Just In
- 31 min ago குருவின் அருளால் இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...
- 2 hrs ago 4 கத்திரிக்காயை வெச்சு இப்படியொரு சட்னி செய்யுங்க.. கத்திரிக்காய் பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
- 4 hrs ago Today Rasi Palan 22 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எடுக்க மிகவும் சாதகமான நாள்...
- 10 hrs ago கண்களுக்குக் கீழே கருவளையம் உள்ளதா? அது உங்கள் அழகைக் கெடுக்கிறதா?
Don't Miss
- News முரல் மீன், நண்டு, இறால்.. கடல்லயே மீன் இல்லையா? சென்னை காசிமேடு கரைக்கு வராமலேயே "மறைந்த" வஞ்சிரம்
- Movies மகளா, கௌரவமா?.. திணறிய ரஜினி?.. சி.எம் வீட்டுக்கு போகச்சொன்னாரா குருநாதர்?.. பிரபலம் இப்படி சொல்றாரே?
- Sports RR vs MI : 12 ஆண்டுகள்.. ராஜஸ்தான் மண்ணில் அடிவாங்கும் மும்பை.. மாற்றிக்காட்டுவாரா ஹர்திக் பாண்டியா?
- Finance உங்கள் டூ வீலருக்கான சிறந்த இன்சூரன்ஸ் பாலிஸி, பிரீமியம் பெறுவது எப்படி?
- Automobiles பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
- Technology ஏப்.30 வரை கெடு.. PAN கார்டுல உங்க பெயர், DOB.. இதுகூட மேட்ச் ஆகணும்.. இல்லனா FUND-க்கு END.. திடீர் உத்தரவு!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஓயாமல் இருமல் வருகிறதா? வீட்டில் மிக எளிதாக இந்த மருந்தை தயார் செய்து குடிங்க!!
இருமல் சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்று அல்லது அலர்ஜியினால் உண்டாகும்.
அதனை கவனிக்காமல் விடும்போது நுரையீரலுக்கும் பரவி சளி அடைத்து இதனால் மூச்சிரைப்பு, சுவாச பாதிப்பு ஆகியவைகள் உண்டாகும்.
அந்த சமயத்தில் எதிர்ப்பை காட்டும் விதமாக அலர்ஜியை ஏற்படுத்தும் ஒருவகை ரத்த செல்கள் அலர்ஜியை உண்டாக்குகிறது.
குறிப்பாக குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் தொற்று ஏற்பட்டால் எளிதில் குணமடையாது. மருந்துக்கள் சாப்பிட்டாலும் குணமாகாமல் இருக்கும்.
உணவிலும் கவனம் :
ஒரு விஷயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வெறும் மருந்துக்கள் தவிர உணவிலும் நீங்கள் கவனம் எடுத்துக் கொள்வது முக்கியம். சுடு நீரை குடிப்பது, மிளகு, பூண்டு, மஞ்சள்ஆகியவற்றை கட்டாயம் குளிர்காலத்தில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
வீட்டிலேயே தயாரிக்கப்படும் இருமல் மருந்து :
அதுதவிர இங்கே சொல்லப்போகும் இந்த மருந்து நிஜமாகவே உங்கள் இருமலை கட்டுப்படுத்தும் .
வெறும் உண்ணும் உணவுப் பொருள்களால் செய்யப்படும் இந்த மருந்து உங்களுக்கு பக்க விளைவுகளை தராது. குழந்தைகளுக்கும் தரலாம்.
தேன், வாழைப்பழம், மற்றும் நீர் கலந்து செய்யப்படும் இந்த மருந்து உங்கள் நுரையீரலுக்கு மட்டுமின்றி, வயிற்றிற்கும் நன்மை தருகிறது.
இருமல் மருந்து செய்ய தேவையானவை :
சுடு நீர் - 400 மி.லி
வாழைப் பழம் - 2 பெரியது
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை :
நன்றாக பழுத்த இரண்டு வாழைப் பழங்களை மசித்துக் கொள்ளுங்கள். மர ஸ்பூன் அல்லது கரண்டி கொண்டு மசிப்பது நல்லது. இதனால் பழம் பிரவுனாகாமல் தடுக்க முடியும். பின் அதில் நீரை ஊற்றி மூடிவைத்து அரை மணி நேரம் அப்படியே விடுங்கள்.
தயாரிக்கும் முறை :
நீர் குளிர்ந்த பின் தேனை அதில் ஊற்றவும். நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் இந்த கலவையை வடிகட்டி குடிக்கலாம். அப்படியே குடித்தாலும் நல்லதுதான்.
எப்படி குடிக்க வேண்டும் :
இந்த கலவையை தினமும் 4 வேளைகளில் 100 மி.லி.அளவில்(1 கப் ) குடிக்க வேண்டும். இடைவெளி விட்டு 4 முறை குடியுங்கள். வெதுவெதுப்பாக்கி குடிக்கவும்.
தினமும் புதிதாக தயார் செய்து குடிக்க வேண்டும். குடிக்கும்போதே உங்களுக்கு பலன் தெரியும். குடித்து பாருங்கள்.