Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
தாது விருத்தி உண்டாக்கும் அமுக்கிராங் கிழங்கு

இதை அசுவகெந்திக்கிழங்கு, அமுக்கனாங் கிழங்கு, அமுக்குரவு, வராக கன்னி, இடிச்செவி என்று இன்னும் பல பெயரிட்டுக் கூறுவர். இது துவர்ப்புச்சுவையுடையது.
உடல்பருமன் போக்கும்
அமுக்கிராங்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைக்க வேண்டும். அவ்வாறு வேக வைக்க நீருக்குப் பதில் பசும்பாலை ஊற்றி சுண்டும் வரை சிறு தீயில் வேக வைத்து பின் அக்கிழங்கை சுத்தமான இடத்தில் வைத்து வெயிலில் நன்கு உலரும் படி செய்யவேண்டும். பின் இக்கிழங்கை தூளாக்கி சலித்து சூரணமாக்கி நோய் பாதிப்பு சமயங்களில் உட்கொள்ள வேண்டும்.
உடல் பருமன் உள்ளவர்கள் பல வித நோய்களால் பாதிக்கப்படுவது இயற்கை. அவர்கள் அமுக்கிராங்கிழங்கு சூரணத்தை வெந்நீருடன் சிறிது உட்கொண்டால் நாளடைவில் உடல் பருமன் குறையும். 48 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் பலன் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுபவர்கள் இந்த சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிடவேண்டும். இதனால் நரம்புத்தளர்ச்சி நீங்குவதோடு மேனி பளபளப்பாகும். உடலில் வீக்கங்கள் தோன்றி வலியால் அவதிப்படுபவர்கள், வாயுக்கோளாறால் இடுப்பு பிடிப்பினால் பாதிக்கப்படுபவர்கள் இந்த சூரணத்துடன் தேனைக் குழைத்துச் சாப்பிட குணமாகும். இதனால் சளித்தொல்லையும் நீங்கும்.
தாது விருத்தி உண்டாக்கும்
அமுக்கராங்கிழங்கு புண்கள், மேக சம்பந்தமான கட்டிகள், கண்டமாலை, கிராந்தி புண்கள் போன்றவற்றை ஆற்றும் தன்மையுடையது. இக்கிழங்கைக் கொண்டு, அமுக்கராச் சூரணம், அஸ்வகந்தி லேகியம், அமுக்கரா மாத்திரை, போன்ற மருந்துகளை தயாரிக்கின்றனர். இம் மருந்துகள் உடல் உஷ்ணத்தை தணிக்கவும், தாது விருத்திக்கும், ஆண்மை தன்மை அதிகரிப்பிற்கும் பயன்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











