப்பது நுரையீரல் அல்லது தொண்டை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். பொது மருத்துவர்கள் இவற்றை பொதுவானவை என்றாலும், எக்ஸ்-கதிர்களை மட்டுமே நம்பியிருப்பது நோயை தவறாக கண்டறிய வழிவகுக்கும்.
குறிப்பாக புற்றுநோய் அறிகுறிகளை காசநோய் என தவறான கண்டறித்தலை கொடுக்கிறது. சரியான சிகிச்சைக்கு நிபுணர் மதிப்பீடு மற்றும் துல்லியமான நோயறிதல், இதற்கு தகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்கும்.
கழுத்தின் முன்புற வீக்கம்
இது தைராய்டு புற்றுநோயின் காரணமாக இருக்கலாம். தைராய்டு முடிச்சுகள் பெண்களுக்கு காணப்படும் பொதுவான ஒன்று தான். அவற்றில் பெரும்பாலானவை புற்றுநோய் அல்லாதவை மற்றும் சாதாரண விக்கம்.
ஆனால் நடுக்கோட்டில் அல்லது நடுக்கோட்டில் இருந்து விலகி பக்கவாட்டில் கழுத்தின் முன் வீக்கம் இருப்பது, படிப்படியாக அளவு அதிகரிப்பது, அல்லது நான்கு வாரங்களுக்கு மேல் தங்கியிருக்கும் நிணநீர் முனையின் விரிவாக்கம் போன்றவை ஏற்பட்டால் ஒரு சிறப்பு நிபுணரிடம் சென்று கேன்சர் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஒரு எளிய சோனோகிராஃபி ஊசி பரிசோதனையுடன் அல்லது இல்லாமலும் செய்யப்படுகிறது, இது புற்றுநோயைக் கண்டறிய உதவும்.
தொடர்ச்சியான வீக்கம்
அதிகப்படியான உணவு உட்கொள்வதால் ஏற்படும் அஜீரணத்தின் காரணமாக எப்போதாவது வீக்கம் மற்றும் நிறைவான உணர்வு ஏற்படுவது சாதாரணமான ஒன்று. இருப்பினும், இது நீண்ட நாட்களும் நீடித்தாலோ, உணவு மாற்றங்களால் சரியாகவில்லை என்றாலோ, எடை இழப்பு அல்லது வலியுடன் சேர்ந்து ஏற்பட்டால், கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இதுவும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டிய ஒன்று.
தொடர்ச்சியான எடை இழப்பு
முயற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருக்கும். ஆனால் இது மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களின் எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம். உணவு அல்லது உடற்பயிற்சியில் மாற்றங்கள் இல்லாமல் எடை கணிசமாகக் குறைவதை நீங்கள் கவனித்தால், எந்தவொரு அடிப்படை காரணத்தையும் நிராகரிக்காமல் நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
தொடர்ச்சியான சோர்வு
குறிப்பாக நவீன வாழ்க்கையின் அவசரத்தில் நமது பிஸியான கால அட்டவணைகளில் சோர்வு என்பது ஒரு அங்கமாக இருக்கலாம். இருப்பினும், தொடர்ந்து சோர்வாக உணர்வது, மற்றும்போதுமான ஓய்வில் இருந்தும் எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பது மிகவும் தீவிரமான நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற ஹார்மோன் அளவை பாதிக்கும் புற்றுநோய்கள் சோர்வை ஏற்படுத்தும், அத்துடன் இரத்த சோகையை ஏற்படுத்தும் லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற இரத்த புற்றுநோய்களும் ஏற்படலாம். தொடர்ச்சியான சோர்விற்கும் மருத்துவ பரிசோதனை அவசியம்.
தோலில் உள்ள மச்சங்களில் ஏற்படும் மாற்றங்கள்
தோலில் உள்ள மச்சங்கள் பொதுவானவை, ஆனால் அவற்றின் அளவு, வடிவம், நிறம் அல்லது புதிய மச்சங்களின் தோற்றம் ஆகியவை தோல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். மச்சம் மற்றும் பிற தோல் மாற்றங்களை தவறாமல் பரிசோதிப்பது தோல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
தொடர்ச்சியான அறிகுறிகள்
எப்போதாவது வீக்கம் ஏற்படுவது பொதுவானது, வயிற்றில் ஏற்படும் அசௌகரியம், ஆரம்பகால உணவின் போது ஏற்படும் நிறைவு அல்லது குடல் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களுடன் கூடிய நீண்ட கால வீக்கம் ஆகியவை கருப்பை புற்றுநோயைக் குறிக்கும் என்பதால், அவற்றை புறக்கணிக்க கூடாது. அசிடிட்டி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகளுக்கு பெண்கள் சுயமருந்துகள் மூலம் தங்களைத் தாங்களே மருத்துவம் செய்துகொள்வதோடு, முன்கூட்டியே கண்டறிவதற்கான மதிப்புமிக்க நேரத்தை இழக்கவும் நேரிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













