Just In
- 18 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 9 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Movies BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கை, கால் எரிச்சல் போக்கும் வாழைப்பூ ஒத்தடம்!
வாழைப்பூ எவ்வாறு சமைத்துச் சாப்பிட்டாலும் அதன் மருத்துவ குணம் மாறுவதில்லை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் ஈ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன.
கரு உண்டாகும்
நரம்பு நீக்கப்பட்ட வாழைப்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்து பச்சையாக அரைத்து அரை டம்ளர் அளவிற்கு சாறு எடுத்து சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும். வாழைப்பூவைத் தோலோடு இடித்து சாறு எடுத்து ஒரு டம்ளர் சாற்றினை மாதவிலக்கான மூன்று நாட்களுக்குபின் தொடர்ந்து மூன்று நாட்கள் பருகிவர திருமணமான பெண்ணுக்கு கரு உண்டாகும்.
வாழைப்பூச்சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து உட்கொண்டால் வெள்ளைப்படுதல், வயிற்றுக்கடுப்பு நீங்கும். இளம்பூவை புட்டுபோல அவித்து சாறு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து உட்கொள்ள பெரும்பாடு குணமாகும்.
வயிற்றுவலி நீங்கும்
வாழைப்பூவானது மடலுக்குள் சீப்பு, சீப்பாக அமைந்திருக்கும் ஒவ்வொரு பூவிலும் உள்ள நடு நரம்பையும், கண்ணாடி போன்ற சிறு மடலையும் நீக்கிவிட்டு, பூவை பயன்படுத்த வேண்டும். நரம்பு நீக்கிய வாழைப்பூவுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டாக சமைத்து உண்டு வந்தால் வயிறு தொடர்புடைய கோளாறுகள் நீங்கும். சூதக வயிற்றுவலி, பெருங்குடல்புண், ரத்த பேதி நீங்கும்.
மூலநோய் நீங்கும்
மூலநோய் உள்ளவர்கள் இப்பூவை அடிக்கடி சமைத்து உண்ணவேண்டும். வாழைப்பூ சாறு அரை ஆழக்கு காலை, மாலை சாப்பிட்டு வரவேண்டும். அந்த சமயத்தில் புளி, காரம் தவிர்த்து வந்தால் மூலநோய் மட்டுப்படும். வாழைப்பூச்சாறு நூறு மில்லி எடுத்து எடுத்து பாக்கு அளவிற்கு சீரகம் சேர்த்து அரைத்து கலக்கி குடித்துவர ரத்த மூலம் குணமடையும்.
காசநோய் குணமடையும்
அரை டம்ளர் வாழைப்பூச்சாறுடன் சிறிதளவு தேன், சிறிதளவு நெய் சேர்த்து மாலை நேரத்தில் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர காசநோய் குணமடையும். வாழைப்பூவையும், ஒரு தேக்கரண்டியளவு மிளகையும் சேர்த்து இடித்து சாறு பிழிந்து காலை மட்டும் ஒரு டம்ளர் சாறு பருகி வர இருமல் குணமடையும். கைகால்களில் எரிச்சல் இருந்தால் வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து எரிச்சலை தணிக்கலாம். வாழைப்பூச்சாறுடன் கடுக்காய்த்தூள் கலந்து பருகினால் ஆசனக்கடுப்பு நீங்கும்.
வாழைப்பூ கூட்டு, வாழைப்பூ வடை தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் குணமடையும். வாழைப்பூவை எண்ணெய் சேர்க்காமல் சமைத்து உண்பது மிகவும் நல்லது. மொந்தன் வாழைப்பூ அதிக நன்மை தரும்.