Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
விஷ முறிவாகப் பயன்படும் நாட்டு மருந்து வசம்பு
இந்தியாவிலும் எகிப்திலும் 2500 ஆண்டுகளுக்கு மேலாக வசம்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்பட்டது. செயல்தூண்டுவியாகவும், ஜீரணத்தை சரி செய்து பசியினை தூண்டவும் பயன்படுத்தப்பட்டது. சீனாவில் காணப்படும் Acorus gramineus எனும் தாவரம் வசம்பு போன்றே பயன்படுத்தப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
எளிதில் ஆவியாகும் எண்ணெய் அசரோன், சபோனின்கள், அகோரின் மற்றும் பிசின் பொருள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அசரோன் மற்றும் குளுக்கோசைடான் அகோரின் தாவரத்தின் முக்கிய செயல் ஊக்கப் பொருள்களாகும்.
வயிற்று வலிக்கு மருந்து
வசம்பின் தரையடித்தண்டு மருந்தாகப் பயன்படுகிறது. உலர்த்தப்பட்ட தரையடித்தண்டு மணம் கொண்டது. செயல்தூண்டுவி. வடிநீராக உட்கொண்டால் உடலை வலுவாக்க உதவுகிறது. வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கினை சரி செய்யும்.
வயிற்று உப்புசம், பசியின்மை, ஆகியவற்றினை குணப்படுத்தும். அதிமதுரத்துடன் சேர்த்து குழந்தைகளின் இருமல், காய்ச்சல், வயிற்றுவலி முதலியவற்றிர்கு மருந்தாக கொடுக்கலாம்.
கிராமத்தில் கைவைத்தியம்
கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு கைவைத்தியமாக வசம்பினை சுட்டு தொப்புளில் தடவி, வயிற்று வலியினைப் போக்குவதை பலகாலமாக கடைபிடித்து வருகின்றனர். அடிவயிற்றில் வாயு இருந்து வலி ஏற்படும் போது வசம்பின் சாம்பல் ஆமணக்கு அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து அடிவயிற்றில் பூசினால் நீங்கும்.
குறைந்த அளவில் ஜீரணத்தினை தூண்டி நரம்புகளுக்கு வலிமை தருகிறது. வயிற்றின் அமிலத்தன்மையினை நீக்கும். அதிக அளவில் அமிலம் சுரக்க உதவுகிறது.
நச்சு முறிவு மருந்து
வசம்பு தாவர மருந்துகளின் தனிப்பெரும் தன்மையாக கருதப்படுகிறது. நேர் எதிரான நோய்களுக்கு ஒரே தாவரம் மருந்தாக அமைகிறது. பல நச்சுக்களுக்கு முறிவு மருந்தாக அமைவதால் தொற்றுநோய் பரவலின் போது தரையடித்தண்டு உட்கொள்ளப்படுகிறது. முந்திரிக்கொட்டை ஓட்டின் எண்ணெயுடன் கலந்து முடக்கு வாதத்திற்கு மேல் பூச்சாகிறது.
தொண்டை கரகரப்பு, மற்றும் இருமலுக்கு தரையடித்தண்டு வாயில் போட்டு மெல்லப்படுகிறது. உமில்நீர் சுரப்பினை அதிகரித்து சுகம் தரும். அதிக அளவில் உட்கொண்டால் வாந்தி ஏற்படும். வசம்பு நல்லதொரு பூச்சிக்கொல்லி மருந்து. கம்பளித்துணிகளில் பூச்சி வராமல் தடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications