Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
காலையில் எழும்போது இந்த பிரச்சனைகள் இருந்தா... உங்களுக்கு சீக்கிரம் மாரடைப்பு வரப்போகுதுனு அர்த்தமாம்!
உங்கள் தமனிகள் அடைக்கப்பட்டிருந்தால், உங்கள் இதயம் உங்கள் உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்ப அதிக அழுத்தத்துடன் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
மாரடைப்பு என்றாலே, இறந்து விடுவோம் என்ற அச்சம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஏனெனில், இது உயிருக்கு ஆபத்தான நிலையை குறிக்கிறது. வாழ்க்கை முறை மற்றும் நாள்பட்ட நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திரைப்படங்கள் மற்றும் சீரியலில் மாரடைப்பு என்பது மிகவும் வியத்தகு முறையில் நிகழ்கிறது. நோயாளியின் மார்பில், இதயத்தின் இடத்தில் கடுமையான வலி ஏற்படுகிறது. உண்மையில், மாரடைப்பு அவ்வளவு வெளிப்படையான அறிகுறிகளுடன் ஏற்படலாம். இது நிலமையை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது. ஏனென்றால் மக்கள் ஆபத்தான நிலையை அடையாளம் காண முடியாமல் போகலாம். பெரும்பாலும் எந்த சலனமும் இல்லாமல் சைலன்டாக கூட மாரடைப்பு ஏற்படும்.

இந்த அமைதியான மாரடைப்புக்கான சில சொல்லக்கூடிய அறிகுறிகள் உள்ளன. இது குறிப்பாக காலையில் நிகழலாம். நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதே நிகழலாம். இவற்றைத் தெரிந்துகொள்வதும், அவை நடந்தால் கவனம் செலுத்துவதும் உடனடி சிகிச்சைக்கு அவசியம். எழுந்திருக்கும் போது ஏற்படும் அமைதியான மாரடைப்பின் எதிர்பாராத எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

குளிர்ந்த வியர்வையில் எழுந்திருத்தல்
உங்கள் தமனிகள் அடைக்கப்பட்டிருந்தால், உங்கள் இதயம் உங்கள் உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்ப அதிக அழுத்தத்துடன் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இத்தகைய கூடுதல் உழைப்பு நிகழும்போது, உங்கள் உடல் வெப்பநிலையைக் குறைக்க உங்கள் உடல் அதிகமாக வியர்க்கக்கூடும். காலை அல்லது நள்ளிரவில் எழுந்தவுடன் குளிர் வியர்வை அல்லது சருமம் ஈரமாக இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

குமட்டல் உணர்வு
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு நீங்கள் லேசான அஜீரணம் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சனைகளை அனுபவிக்கலாம். ஆன்டாக்சிட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், மருத்துவ உதவியை நாடுவது முக்கியம். பொதுவாக செரிமான பிரச்சனைகளுக்கு அதிக வாய்ப்புள்ள வயதானவர்கள், மாரடைப்பின் இந்த அறிகுறிகளை நெஞ்செரிச்சல் அல்லது வேறு ஏதேனும் உணவு தொடர்பான பிரச்சனை என்று நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

வாந்தி
குமட்டல் வயிற்று வலியுடன் கூட இருக்கலாம். சிலருக்கு வாந்தி கூட வரலாம். நீங்கள் வாந்தியெடுக்கும் போது, உங்கள் வயிற்றின் உள்ளடக்கங்கள் உணவுக் குழாய் வழியாகவும் வாயிலிருந்தும் வெளியேறும். நீங்கள் தொடர்ந்து வாந்தியெடுத்தால், உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக வாந்தி பல்வேறு காரணங்களால் கூட ஏற்படும். இதனால், மக்கள் பெரும்பாலும் இந்த அறிகுறிகளை காய்ச்சலின் அறிகுறிகளாக நிராகரிக்கலாம். இருப்பினும், உங்கள் உடலின் மீது கவனம் செலுத்துங்கள், இது முன்பு போல் காய்ச்சலின் அறிகுறிகள் இல்லை என்று நீங்கள் உணரலாம்.

மாரடைப்புக்கான பிற பொதுவான அறிகுறிகள்
மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகளில் சில மார்பு வலி அல்லது அசௌகரியம், திடீரென்று ஏற்படும் மற்றும் மறைந்துவிடாது. இது உங்கள் மார்பில் அழுத்தம் அல்லது இறுக்கம் அல்லது கனம் போல் உணரலாம். சிலர் தங்கள் இடது கை, வலது கை, கழுத்து, தாடை, முதுகு அல்லது வயிற்றில் பரவக்கூடிய வலியையும் அனுபவிக்கிறார்கள். லேசான தலைவலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற உணர்வுகளும் மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

மாரடைப்புக்கு எவ்வாறு பதிலளிப்பது?
மாரடைப்பு ஏற்பட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும். இது ஒரு முக்கியமான படியாகும். உங்கள் அறிகுறிகள் மாரடைப்பைக் குறிக்கின்றனவா என்பது உங்களுக்கு முழுமையாகத் தெரியாவிட்டாலும் பின்பற்றப்பட வேண்டும். பொருட்படுத்தாமல், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியமானது. உங்கள் இதயத்தில் தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்க்க, ஆம்புலன்ஸுக்காக காத்திருக்கும் போது நீங்கள் ஓய்வெடுப்பது முக்கியம்.

இறுதி குறிப்பு
ஆஸ்பிரின் இருந்தால் (உங்களுக்கு ஒவ்வாமை இல்லை), நீங்கள் ஆம்புலன்சுக்காக காத்திருக்கும் போது, மெதுவாக மெல்லவும். பின்னர் வயது வந்தோருக்கான மாத்திரையை (300 மிகி) விழுங்கவும், இதை சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. ஆஸ்பிரின் இரத்தத்தை மெலிக்கவும் உங்கள் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications











