Just In
- 48 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Finance CHATGPT முதல் இந்திய ஊழியரை நியமித்தது.. யார் இந்த பிரக்யா மிஸ்ரா..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காலையில எழும்போது கண் இப்படி சிவந்து இருந்தா என்ன அர்த்தம் தெரியுமா? உடனே என்ன செய்யணும்?
கண்கள் சிவந்து போவதற்கான காரணங்கள், அறிகுறிகள் ஆகியவற்றைப் பற்றி மிக விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கண்களில் உள்ள வெள்ளைப் பகுதியில் உள்ள திசுக்களில் உண்டாகும் வீக்கம் அல்லது சிவப்பு நிறம் கண்களை மொத்தமாக சிவப்பாக மாற்றும். இத்தகைய சேதமடைந்த திசு அடுக்குகள் உடலில் உள்ள கிருமி, பாக்டீரியா, நச்சுப் பொருட்கள், ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்கள், மற்றும் எரிச்சல் உண்டாக்கும் பொருட்கள் ஆகியவற்றுடன் இணைந்து பல வியாதிகளை தோற்றுவிக்கிறது.
பொதுவாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக கண்கள் சிவந்து போவதற்கு தொற்று பாதிப்பு மற்றும் தொற்று அல்லாத பாதிப்பு என்று இரண்டு வகையான காரணங்கள் உண்டு.
அறிகுறிகள்
கண்கள் சிவத்து போவதற்கான சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. அவை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. கண்களில் மிகுந்த அரிப்புடன் கூடிய எரிச்சல் மற்றும் அசௌகரியம் உணரப்படும்.
2. கண்களின் உட்பகுதியில் உள்ள சவ்வுகளில் உள்ள திசு அடுக்குகளில் வீக்கம் ஏற்படலாம்.
3. கண்களில் இருந்து அதிக கண்ணீர் வெளியேறலாம்.
4. கண் இமை மற்றும் ரப்பைகளில் ஏடுகள் படியலாம்
5. கண்களில் பஸ் உண்டாகலாம்.
6. கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு லென்ஸ் சரியான இடத்தில் கண்களில் பொருந்தாமல் ஒரு வித அசௌகரியம் ஏற்படலாம்.
7. கண்களின் வெள்ளைப் பகுதி சிவப்பு நிறத்தில் அல்லது பிங்க் நிறத்தில் காணப்படலாம்.
MOST READ: உங்க கையில இருக்கிற பணக்கார ரேகை உங்க அதிர்ஷ்டத்த பத்தி என்ன சொல்லுது? வாங்க பார்க்கலாம்
வகைகள்
1. பக்டீரியா காரணமாக கண்கள் சிவப்பது :
பல நேரங்களில் கண்களில் இருந்து பஸ் வெளியேறும்.
சில நேரங்களில் காதுகளில் தொற்று பாதிப்பு உண்டாகலாம்.
2. ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் கண்கள்:
பொதுவாக இது இரண்டு கண்களிலும் ஏற்படலாம்.
கண்களில் வீக்கம், நீர் வடிவது, மற்றும் சிறிய அரிப்பு போன்றவை உண்டாகலாம்.
3. எரிச்சலூட்டும் பிங்க் கண்கள் :
கண்களில் இருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வெளியேறுவது மற்றும் பஸ் வெளியேறுவது இதன் முக்கிய அறிகுறியாகும்.
4. வைரஸ் காரணமாக கண்கள் சிவப்பது:
சளி, காய்ச்சல் காரணமாக சுவாச தொற்றினால் உண்டாகலாம்.
முதலில் ஒரு கண்ணில் இந்த பாதிப்பு ஏற்பட்டு பின்னர் இரண்டாவது கண்ணிலும் இது பரவக் கூடும்.
பஸ் வெளியேற்றம் இருக்காது ஆனால், கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும்.
எப்படி பரவுகிறது?
கண்கள் சிவந்து போவதற்கான காரணம் பல்வேறு பக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் ஆகும். வைரஸ் மற்றும் பக்டீரியா ஆகிய இரண்டும் எளிதில் பரவக் கூடியதாகும். ஒரு மனிதரிடம் இருந்து மற்றவரிடம் பல வழிகளில் இந்த தொற்று பரவ வாய்ப்புகள் இருக்கிறது. இருமல் மூலம் , தொடுதல் மூலம், கண்கள் பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்திய பொருளை மற்றவர் பயன்படுத்துவதன் மூலம், மற்றும் அவர்களிடம் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த கிருமிகள் பரவுகிறது. கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது, தொடுவது போன்றவை மூலமாகவும் இந்த தொற்று பரவ அதிக வாய்ப்பிருக்கிறது.
நோய் கண்டறிதல்
ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் ஐ என்று கூறப்படும் சிவந்த கண்களும் பொதுவாக கண்கள் சிவந்து போவதற்கான அறிகுறிகளைக் கொண்டது ஆகும். ஆனாலும் அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உணர்வுத்திறனுடன் நேரடி தொடர்பு கொண்டது இந்த வகை பாதிப்பு. சில நேரம் தும்மல் மற்றும் மூக்கடைப்பும் இந்த வகை பாதிப்பில் இணைந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வாமை பாதிப்பும் உண்டாகலாம்.
மகரந்தம் அதிகமாக இருக்கும் வசந்த காலங்களில் இந்த ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் ஐ பாதிப்பு அதிகமாக இருக்கும். நாய் மற்றும் பூனையிடம் அதிக தொடர்பில் இருப்பதால் கூட இந்த பாதிப்பு உண்டாகலாம்.
பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் ஐ க்கு எந்த ஒரு மருத்துவ தலையீடும் அவசியமில்லை.
எரிச்சலூட்டும் கூறுகளை உறிஞ்சுவது
தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுடன் அதிக தொடர்பு கொள்வதால் குறிப்பாக காற்று மாசு போன்றவற்றால் கண்கள் சிவந்து மேலும் எரிச்சலடையலாம் . இந்த பாதிப்பு அடுத்த 12 மணி முதல் 36 மணி நேரத்தில் சரியாகி விடும். கண்கள் எரிச்சலடையக் காரணமாக இருக்கும் ரசாயனம் கண்களில் இருந்து நீங்குவதற்காக குறைந்தது 10 நிமிடம் தொடர்ச்சியாக நோய் தொற்றற்ற திரவம் கொண்டு கழுவ வேண்டும். ஒட்டுமொத்த கருவிழியையும் சுழற்றி கழுவ வேண்டும்.
மருத்துவ ஆலோசனை பெறுங்கள்
கண்கள் சிவந்து போவதை நீங்கள் அறிந்தவுடன், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். பக்டீரியா காரணமாக கண்கள் சிவந்து போவது அல்லது வைரஸ் மூலம் கண்கள் சிவந்து போவது ஆகியவற்றிற்கு வெவ்வேறு மருத்துவ தீர்வுகள் உண்டு.
பரிசோதனை
மருத்துவரின் பரிந்துரையின்பேரில் உங்கள் கண்கள் சிவந்து போவதற்கான பக்டீரியா தாக்குதலை கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். பால்வினை தொற்று காரணமாக கண்கள் சிவந்து போவதையும் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வாமையுடன் இணைந்த பாதிப்புகளால் கண்கள் சிவந்து போவதாக மருத்துவர்கள் தீர்மானித்தால், ஒவ்வாமை குறித்த பரிசோதனை மூலம் ஒவ்வாமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்ததில் உள்ள திசுக்களில் உண்டான அழற்சி தொடர்பாக உண்டான நோய் அல்லது கட்டியை மருத்துவர்கள் கண்டறிந்தால் அந்த பாதிப்பை உண்டாக்கும் கிருமி மற்றும் பக்டீரியாவைப் போக்க பயோப்சி முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த முறையில் கண்களில் உள்ள திசுக்களில் ஒரு சிறிய அளவை அகற்றி மைக்ரோஸ்கோப் பரிசோதனைக்காக எடுத்து பரிசோதிக்கின்றனர்.
வீட்டுத் தீர்வுகள்
உப்பு நீர் கொண்டு கண்களைக் கழுவுதல்
உப்பு கிருமிநாசினி தன்மைக் கொண்ட ஒரு பொருள். இது கண்கள் சிவந்து போவதைத் தடுக்க சிறந்த முறையில் உதவுகிறது. இந்த தீர்வை தயாரிக்க உங்களுக்கு தேவை தண்ணீர் மற்றும் உப்பு மட்டுமே. ஒரு கப் சுத்தீகரிக்கப்பட்ட நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த உப்பு கொதிக்கும் நீரில் நன்றாக கரையட்டும். அந்த நீரை ஆற விடுங்கள். பின்பு இந்த நீரை பாதிக்கப்பட்ட உங்கள் கண்களில் இரண்டு சொட்டு விட்டுக் கொள்ளுங்கள். ஒரு நாளில் பல முறை இதனை செய்து வருவதால் கண்கள் சிவந்து போவது குறையத் தொடங்கும்.
உருளைக்கிழங்கு
கண்கள் சிவந்து போவதைத் தடுக்க ஒரு மிகச் சிறந்த மற்றும் எளிய வழி உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை சிப்ஸ் , பிரெஞ்ச் பிரைஸ் என்று பலவிதமான சுவைகளில் சுவைத்து மகிழ்ந்திருக்கலாம். ஆனால் அது கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் கண்கள் சிவந்து போவதையும் தடுக்க வல்லது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் கண்களின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். 15-20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். பின்பு அதனை எடுத்து விடுங்கள். ஒரு நாளில் பல முறை இதனை முயற்சித்துக் கொண்டே இருங்கள்.
வெந்நீர் மற்றும் குளிர் ஒத்தடம்
கண்கள் சிவந்து போவதால் கண்களில் நீர் வழிவது, வீக்கம் உண்டாவது, எரிச்சல் உணர்வு தோன்றுவது, அரிப்பு போன்றவை ஏற்படும். வெதுவெதுப்பான ஒத்தடம் அல்லது குளிர் ஒத்தடம் கொடுப்பதால் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம். ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான நீரில் இந்தத் துணியை முக்கி எடுத்து உங்கள் கண்கள் மேல் ஒற்றி எடுக்கவும். 5 நிமிடங்கள் தொடர்ந்து இதனை செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை பிரீசரில் வைக்கவும். பிறகு அரை மணி நேரம் கழித்து அந்த நீரில் துணியை முக்கி எடுத்து, கண்களில் ஒற்றி எடுக்கவும். இப்படி குளிர் ஒத்தடம் கொடுப்பதால் கண்களின் எரிச்சல் குறைந்து கண்களுக்கு இதமான உணர்வு தோன்றும்.
ப்ரோ பயோடிக் பயன்பாடு
உடலில் உள்ள பக்டீரியாவைக் கொல்லும் திறன் வாய்ந்தது ப்ரோ பயோடிக். யோகர்ட் ஒரு சிறந்த ப்ரோ பயோடிக் உணவாகும். சிவந்து இருக்கும் கண்களில் யோகர்ட் தடவுவதால் நல்ல நிவாரணம் கிடைக்கிறது. இரண்டு சிறிய காட்டன் பந்துகளை எடுத்து யோகர்ட்டில் முக்கி எடுத்துக் கொள்ளவும். அந்த யோகர்ட் பந்தை உங்கள் கண்களின் மேல் வைக்கவும். 15 நிமிடம் கழித்து அதனை கண்களில் இருந்து நீக்கிவிட்டு கண்களைக் கழுவவும்.
துளசி
துளசி முழுக்க முழுக்க அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு மூலிகை ஆகும். இதற்கு வைரஸ், பக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும் வலிமை உள்ளது. ஆகவே கண்களில் உள்ள தொற்றைப் போக்குவதில் நல்ல பலன் அளிக்கிறது. துளசியை பயன்படுத்துவதற்கு முன் அதனை 15 நிமிடம் நீரில் கொதிக்க வைக்கவும். துளசி கொதிக்க வைத்த நீரை பஞ்சில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். பிறகு கண்களைக் கழுவிக் கொள்ளலாம்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் அமோடின் மற்றும் ஆலோயன் போன்ற கூறுகள் அதிக அளவில் உள்ளன. இவை கிருமி எதிர்ப்பு மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை ஆகும். உங்கள் கண்கள் மற்றும் கண் இமையைச் சுற்றி கற்றாழை ஜெல் தடவலாம்.
மஞ்சள்
மஞ்சளுக்கு குணப்படுத்தும் தன்மை உள்ளது. மற்றும் பக்டீரியா எதிர்ப்பு தன்மையும் இதற்கு உண்டு. இதனால் உங்கள் கண்கள் விரைவில் குணமாகிறது. ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இந்த நீரில் பஞ்சை நனைத்து உங்கள் கண்களில் ஒற்றி எடுக்கலாம்.
க்ரீன் டீ
கண்கள் சிவந்து போவதைத் தடுக்க ஒரு சிறந்த நிவாரணி க்ரீன் டீ. கொதிக்க வைத்த நீரில் க்ரீன் டீ பேக்கை முக்கி எடுத்து வெளியில் சற்று நேரம் ஆற விடவும். பின்பு அந்த டீ பேக்கை எடுத்து கண்களில் மேல் பகுதியில் வைக்கவும். அல்லது க்ரீன் டீயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அந்த நீரில் பஞ்சை நனைத்து கண்களில் ஒற்றி எடுக்கவும்.
வேப்பெண்ணெய்
சருமத்தில் உண்டாகும் எரிச்சலைப் போக்கும் தன்மை வேப்பெண்ணெய்க்கு உண்டு. மேலும் வேப்பெண்ணெய்யில் பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உண்டு. இரவு உறங்கச் செல்வதற்கு முன், வேப்பெண்ணெய் எடுத்து பாதிக்கப்பட்ட கண்களை சுற்றி தடவிக் கொள்ளவும்.
கூழ் வெள்ளி
கண்கள் சிவந்து போவதைப் போக்குவதற்கு சிறந்த தீர்வு பாதிக்கப்பட்ட கண்களில் கூழ் வெள்ளியை தடவுவது. கூழ் வெள்ளியைத் தடவுவதால் கண்களில் தொற்று பாதிக்கப்பட்ட அணுக்கள் அழிக்கப்படுகிறது.
மூலிகை தயாரிப்பு
சுத்தமான தேன், சோம்பு விதைகள் மற்றும் கலேண்டுலா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கண்களை சுற்றி தடவுவதால் கண்களுக்கு இதமான உணர்வு கிடைக்கிறது. மேலும் கண்களின் சிவப்பு விரைந்து மறைகிறது.
MOST READ: நவகிரகத்தை வழிபடும்போது என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?
தாய்ப்பால்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களில் உண்டாகும் சிவப்பு நிறத்தைப் போக்க பல தலைமுறையாக பின்பற்றி வரும் ஒரு தீர்வு தாய்ப்பால். தாய்பாலில் கிருமி எதிர்ப்பு மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இவை தொற்றை சிறந்த முறையில் போக்குவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு தாய்ப்பாலை கண்களில் விடுவதால் கண் சிவப்பு எளிதில் மறைகிறது.
கண்கள் சிவந்து போவதற்கான அறிகுறிகள் மற்றும் அதன் வகைகள் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொண்டோம். அப்படி சிவந்து போகும் கண்களை எளிதில் குணப்படுத்தும் முறைகளையும் தெரிந்து கொண்டோம். இனி, இந்த தீர்வுகளை முயற்சித்து கண்கள் சிவந்திருந்தால் உடனடியாக அதனை குணமாக்கலாம்.