Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
பற்களைப் பாதுகாக்கும் பிர்மதண்டு சாம்பல் பொடி

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
பெர்பெரைன், கிரிப்டோபைன், ஐசோகுயினோலைன் அல்கலாய்டுகள், மெக்ஸிகேனிக் அமிலம் மற்றும் மெக்ஸிகேனால் போன்ற வேதிப்பொருள் பிர்மதண்டு தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
இருமல் போக்கும்
மலர்களுக்கு இருமல் போக்கும் சக்தி உள்ளது. விதைகளும், அதிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுவலி போக்கும். வாந்தியை தூண்டும். சளி போக்கும், எண்ணெய் மேல் பூச்சாக தோல் வியாதிகள் மற்றும் தலைவலிக்கு மருந்தாகிறது. ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். மஞ்சள் லேடக்ஸ் மருக்களை நீக்க உதவும்.
விதைகள் கடுகு விதைகளுடன் கலப்படம் செய்யப்படுகின்றன. இதனால் கடுகு எண்ணெயில் ஒருவித புரதம் சேர்ந்து கைகால் சோர்ந்து போகும் நோய் ஏற்படுகிறது.
பல்வலி குணமடையும்
இதன் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும். இதன் இலையை அரைத்துத் தேள் கடி வாயில் வைத்துக் கட்டினால் தேள் கடி விஷம் இறங்கும். இலையை அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு, உள்ளங்கால் நீர்வடியும் கரப்பான் படை குணமடையும். உள்ளங்கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும்.
இதன் விதையை நெருப்பிலிட்டுப் புகைத்து அப் புகையை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் புழு வலி தீரும். செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்க பல் ஆட்டம், சொத்தை, சீல்வடிதல், வீக்கம் குணமடையும். இது சிறந்த பற்பொடி மருந்தாக செயல்படுகிறது.
இதன் சாம்பல் பொடியை 1-2 கிராம் தேனில்குழைத்து 48 நாட்கள் இருவேளை சாப்பிட வேண்டும். இதனால் ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும்,
வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும்
50 மில்லி பன்னீரில் ஒரு கிராம் சாம்பலை கரைத்து வடித்த தெளி நீரை சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம். கண், எரிச்சல், வலி, சிவப்பு, ஆகியவற்றிர்க்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம். இலை சூரணம், விதைச் சூரணம் கலந்து 3 அரிசி எடை காலை, மாலை தேனில் கலந்து சாப்பிட க்ஷய இருமல், நுரையீரல், சளி இருமல் தீரும்.
இதன் வேரை அரைத்து 5 கிராம் அளவு 50 மில்லி லிட்டர் வெந்நீரில் கரைத்து காலை வெறும் வயிற்றில் கொடுக்க மலக்குடல்புழு, கீரிப்பூச்சிகள் வெளியேறும்.
50 கிராம் வேரை 200 மில்லி நீரில் நன்றாக கொதிக்க வைத்து வடித்து குடிநீராக குடித்து வர காசநோய், மேகநோய், குணமடையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications