Latest Updates
-
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா?
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் என்னாகும்? ஊட்டசத்து நிபுணரின் அறிவுரை!!
சீரக நீரை குடிப்பதால் பலவித நன்மைகளை நமது உடலுக்கு தருகிறது. நோய்கள் வராமல் காக்கிறது. அவ்வாறான நீங்கள் அறியாத நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம்.
சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை உணர்த்துவதால் அதனைப் பற்றி புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. நீரில் சில சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வையுங்கள்.
இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உண்டாகும் பலன்களைப் பற்றி கூறுகிறார் பெங்களூரில் இருக்கும் அஞ்சு என்ற ஊட்டச்சத்து நிபுணர்.
சீரகம் பொதுவாக வயிறு உப்புசத்தை சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிறு சம்பந்த பாதிப்பை குணப்படுத்தும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனை குடிப்பதால் இன்னும் பல அற்புத நன்மைகள் உண்டாகும். எவையென அவற்றை கண்போம்.

பால் சுரக்க உதவும் :
சில தாய்மார்களுக்கு குழ்னதை பிறந்த சில வாரங்களிலேயே தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அவர்கள் தொடர்ச்சியாக சீரக நீரை குடித்து வந்தால் பால் சுரப்பது நீடிக்கும். அதிகமாகும்.

சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் :
தினமும் வெறும் வயிற்றில் சர்கரை வியாதி உள்ளவர்கள் குடித்து வந்தால் சர்க்கரையில் அளவு ரத்தத்தில் கட்டுக்குள் வரும்.

சுவாசப்பாதையை சீராக்கும் :
குளிர்காலத்தில் சுவாசப்பாதையில் மற்றும் நுரையீரலில் உண்டாகும் தொற்றை எதிர்த்து போராடும். சுவாசத்தை சீராக்கும்.

கல்லீரல் நச்சை வெளியேற்ற :
கல்லீரலில் குடிவும் அதிகப்படியான நச்சை வெளியேற்றும். இதனால் கல்லீரலில் வேலை குறைவதோடு அதன் ஆரோக்கியமும் அதிகமாகும்.

மாதவிடாய் மற்றும் கர்ப்பிணிகளின் ஃபால்ஸ் வலி :
மாதவிடாயின் போது உண்டாகும் வலி மற்றும் கர்ப்ப காலத்தின் போது உண்டாகும் ஃபால்ஸ் வலியை போக்க சீரக நீர் உகந்தது.

முதுமையை தடுக்கும் :
சீரகத்தில் அதிகமாக விட்டமின் ஈ இருப்பதால் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கிறது. இது செல்ல்லிறப்பை தடுத்து முதுமையை தடுக்கிறது. முக்கியமாய் நரை முடியை தடுக்கும். நல்ல சருமத்தை தரும். சுருக்களின்றி இளமையான சருமத்தை தரும்.



Click it and Unblock the Notifications