Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
மலட்டுத் தன்மை போக்கும் நெருஞ்சி
களைச்செடியாக காணப்படும் பல தாவரங்கள் மருத்துவகுணங்களை கொண்டிருக்கின்றன. முட்களைக் கொண்ட கனிகளை உடைய நெருஞ்சிமுள் இந்தியாமுழுவதும் பரவலாக வளர்ந்துள்ளது. இத் தாவரத்தின் தண்டு, இலை, வேர், கனி ஆகியவை நோய் தீர்க்க உதவுகின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் சபோனின்கள், குளுக்கோசைடுகள், சர்க்கரைகள், ஸ்டீரால்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. குளோரோஜெனின் டயோஸ்ஜெனின், கிரேசிலின், டிரில்லின் சபோனின் குளுக்கோஸ், ராம்னோஸ், ரூட்டின், ஹார்மைன், ஸ்டிங்கோஸ்டீரால்.
மருத்துவப் பயன்
தண்டு தசை இருக்கும் தன்மை கொண்டது. இதன் வடிநீர், கோனோரியா எனும் பால்வினை நோய் தீர்க்கும். சிறுநீர்ப் பைகளில் கற்கள் உருவாவதை இலைகள் போக்கும். வயிற்றுவலி தீர்க்கும்.
வேர் பல மருத்துவ பயன்களை கொண்டது. இது சிறிய அளவு மலமிளக்கி. சுகம் தருவது. வலுவேற்றி, சிறுநீர்த்தொல்லைகள் மற்றும் மலட்டுத்தன்மை நீக்க உதவுகிறது.
பால்வினை நோய் போக்கும்
கனிகளின் வடிநீர் அல்லது கசாயம் மிகுந்த பயன் உடையவை. சிறுநீர் உறுப்புகளில் கல் நீக்கவும், கோனேரியா பால்வினை நோய் போக்கவும், கீழ்வாதம் நீக்கவும், மலடு போக்கவும் பயன்படுகிறது. இவைமட்டுமின்றி சிறுநீரக கோளாறுகள் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க விரும்பும் நோயினை போக்கவும் உதவுகிறது. சம அளவு விதைகளை ஆட்டுப்பால், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.உலர்ந்த கனிகள் பால் உணர்வு தூண்டுவி. சிறுநீர் போக்குத்தூண்டுவி. வலுவேற்றியாக செயல்படும்.
மலட்டுத்தன்மை நீங்கும்
நெருஞ்சில் செடியின் காய் மிருதுவானது. முட்கள் கெட்டியாக இருப்பதில்லை. கனிந்தபின் கடினமாகி முட்களாக மாறிவிடும். இடம் பரவ ஏதுவாக அமைகிறது.
தசமூலா எனும் ஆயுர்வேத தயாரிப்பில் நெருஞ்சில்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெருஞ்சித்தாவரத்தை முழுவதுமாக தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தினாலும் மலடு நீங்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications