Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
தாது விருத்தி உண்டாக்கும் அமுக்கிராங் கிழங்கு

இதை அசுவகெந்திக்கிழங்கு, அமுக்கனாங் கிழங்கு, அமுக்குரவு, வராக கன்னி, இடிச்செவி என்று இன்னும் பல பெயரிட்டுக் கூறுவர். இது துவர்ப்புச்சுவையுடையது.
உடல்பருமன் போக்கும்
அமுக்கிராங்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைக்க வேண்டும். அவ்வாறு வேக வைக்க நீருக்குப் பதில் பசும்பாலை ஊற்றி சுண்டும் வரை சிறு தீயில் வேக வைத்து பின் அக்கிழங்கை சுத்தமான இடத்தில் வைத்து வெயிலில் நன்கு உலரும் படி செய்யவேண்டும். பின் இக்கிழங்கை தூளாக்கி சலித்து சூரணமாக்கி நோய் பாதிப்பு சமயங்களில் உட்கொள்ள வேண்டும்.
உடல் பருமன் உள்ளவர்கள் பல வித நோய்களால் பாதிக்கப்படுவது இயற்கை. அவர்கள் அமுக்கிராங்கிழங்கு சூரணத்தை வெந்நீருடன் சிறிது உட்கொண்டால் நாளடைவில் உடல் பருமன் குறையும். 48 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் பலன் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுபவர்கள் இந்த சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிடவேண்டும். இதனால் நரம்புத்தளர்ச்சி நீங்குவதோடு மேனி பளபளப்பாகும். உடலில் வீக்கங்கள் தோன்றி வலியால் அவதிப்படுபவர்கள், வாயுக்கோளாறால் இடுப்பு பிடிப்பினால் பாதிக்கப்படுபவர்கள் இந்த சூரணத்துடன் தேனைக் குழைத்துச் சாப்பிட குணமாகும். இதனால் சளித்தொல்லையும் நீங்கும்.
தாது விருத்தி உண்டாக்கும்
அமுக்கராங்கிழங்கு புண்கள், மேக சம்பந்தமான கட்டிகள், கண்டமாலை, கிராந்தி புண்கள் போன்றவற்றை ஆற்றும் தன்மையுடையது. இக்கிழங்கைக் கொண்டு, அமுக்கராச் சூரணம், அஸ்வகந்தி லேகியம், அமுக்கரா மாத்திரை, போன்ற மருந்துகளை தயாரிக்கின்றனர். இம் மருந்துகள் உடல் உஷ்ணத்தை தணிக்கவும், தாது விருத்திக்கும், ஆண்மை தன்மை அதிகரிப்பிற்கும் பயன்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications