Latest Updates
-
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
46 நொடியில் பெண் குத்துச்சண்டை வீரரை வீழ்த்திய பயாலஜிக்கல் ஆண்... ஒலிம்பிக் போட்டியில் வெடித்த பாலின சர்ச்சை!
Olympics 2024: 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 25 வயதான அல்ஜீரிய குத்துச்சண்டை வீரர் இமானே கெலிஃப் தனது எதிரியான இத்தாலியின் ஏஞ்சலா கரினியை வெறும் 46 வினாடிகளில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "உயிரியல்ரீதியாக ஆணாக" இருக்கும் கெலிஃப், கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார், ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) இந்த தடையை நீக்கிய நிலையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.

முதல் சுற்றில் சில வினாடிகளிலேயே பலமான குத்துக்களால் கேலிஃப் காரினியின் மூக்கை உடைத்து, அவரை வலுவிழக்கச் செய்து, போட்டியிலிருந்து வெளியேறும்படி செய்தார். காரினி முகத்தில் போட்டிக்குப் பிறகு இரத்தம் வழிந்தோடியது நன்றாக தெரிந்தது, கெலிஃப்பின் வெற்றியை ஒப்புக் கொள்ளாமல், போட்டிக்குப் பிறகு அவர்களின் கையை அசைக்காமல் வெளியேறினார்.
போட்டிக்குப் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த காரினி, முதல் அடிக்கு பிறகே தான் மிகவும் வலியை உணர்ந்ததாகவும், ஏற்கனவே இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், ஆனால் இரண்டாவது குத்துக்குப் பிறகு, தொடர்வது பயனற்றது என்பதை உணர்ந்து, போட்டியில் இருந்து விலக முடிவு செய்ததாகவும் கூறினார். விளையாட்டின் மீது கொண்ட காதலால் தான் இந்த சண்டைக்கு சம்மதித்ததாகவும், ஆனால் இதுபோன்ற போட்டிகளில் சமமான நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தை இந்த போட்டி வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தனது கருத்துப்படி, ஆண் மரபியல் கொண்ட விளையாட்டு வீரர்கள் பெண் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும், இது பாரபட்சம் அல்ல என்றும், பெண் விளையாட்டு வீரர்களின் உரிமைகளை பாதுகாப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
உலகப் புகழ் பெட்ரா ஹாரி பாட்டர் புத்தகத்தின் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் இந்த நிகழ்வில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார், பொது இடங்களில் பொழுதுபோக்கிற்காக ஆண்கள் பெண்களை அடிப்பதை மக்கள் ஏன் அனுமதிக்கின்றனர் என்றும், அதே நேரத்தில் இதை அனுமதித்ததற்காக விளையாட்டு கமிட்டிகளை பெண் வெறுப்பாளர்கள் என்றும் கூறியுள்ளார்.
குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்களை IOC அங்கீகரிப்பதில்லை. எனவே அவர்கள் அந்தந்த நிகழ்வுகளின் போது ஒருவருக்கொருவர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை நிகழ்வுகள் IOC நிர்வாகக் குழுவின் தற்காலிகப் பிரிவான பாரிஸ் குத்துச்சண்டை பிரிவு (PBU) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அனைத்து குழப்பங்களுக்கிடையில், அல்ஜீரிய ஒலிம்பிக் கமிட்டி அவர்களின் குத்துச்சண்டை வீரரை ஆதரித்தது, இந்த சர்ச்சையை கெலிஃப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வெளிநாட்டு ஊடகங்களின் தீங்கிழைக்கும் தாக்குதல் என்று கூறியது.
அதிக டெஸ்டோஸ்டிரோன் என்றால் என்ன?
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் பாலின ஹார்மோன் அல்லது ஆண்ட்ரோஜன் ஆகும், இது ஒரு பெண்ணின் கருப்பையில் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈஸ்ட்ரோஜனுடன் இணைந்து, பெண் பாலின ஹார்மோன், டெஸ்டோஸ்டிரோன் ஒரு பெண்ணின் இனப்பெருக்க திசுக்கள், எலும்பு நிறை மற்றும் மனித நடத்தைகளின் வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் சரிசெய்ய உதவுகிறது. பெண் உடலில் டெஸ்டோஸ்டிரோனின் ஏற்றத்தாழ்வு ஒரு பெண்ணின் ஆரோக்கியம் மற்றும் செக்ஸ் டிரைவில் தீங்கு விளைவிக்கும்.
பெண்களில் டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்
- அதிகப்படியான உடல் முடி, குறிப்பாக முகத்தில் முடி
- வழுக்கை
- முகப்பரு
- விரிவாக்கப்பட்ட கிளிட்டோரிஸ்
- மார்பக அளவு குறைவாக இருப்பது
- குரல் கடினமாகுதல்
- தசைகள் வலிமையாக இருப்பது
- ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள்
- லிபிடோ குறைவு
பெண்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு ஏன் அதிகரிக்கிறது?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெண்கள் உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் பொதுவாக பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) அல்லது பிறவி அட்ரீனல் ஹைப்பர் பிளாசியா போன்ற அடிப்படை மருத்துவ நிலைகளில் அதிகரிக்கிறது.
சில சந்தர்ப்பங்களில், பாலின நிலை ஒரு காரணமாக இருக்கலாம், இதில் ஒரு நபருக்கு குரோமோசோமால், ஹார்மோன் அல்லது உடலியல் பாலின வேறுபாடுகள் உள்ளன, அவை ஆண் அல்லது பெண் என்ற பொதுவான, பைனரி வரையறைக்கு பொருந்தாது. தீவிர நிகழ்வுகளில், பெண்களில் அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் கருப்பைகள் அல்லது அட்ரீனல் சுரப்பிகளில் கட்டிகள் இருக்கும் மிகவும் கடுமையான மருத்துவ நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












