Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
உடல்பருமனால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம்...

கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் மட்டும் உடல் பருமன் மூலம் உலக அளவில் 30 லட்சம் பேர் இறந்தனர் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சத்துணவு இல்லை
ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் பலருக்கு உண்பதற்கு போதிய உணவு கிடைக்காமல் குறைந்த வயதிலேயே மரணமடைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் சரியான உணவின்றி 10 லட்சம் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்துள்ளன.
நோய் பாதிப்பு அதிகம்
ஐந்து வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளை ஒருங்கிணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு ஐநூறு ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.
உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்றாலும், அவர்கள் நோய்வாய்ப்படுகின்ற அளவு அதிகரித்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குறையும் உடல் உழைப்பு
மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் உடல் பருமன் அதிகரிக்கிறது. மேலும் உடல் உழைப்பு குறைவதும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
இதயநோயால் இறப்பு
2010 நிகழ்ந்த மரணங்களில் இதயநோயும், மூளையில் ரத்தக்கசியும் நான்கில் ஒருவரின் மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது. அந்த ஆண்டில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் இறப்புகளுக்கு அந்நோய்கள் காரணமாக இருந்துள்ளன.
புகை மதுப்பழக்கம்
உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை உடல்நலப் பாதிப்புகளின் மிகப் பெரிய காரணியாக உருவெடுத்துள்ளன என்று இந்த ஆய்வு காட்டுகிறது.
15 லட்சம் எயிட்ஸ் மரணங்கள்
தவிர எய்ட்ஸ் நோயும் உயிரிழப்புகளுக்கான பெரிய காரணங்களுல் ஒன்றாக இருக்கிறது. 2010ஆம் ஆண்டு மொத்தம் 15 லட்சம் பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.
காசநோய் மரணங்கள் குறைவு
இறப்புகளை ஏற்படுத்திய காரணங்களின் வரிசைப் பட்டியலில் நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகம் காணப்படுகின்றன. அதேசமயம் காலரா, காசநோய் போன்றவை இப்பட்டியலில் கீழிறங்கியுள்ளன
அதிகரிக்கும் இடைவெளி
மக்களின் ஆயுட்காலம் பரவலாகப் பல நாடுகளிலும் அதிகரித்துள்ளது என்றாலும், சராசரி ஆயுட்கால வயதில் செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி என்னவோ குறையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மக்களிடையே நோயின் தாக்கங்கள் பற்றி உலக அளவில் இதுவரை இல்லாத பாரிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தி லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











