Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
காமாலைக்கு பயப்படறீங்களா? கரும்பு ஜூஸை இப்படி குடிங்க... காமாலை ஓடியே போயிடும்...
இயற்கையாக கரும்புச்சாறு, நெல்லிக்காய், பார்லி தண்ணீர், பூண்டு ஆகியவை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
நமது கல்லீரல் தான் உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். ஏனெனில் இந்த உறுப்பு தான் நமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை, இரத்த செல்களை உடலில் இருந்து நீக்குகிறது. மேலும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி அதை ஆற்றலாக மாற்றிக் கொடுக்கிறது.

கல்லீரலில் ஆரஞ்சு மஞ்சள் நிறம் கலந்த நிறமிகள் உருவாகும். இது பிலிரூபின் என்று அழைக்கப்படுகிறது. இதுவே கல்லீரல் அழற்சி ஆகும் போது பிலிரூபின் உற்பத்தி தடைபடுகிறது. இதனால் அந்த பிலிரூபின் நிறமிகள் இரத்தத்தில் கலந்து மற்ற உறுப்புகளுக்கும் சென்று மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

அறிகுறிகள்
அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்
சரும நிறம் மஞ்சளாக மாறுதல்
கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுதல்
இரத்தக் கசிவு
காய்ச்சல்
வாந்தி
குமட்டல்
பசியின்மை
வீக்கம்
திடீரென உடல் எடை குறைதல்
காய்ச்சல்
போன்றவை ஏற்படும்.

கரும்பு ஜூஸ்
கரும்பு ஜூஸில் நிறைய ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது மஞ்சள் காமாலை போக்க பெரிதும் பயன்படுகிறது. எனவே நீங்கள் கரும்பு ஜூஸ் சாப்பிடுவது உங்கள் கல்லீரல் மறுபடியும் இயங்க உதவும். பிலிரூபின் அளவும் சரியாகும். எனவே தினமும் 1-2 டம்ளர் கரும்புச் சாறு குடித்து வாருங்கள்.

பூண்டு
பூண்டில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது. மேலும் மஞ்சள் காமாலையில் இருந்து சீக்கிரம் மீள இது உதவி செய்யும்.
எனவே 3-4 பூண்டு பற்களை தினமும் எடுத்துக் கொண்டு வாருங்கள்.

சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற ஜூஸ் வகைகள் கல்லீரலின் செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டு வந்து பிலிரூபின் அளவை குறைக்கிறது. எனவே தினமும் 1டம்ளர் திராட்சை ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஹெப்டோப்ரக்டிவ் தன்மை கல்லீரலை காக்கிறது.
12 சொட்டுகள் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் 30 மில்லி லிட்டருடன் கலந்து கல்லீரல் இருக்கும் பகுதியான அடி வயிற்றில் அப்ளே செய்யுங்கள். லேசாக மசாஜ் செய்து விடுங்கள். இது நல்ல பலனை தரும்.

சூரிய ஒளி
குழந்தைகளுக்கு பிறக்கும் போது வரும் மஞ்சள் காமாலையை போக்க சூரிய ஒளி பெரிதும் பயன்படுகிறது. இந்த சூரிய ஒளி பிலிரூபின் மூலக்கூறுகளை ஐசோமரைசேசன் செய்து விடுகிறது.

விட்டமின் டி
சைனீஸ் மெடிக்கல் அசோசியேஷன் நாளிதழ் கருத்துப் படி பிறந்த குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலைக்கு விட்டமின் டி பற்றாக்குறை தான் என்கிறார்கள். எனவே உங்கள் உணவில் விட்டமின் டி அதிகமான உணவை எடுத்துக் கொண்டால் பிறக்கின்ற குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவதை தடுக்கலாம். முட்டை, மீன்கள், சீஸ், பால், மஸ்ரூம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

பார்லி தண்ணி
க்ளினிக்கல் ஆன்ட் டைகனிஸ்ட் ரிசர்ஜ் படி பார்லி தண்ணீரில் மஞ்சள் காமாலையை போக்கும் மருத்துள குணம் இருப்பது தெரிய வந்துள்ளது.
பயன்படுத்தும் முறை
1 டீ ஸ்பூன் வறுத்த பார்லி பொடி யை ஒரு டம்ளர் நீரில் கலந்து கொள்ளுங்கள். இதை தினமும் குடித்து வாருங்கள். மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டு விடலாம்.

துளசி
துளிசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் ஹெப்போப்ரக்டிவ் தன்மை மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது. எனவே தினமும் இரண்டு துளசி இலைகளை மென்றோ அல்லது துளசி டீ போட்டு குடித்தோ வரலாம்.

நெல்லிக்காய்
நெல்லிக்காய் மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் உடையது. அதிலும் நெல்லிக்காய் பழத்திற்கு மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, அழற்சியை போக்கும் தன்மை உள்ளது.
பயன்படுத்தும் முறை
2-3 நெல்லிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்றாக குளிர்ந்த பிறகு அதனுடன் தேன் சேர்த்து குடித்து வாருங்கள்.

தக்காளி
தக்காளியில் லைக்கோபீன், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஆன்டி ஜெனோடாக்ஸிக் போன்ற குணங்கள் உள்ளன. இதுவும் மஞ்சள் காமாலை குணப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
பயன்படுத்தும் முறை
2-3 தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி அதன் தோலை உரித்து கொள்ளுங்கள். பிறகு வேக வைத்த தக்காளியை பிசைந்து தண்ணீர் சேர்த்து அந்த ஜூஸை தினமும் குடித்து வாருங்கள். மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம்.

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க
மது அருந்துவதை தவிருங்கள்
உடல் எடையை பராமரியுங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
நிறைய தண்ணீர் குடியுங்கள்.



Click it and Unblock the Notifications











