Latest Updates
-
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது!
மலட்டுத் தன்மை போக்கும் நெருஞ்சி
களைச்செடியாக காணப்படும் பல தாவரங்கள் மருத்துவகுணங்களை கொண்டிருக்கின்றன. முட்களைக் கொண்ட கனிகளை உடைய நெருஞ்சிமுள் இந்தியாமுழுவதும் பரவலாக வளர்ந்துள்ளது. இத் தாவரத்தின் தண்டு, இலை, வேர், கனி ஆகியவை நோய் தீர்க்க உதவுகின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் சபோனின்கள், குளுக்கோசைடுகள், சர்க்கரைகள், ஸ்டீரால்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. குளோரோஜெனின் டயோஸ்ஜெனின், கிரேசிலின், டிரில்லின் சபோனின் குளுக்கோஸ், ராம்னோஸ், ரூட்டின், ஹார்மைன், ஸ்டிங்கோஸ்டீரால்.
மருத்துவப் பயன்
தண்டு தசை இருக்கும் தன்மை கொண்டது. இதன் வடிநீர், கோனோரியா எனும் பால்வினை நோய் தீர்க்கும். சிறுநீர்ப் பைகளில் கற்கள் உருவாவதை இலைகள் போக்கும். வயிற்றுவலி தீர்க்கும்.
வேர் பல மருத்துவ பயன்களை கொண்டது. இது சிறிய அளவு மலமிளக்கி. சுகம் தருவது. வலுவேற்றி, சிறுநீர்த்தொல்லைகள் மற்றும் மலட்டுத்தன்மை நீக்க உதவுகிறது.
பால்வினை நோய் போக்கும்
கனிகளின் வடிநீர் அல்லது கசாயம் மிகுந்த பயன் உடையவை. சிறுநீர் உறுப்புகளில் கல் நீக்கவும், கோனேரியா பால்வினை நோய் போக்கவும், கீழ்வாதம் நீக்கவும், மலடு போக்கவும் பயன்படுகிறது. இவைமட்டுமின்றி சிறுநீரக கோளாறுகள் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க விரும்பும் நோயினை போக்கவும் உதவுகிறது. சம அளவு விதைகளை ஆட்டுப்பால், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.உலர்ந்த கனிகள் பால் உணர்வு தூண்டுவி. சிறுநீர் போக்குத்தூண்டுவி. வலுவேற்றியாக செயல்படும்.
மலட்டுத்தன்மை நீங்கும்
நெருஞ்சில் செடியின் காய் மிருதுவானது. முட்கள் கெட்டியாக இருப்பதில்லை. கனிந்தபின் கடினமாகி முட்களாக மாறிவிடும். இடம் பரவ ஏதுவாக அமைகிறது.
தசமூலா எனும் ஆயுர்வேத தயாரிப்பில் நெருஞ்சில்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெருஞ்சித்தாவரத்தை முழுவதுமாக தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தினாலும் மலடு நீங்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











