Just In
- 2 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 7 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 9 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 10 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்கும் இந்த மூலிகையை பற்றி தெரியுமா.?
மூலிகை என்றாலே மலை காடுகளில் மட்டுமே கிடைக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், நம் வீட்டில் இருக்க கூடிய பலவகை உணவு பொருட்கள் மூலிகை தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. இருப்பினும் ஒரு சில அரிய வகை மூலிகைகள் மலை அல்லது காடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. ஏனெனில், இவை அந்த சூழலில் மட்டுமே வளர கூடிய தன்மை வாய்ந்தவையாக இருக்க கூடும்.
PC: Krzysztof Ziarnek, Kenraiz
பல வகையான மூலிகைகள் இந்த் பூமியில் உள்ளன. அவற்றில் நமக்கு தெரிந்தவை மிக குறைவு. இதில் நமக்கு தெரியாத வகையில் தான் இந்த மூலிகையும் சேரும். இந்த மூலிகை முக்கியமாக ஆண்களின் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் தீர்வை தருகிறதாம். இந்த புதுவித மூலிகை என்னனு தெரிஞ்சிக்கணுமா..? இந்த பதிவ படிச்சி தெரிஞ்சிக்கோங்க...
சுவைமிக்க மூலிகை..!
பொதுவாக மூலிகை என்றால் பலருக்கும் கசப்பு தன்மை தான் ஞாபகத்துக்கு வரும். கசப்பு என்றதும் தலை தெறிக்க ஓடுபவர்களும் உண்டு. ஆனால், இந்த மூலிகை அப்படிப்பட்டது இல்லை. நீங்கள் ஒரு முறை சாப்பிட்டதும் உங்களுக்கு இதன் ருசி நாக்கிலே ஒட்டி கொள்ளுமாம். அந்த அளவிற்கு இதன் கார சுவை இருக்குமாம்.
சித்த மருத்துவம்..!
சித்த மருத்துவத்தில் இந்த மூலிகை அதிக பிரசித்தி பெற்றதாம். இதனை வேறு சில மூலிகையோடு சேர்த்து சாப்பிடுவதால் இதன் பலன் இரட்டிப்பாகும். குறிப்பாக இந்த கலவை மூலிகை நரம்பு தளர்ச்சி, கப நோய்கள் போனற்வற்றை குணப்படுத்த கூடும் என சித்த மருத்துவம் கூறுகிறது.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
இந்த மூலிகை எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு பெரிதும் உதவும். உடலில் ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய்கள் இல்லாமல் நீண்ட காலம் நம்மை வாழ வைக்கும் என ஆய்வுகள் சொல்கிறது.
என்னென்ன பொருட்கள்..?
இதன் பலனை இரட்டிப்பாக அடைய மிளகு, கிராம்பு, செஞ்சந்தனம், குங்குமப்பூ, சுக்கு, சாதிக்காய், ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கும் மருந்தை சாப்பிடுவதால் கிடைத்து விடுமாம். மேலும், இந்த மூலிகையோடு சுக்கு சிற்றரத்தை, பேரீச்சை, தேன் மற்றும் அதிமதுரம் சேர்த்து தயாரிக்கும் மருந்து பொருளை சாப்பிடுவதால் உடல் நோய்கள் பறந்து போய் விடுமாம்.
MOST READ: எச்சரிக்கை..! இதையெல்லாம் செய்தால், சீக்கிரமாகவே உங்களுக்கு வயதாகி விடுமாம்..
ஆண்களின் பிரச்சினை...
இன்று பல ஆண்களுக்கு இருக்க கூடிய விந்தணு குறைபாட்டை குணப்படுத்த கூடிய தன்மை இந்த மூலிகைக்கு உள்ளது இதனை பற்றிய ஆய்வுகள் சொல்கிறது. மேலும், டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனின் அளவை அதிகரிக்கவும் இது பயன்படுகிறதாம்.
மன நோய்களுக்கு
இந்த மூலிகை மன சோர்வு, மூளையின் செயல்திறனை அதிகரித்தல், புத்தி கூர்மை போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகிறது. அத்துடன் பல் வலி, பல் சொத்தை ஆகிய பிரச்சினைகளுக்கும் இந்த மூலிகை அருமையான தீர்வை தரும்.
இப்படி பயன்படுத்துங்க..!
PC: Krzysztof Ziarnek, Kenraiz
இந்த மருந்தை நாம் வீட்டில் இருக்கும் சில மூலிகை தன்மை வாய்ந்த பொருட்களோடு சேர்த்து உண்டால் பலவித நன்மை கிட்டும். இதற்கு தேவையானவை..
அக்கரகாரம்
கடுக்காய்
மிளகு
தயாரிப்பு முறை...
இந்த மூலிகையை தயாரிக்க முதலில் மிளகு, அக்கரகாரம், கடுக்காய் ஆகியவற்றை சிறிது மிதமான சூட்டில் வறுத்து கொள்ள வேண்டும். பிறகு 1/4 டீஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிடலாம். இவை இரும்பல், வாந்தி, நரம்பு மண்டலம் வலுபெறவும் உதவும்.
MOST READ: ஜப்பானியர்கள் இப்படி தொப்பையே இல்லாமல் ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன..?
இப்படியும் ஒரு மூலிகையா..?
இப்படிப்பட்ட பலவகையான நன்மைகளை கொண்ட மூலிகையின் பெயரும் சற்று வித்தியாசமானது தான். இதனை அக்கிராகாரம் அல்லது அக்கராகாரம் என்கிற பெயரில் அழைப்பார்கள். இதன் தன்மை எச்சில் ஊற வைக்கும் அளவிற்கு காரமான சுவையை கொண்டிருக்கும்.
பூக்கள் நிறைந்த மூலிகை..!
இந்த மூலிகையை கண்டுபிடிப்பது மிக எளிது. இதன் பூக்களை வைத்தே இதனை அடையாளம் கண்டு கொள்ளலாம். குறிப்பாக இதன் மஞ்சள் நிற பூக்கள் தான் இந்த மூலிகையை கண்டறிய உதவும். மேலும் இது பார்ப்பதற்கு சிறிய செடியாக தான் இருக்கும்.எங்கு கிடைக்கும்..?
கப வகை நோய்களை எளிதாக குணப்படுத்த கூடிய இந்த அரிய மூலிகை சித்த மருந்துகள் விற்கும் கடைகளில் கிடைக்கும். அல்லது ஆயுர்வேத மூலிகைகளை விற்கும் இடங்களிலும் இது கிடைக்கும். இப்படிப்பட்ட பலவித அற்புத குணங்கள் கொண்ட மூலிகைகள் நம் நாட்டில் அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.