Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
நரம்பு மண்டலத்தை சீராக்கும் எட்டி மரம்

எட்டி மரத்தின் இலைகள், விதைகள், பட்டை, வேர்கட்டை, ஆகிய பகுதிகள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. எட்டி விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எட்டி மரத்தின் வடக்குப் பக்கம் சென்ற வேர் மாந்திரீகம் செய்யப் பயன்படும். நக்சுவாமிகா என்னும் விஷ முறிவு மருந்தாக செயல்படுகிறது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
நக்சுவாமிகாவின் செயல்பாடுகளுக்கு அடிப்படையாக இருப்பவை மூன்று ஆல்கலாய்டுகள்: சிட்ரக்னைன், புருனைன், வாமிசைன். இவற்றுள் முதல் ஆல்கலாய்டுதான் பெரும் பங்கு வகிக்கிறது.
முகவாதம் போக்கும்
இந்திய மருத்துவத்தில் அபின், மிளகுடன் சம அளவில் மாத்திரையாக செய்யப்பட்டு வெற்றிலைச் சாறுடன் நரம்பு மண்டல நோய்களுக்கு மருந்தாகிறது. சீன மருத்துவத்தில் விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்டக் களிம்பு, முக முடக்குவாத நோயான, பெல்முடக்கு வாதத்தினை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
இது வாய்வை அகற்றும், வெப்பத்தை உண்டாக்கும். நரம்பு மண்டலத்தை இயக்கும் வயிற்றுவலி வாந்தி, குடல் எரிச்சல், வயிற்றுவலி , போன்றவற்றை குணப்படுத்தும். தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணறல் போன்றவற்றைக் குணப் படுத்தும்.
விஷ முறிவாகும் எட்டி விதை
இதன் இலைகளை அரைத்து நாள்பட்ட உரியும் காயங்கள் மற்றும் புண்களுக்கு பற்று போடப்படுகிறது. விதை மருந்து நக்சுவாமிகா எனப்படுகிறது. இது பலவிதமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப்போக்கு, சீதபேதி, வலிப்பு நோய், காய்ச்சல், நீரிழிவு, காலரா, கால், கை, வலிப்பு மூட்டுவலி, நரம்பு மண்டல நோய்கள், நாய்க்கடி, தூக்கமின்மை, முடக்குவாதம், ஆண்மலடு, வாந்தி, ஆல்கஹால் நோய், அபின்நச்சு, ஆகியவற்றில் மிகக்குறைந்த அளவில் மருந்தாகப் பயன்படுகிறது.
இது மத்திய நரம்பு மண்டலத்தின் மீது செயல்படுகிறது. நாடி துடிப்பினை சரிபடுத்தி ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது. இதய செயல் இழப்பின்போது இரத்த ஓட்டத்தினை சீர் செய்யும் வலுவேற்றியாக பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் அதிர்ச்சி மற்றும் இதய செயலிழப்புகளில் கூடுதல் அளவு மருந்தாக ஊசி மூலம் செலுத்தப்பட்டு மருத்துவம் செய்யப்படுகிறது. தண்டுவடத்தின் நரம்பு மையங்களை தூண்டும் தன்மை பெற்றுள்ளதால் வலிப்பு ஏற்படுகிறது. புருசைன் ஆல்கலாய்டு வலிப்பு அசைவுகளை தோற்றுவிப்பதில்லை. இது அரிப்பு மற்றும் புறச்செவியின் வீக்கத்தின் வலி போக்கும். கைகால் வலியை குணப்படுத்த உதவுகிறது.
வெப்பக்கொப்புளம் குணமாகும்
எட்டி இலையை தவறாக உட்கொண்டவர்களுக்கு விஷ முறிவு மருந்தான நக்சுவாமிகா கொடுக்கப்படுகிறது. இதன் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளிக்க நரம்பு வலி தீரும். மரப்பட்டையை நெய்யில் காய்ச்சித் தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும். இளந்துளிரை அரைத்து வெண்ணெயில் கலந்து பூச கட்டிகள் கரையும் வெப்பக்கொப்புளம் குணமாகும்.
வேர் மிகவும் கசப்பானது. விட்டு விட்டு வரும் காய்ச்சல் மற்றும் விஷமுள்ள பூச்சி கடிக்கு மருந்தாகும். வேரின் கசாயம் அல்லது சாறு வலுவேற்றும் மருந்தாகவும் காய்ச்சல் தீர்க்கவும் பயன்படுகிறது. வேரானது பட்டை எலுமிச்சை சாறுடன் அரைக்கப்பட்டு மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இவை காலரா நோயினைக் குணப்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications