ரத்த அழுத்தம் போக்கும் சடமாஞ்சி

By Mayura Akilan

Indian Nard
இமயமலையில் 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் செங்குத்தாக வளரும் பல பருவக்குறுஞ்செடி சடமாஞ்சி. உதிர்ந்த இலைகளின் நார்ப்பகுதி தலைமேலான வேர்ப்பகுதியினை மூடி கட்டையாக காணப்படும். பழங்காலத் தொட்டே இந்திய மருத்துவத்தில் சடாமாஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஐரோப்பியர்கள் நடத்திய ஆய்வுகள் இத்தாவரத்தினை Valerian க்கு இணையாக கருதச் செய்தது. இதன் தரையடித்தண்டு மற்றும் வேர் மருத்துவப் பயன் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் பலவகையான வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. ஜடாமன்சிக் அமிலம், அக்டிடைன், கரோட்டின், ஸ்லைரோஜாடாமால், வெலிரனால், விரோலின், நார்டால், நார்டோ ஸ்டாக்னால் போன்றவை காணப்படுகின்றன.

நறுமணம் கொண்டவை

தரையடித்தண்டும் வேரும் முக்கிய மருத்துவப்பயன் கொண்டவை. கிருமிகளுக்கு எதிரானது. தசை சுரிவுகளைப் போக்கும். நறுமணங் கொண்டது. கசப்பானது. சிறுநீர்ப் போக்கு தூண்டுவது, மாதவிடாய் ஊக்குவிக்கும். மலமிளக்கி, வயிற்று நோய் நீக்கும். வலுவேற்றி, வடிசாறு கை, கால் வலி, வலிப்பு நோய், மனநோய், இதயதுடிப்பு, ஆகியவற்றிர்க்கு சிறந்த மருந்தாகும். பல ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் பங்கு பெறுகிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

தரையடித்தண்டில் இருந்து பெறப்படும் Spikenard எண்ணெய் ரத்த அழுத்தத்தை குறைக்கும். மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரியும். பசி தூண்டி ஜீரணத்தை அதிகரிக்கும். தலைமுடியின் வளர்ச்சியினையும், கருமையினையும் அதிகரிக்க வல்லது. மேலும் தொழுநோய், மஞ்சள் காமாலை, போக்கும். தரையடித்தண்டின் சாராயக்கரைசல் குடல்வலி மற்றும் வயிற்று உப்புசத்திற்கு மருந்தாகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, September 17, 2011, 14:11 [IST]
Desktop Bottom Promotion