உடலை வலுப்படுத்தும் உதர்கொடி

By Mayura Akilan

Blackcreeper
பயனற்ற தாவரம் எனக் கருதப்படுபவை எல்லாம் அதிசயத்தக்க மருத்துவப் பயன்களை கொண்டுள்ளன. இந்தியா முழுவதும் பெரும்பாலும் வேலிகளில் காணப்படும் உதர்கொடி தாவரத்தின் இலைகள், தண்டு,வேர் போன்றவை மருத்துவப் பயன் கொண்டுள்ளது. முழுத் தாவரமும் பல விதமான நோய்களை தீர்க்க வல்லது. இதனால் இன்றைக்கும் இந்த தாவரம் ஆதிவாசிகளால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவ நூலான பைசாஜ்ய ரத்னதவளி, ஸாரங்கதாரா ஆகியவற்றில் உதர்கொடி முக்கிய மூலிகையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

குர்சிடின், லுபியோல்,டோட்ரிஅகோன், டானிக்அமிலம் போன்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

எலும்புருக்கி நோய்

இலைகள் மற்றும் தண்டுப்பகுதிகளின் கசாயம் காய்ச்சல் மற்றும் தோலின் மீது ஏற்படும் கொப்புளங்களை குணப்படுத்தும். வேர்ப்பகுதி சிறந்த மருத்துவ பயன் கொண்டது. இது நன்னாரி வேர்க்கு இணையான மருத்துவப் பயன் கொண்டது. அதற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.

பல் ஈறுகளில் ரத்தக்கசிவு, இருமல், மனபயம், வயிற்றுப்போக்கு, மாலைக்கண், பூச்சிக்கடியினால் ஏற்படும் வலி, எலும்புருக்கி நோய் ஆகியவற்றினை குணப்படுத்த இன்றைக்கும் மலைப்பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசிகள் உதர்கொடியைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இது தோல் வியாதிகளையும், மூட்டுவலியையும் குணப்படுத்துகிறது. பசியின்மை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை போக்குகிறது.

உடலை வலுவேற்றும்

வயிற்றுப் போக்கு, காய்ச்சல், வயிற்று உப்புசம் ஆகியவற்றினை சரி செய்யும் திறன் கொண்டது. உடல்பலம் இழப்பினைச் சரி செய்ய உதவுகிறது. உடலை வலுவேற்றுவதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவை சரிபடுத்துகிறது. வியர்வை மற்றும் சிறுநீர் போக்கினைத் தூண்ட வல்லது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, September 7, 2011, 11:35 [IST]
Desktop Bottom Promotion