விஷப் பருவை குணப்படுத்தும் திருநீற்றுப் பச்சிலை

By Mayura Akilan

Sweet Basil
மூலிகைகளின் அரசன் என்று அழைக்கப்படும் திருநீற்றுப்பச்சிலை தாவரம் துளசியைப் போல தெய்வீக தாவரம் என்று அழைக்கப்படுகிறத. இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் உள்ள நோய்களைப் போக்கும் அருமருந்தாக பயன்படுகின்றன.

மணம் மிக்க தாவரமான திருநீற்றுப்பச்சிலையின் முழுத் தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. சாதாரணமாக சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இந்த மூலிகைக் தாவரம், வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும் ஜுரத்தை குறைக்கும் கிருமி நாசினியாகும்.

தாது உப்புக்களும், உயிர்சத்துக்களும்

திருநீற்றுப்பச்சிலையில் பீட்டாகரோட்டீன் மற்றும் ஏ உயிர்ச்சத்தும் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளை கொண்டுள்ள இந்த மூலிகையில் பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் காணப்படுகின்றன. இது ஆண்டிஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் கிருமிகளை கொல்கிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

இருமல் மருந்தாகும் இலைகள்

இதன் இலைகள் மணம் மிக்கவை. கக்குவான் இருமலுக்குப் பயன்படும். சாற்றினை மூக்கினுள் தாரையாக செலுத்தும் போது இருமல் கட்டுப்படுகிறது. தேனுடன் கலந்து சூடக்கப்பட்ட சாறு சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும். இது படர்தாமரையை குணப்படுத்தும்.

நஞ்சுக்கு மாற்று மருந்து

அஜீரணத்தைப் போக்கும். பிசுபிசுப்பு தன்மையுடைய இதன் இலைகள் சிறுநீர்ப்பை அலற்சி, மலச்சிக்கல், உள்மூலம், சிறுநீரகக் கோளாறு, மேகவெட்டை, கோனேரியா போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலையின் சாறானது வயிற்றுப்போக்கு, வலி, புண்கள், போன்றவற்றிர்குப் பயன்படும். பற்றுப்புண்கள், காயங்களுக்கு தடவ அவை எளிதில் குணமடையும்.

அஜீரணம் போக்கும்

சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம்.

இந்த தாவரத்தின் மலரானது அஜீரணத்தைப் போக்கும் மூத்திரக் கடுப்பை நீக்கும் வேரானது காய்ச்சலைத் தணிக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும்.

விஷப்பரு குணமடையும்

முகத்தில் தோன்றும் விஷத் தன்மை வாய்ந்த பருக்களுக்கு திருநீற்றுப்பச்சிலை அருமருந்து. திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு வைத்து அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவி வரை பரு காய்ந்து கொட்டிவிடும். தோல் மென்மையடையும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, December 16, 2011, 13:03 [IST]
Desktop Bottom Promotion