Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
பற்களைப் பாதுகாக்கும் பிர்மதண்டு சாம்பல் பொடி

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
பெர்பெரைன், கிரிப்டோபைன், ஐசோகுயினோலைன் அல்கலாய்டுகள், மெக்ஸிகேனிக் அமிலம் மற்றும் மெக்ஸிகேனால் போன்ற வேதிப்பொருள் பிர்மதண்டு தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
இருமல் போக்கும்
மலர்களுக்கு இருமல் போக்கும் சக்தி உள்ளது. விதைகளும், அதிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுவலி போக்கும். வாந்தியை தூண்டும். சளி போக்கும், எண்ணெய் மேல் பூச்சாக தோல் வியாதிகள் மற்றும் தலைவலிக்கு மருந்தாகிறது. ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். மஞ்சள் லேடக்ஸ் மருக்களை நீக்க உதவும்.
விதைகள் கடுகு விதைகளுடன் கலப்படம் செய்யப்படுகின்றன. இதனால் கடுகு எண்ணெயில் ஒருவித புரதம் சேர்ந்து கைகால் சோர்ந்து போகும் நோய் ஏற்படுகிறது.
பல்வலி குணமடையும்
இதன் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும். இதன் இலையை அரைத்துத் தேள் கடி வாயில் வைத்துக் கட்டினால் தேள் கடி விஷம் இறங்கும். இலையை அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு, உள்ளங்கால் நீர்வடியும் கரப்பான் படை குணமடையும். உள்ளங்கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும்.
இதன் விதையை நெருப்பிலிட்டுப் புகைத்து அப் புகையை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் புழு வலி தீரும். செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்க பல் ஆட்டம், சொத்தை, சீல்வடிதல், வீக்கம் குணமடையும். இது சிறந்த பற்பொடி மருந்தாக செயல்படுகிறது.
இதன் சாம்பல் பொடியை 1-2 கிராம் தேனில்குழைத்து 48 நாட்கள் இருவேளை சாப்பிட வேண்டும். இதனால் ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும்,
வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும்
50 மில்லி பன்னீரில் ஒரு கிராம் சாம்பலை கரைத்து வடித்த தெளி நீரை சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம். கண், எரிச்சல், வலி, சிவப்பு, ஆகியவற்றிர்க்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம். இலை சூரணம், விதைச் சூரணம் கலந்து 3 அரிசி எடை காலை, மாலை தேனில் கலந்து சாப்பிட க்ஷய இருமல், நுரையீரல், சளி இருமல் தீரும்.
இதன் வேரை அரைத்து 5 கிராம் அளவு 50 மில்லி லிட்டர் வெந்நீரில் கரைத்து காலை வெறும் வயிற்றில் கொடுக்க மலக்குடல்புழு, கீரிப்பூச்சிகள் வெளியேறும்.
50 கிராம் வேரை 200 மில்லி நீரில் நன்றாக கொதிக்க வைத்து வடித்து குடிநீராக குடித்து வர காசநோய், மேகநோய், குணமடையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











