Latest Updates
-
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
புரோஸ்டேட் புற்று நோயின் பக்க விளைவுகளை குறைப்பது எது தெரியுமா?
யோகாவின் அற்புதங்கள் பற்றி இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெளி நாட்டவர்கள் இதை செய்யவும் தொடங்கியாயிற்று.
உடலில் ஏற்படும் நோய்களை விரட்டியடிக்கும் சக்தி யோகாவிற்கு உண்டு என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் புற்று நோயின் பக்கவிளைவுகளை யோகா குறைக்கும் என்பதை அறிவீர்களா?

புரோஸ்டேட் புற்று நோய் ஆண்களுக்கான வரும் நோய். இது கல்லீரலுக்கு அடுத்ததாக ஆண்களை அதிகம் தாக்கும் புற்று நோயாகும். இந்த புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் சக்தி வாய்ந்த சிகிச்சைகளால், நிறைய பக்க விளைவுகள் உண்டாகும்.
சிறு நீர் கழிக்க கடினமாக இருக்கும், மன அழுத்தம், தாங்க முடியாத உடல் வலி, விறைப்புத் தன்மை என நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
அவ்வாறு பாதிக்கப்பட்ட புற்று நோயாளிகள் யோகா செய்வதினால், பல்வேறு உபாதைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது என்று ஆய்வு கூறுகின்றது.
2013- 2014 வரை நடத்தப்பட்ட ஆய்வில், ப்ரோஸ்டேட் புற்று நோயாளிகளுக்கு வாரம் இருமுறை 75 நிமிடங்களுக்கு யோகா கற்றுத் தரப்பட்டது. இதில் உடல் மற்றும் மனம் சம்பந்தமான முன்னேற்றம் எல்லா நோயாளிகளிடமும் பார்க்க முடிந்தது என்று அமெரிக்காவிலுள்ள அப்ராம்ஸன் புற்று நோய் மையத்தின் யோகா பயிற்சியாளர் டாலி மஜார் கூறியுள்ளார்.
ஒவ்வொரு யோகா வகுப்பு முடிந்ததும் அடுத்தவகுப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக நோயாளிகள் கூறினர். முக்கிய பிரச்சனையான சிறு நீர் தடையில்லாமல் கழிக்க முடிந்தது. விறைப்புத்தன்மையும் குறைந்தது.
உடல் பலம்பெற்று, புத்துணர்வு பெற்றதாக கூறி வந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து தசைகளும் வலுப்பெற்றது என்று இந்திய வம்சாவளியான நேஹா என்ற மருத்துவர் கூறுகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


