Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
கை, கால் எரிச்சல் போக்கும் வாழைப்பூ ஒத்தடம்!

வாழைப்பூ எவ்வாறு சமைத்துச் சாப்பிட்டாலும் அதன் மருத்துவ குணம் மாறுவதில்லை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் ஈ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன.
கரு உண்டாகும்
நரம்பு நீக்கப்பட்ட வாழைப்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்து பச்சையாக அரைத்து அரை டம்ளர் அளவிற்கு சாறு எடுத்து சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும். வாழைப்பூவைத் தோலோடு இடித்து சாறு எடுத்து ஒரு டம்ளர் சாற்றினை மாதவிலக்கான மூன்று நாட்களுக்குபின் தொடர்ந்து மூன்று நாட்கள் பருகிவர திருமணமான பெண்ணுக்கு கரு உண்டாகும்.
வாழைப்பூச்சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து உட்கொண்டால் வெள்ளைப்படுதல், வயிற்றுக்கடுப்பு நீங்கும். இளம்பூவை புட்டுபோல அவித்து சாறு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து உட்கொள்ள பெரும்பாடு குணமாகும்.
வயிற்றுவலி நீங்கும்
வாழைப்பூவானது மடலுக்குள் சீப்பு, சீப்பாக அமைந்திருக்கும் ஒவ்வொரு பூவிலும் உள்ள நடு நரம்பையும், கண்ணாடி போன்ற சிறு மடலையும் நீக்கிவிட்டு, பூவை பயன்படுத்த வேண்டும். நரம்பு நீக்கிய வாழைப்பூவுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டாக சமைத்து உண்டு வந்தால் வயிறு தொடர்புடைய கோளாறுகள் நீங்கும். சூதக வயிற்றுவலி, பெருங்குடல்புண், ரத்த பேதி நீங்கும்.
மூலநோய் நீங்கும்
மூலநோய் உள்ளவர்கள் இப்பூவை அடிக்கடி சமைத்து உண்ணவேண்டும். வாழைப்பூ சாறு அரை ஆழக்கு காலை, மாலை சாப்பிட்டு வரவேண்டும். அந்த சமயத்தில் புளி, காரம் தவிர்த்து வந்தால் மூலநோய் மட்டுப்படும். வாழைப்பூச்சாறு நூறு மில்லி எடுத்து எடுத்து பாக்கு அளவிற்கு சீரகம் சேர்த்து அரைத்து கலக்கி குடித்துவர ரத்த மூலம் குணமடையும்.
காசநோய் குணமடையும்
அரை டம்ளர் வாழைப்பூச்சாறுடன் சிறிதளவு தேன், சிறிதளவு நெய் சேர்த்து மாலை நேரத்தில் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர காசநோய் குணமடையும். வாழைப்பூவையும், ஒரு தேக்கரண்டியளவு மிளகையும் சேர்த்து இடித்து சாறு பிழிந்து காலை மட்டும் ஒரு டம்ளர் சாறு பருகி வர இருமல் குணமடையும். கைகால்களில் எரிச்சல் இருந்தால் வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து எரிச்சலை தணிக்கலாம். வாழைப்பூச்சாறுடன் கடுக்காய்த்தூள் கலந்து பருகினால் ஆசனக்கடுப்பு நீங்கும்.
வாழைப்பூ கூட்டு, வாழைப்பூ வடை தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் குணமடையும். வாழைப்பூவை எண்ணெய் சேர்க்காமல் சமைத்து உண்பது மிகவும் நல்லது. மொந்தன் வாழைப்பூ அதிக நன்மை தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











