இந்தியாவில் நிகழும் 80% மரணங்களுக்கு இந்த 5 நோய்கள்தான் காரணமாம்... இவற்றை எப்படி தடுக்கலாம் தெரியுமா?

இந்தியா தற்போது அதன் பொருளாதாரம், மக்கள்தொகை மற்றும் தொற்றுநோயியல் ஆகியவற்றில் இக்கட்டான காலகட்டத்தை அனுபவித்து வருகிறது. இந்தியாவில் சுகாதார அமைப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மக்களிடையே நிலவும் கட்டுக்கதைகள் மற்றும் நம்பிக்கைகள் காரணமாக சுகாதார மற்றும் ஆரம்பகால நோயறிதலுக்கான சமூக மற்றும் பொருளாதார இடைவெளி இன்னும் அதிகமாகவே உள்ளது.

Health Problems Which Are Responsible for Nearly 80 of Deaths in India

காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகள் பரவலான நோய்களின் சுமையை அதிகரிக்கின்றன. இந்தியாவில், புற்றுநோய், இதய நோய், நீரிழிவு, நாள்பட்ட நுரையீரல் நோய்கள் ஆகிய நான்கு தொற்றாத நோய்கள் கிட்டத்தட்ட 80% இறப்புகளுக்கு பங்களிக்கின்றன, காசநோய், ஒரு தொற்று நோயாகும், இது உலகளாவிய சுமையின் கால் பகுதிக்கும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் நிகழும் அதிகளவு மருத்துவ மரணங்களுக்கு காரணமாக இருக்கும் நோய்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புற்றுநோய்

இந்தியாவில் புற்றுநோயால் படிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, 2023 ஆம் ஆண்டில் சுமார் 14 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. அசாதாரண உயிரணுப் பிரிவை ஏற்படுத்தும் மரபணு மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. காற்று மாசுபாடு, புற ஊதா ஒளி, கதிர்வீச்சு, புகைபிடித்தல், ஆல்கஹால், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்கள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளால் இந்த பிறழ்வுகள் சில நேரங்களில் மரபணுக்குகள் காரணமாக ஏற்படலாம்.

சிகிச்சைகள் புற்றுநோயின் வகை மற்றும் அதன் நிலையைப் பொறுத்தது மற்றும் அறுவை சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் இலக்கு மருந்து சிகிச்சை ஆகியவை சிகிச்சை விருப்பங்களாக அடங்கும். வழக்கமான உடற்பயிற்சி, பிஎம்ஐயை பராமரித்தல் மற்றும் மது மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது நோயைத் தடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இதய நோய்

இந்தியாவில், இதய நோய்களால் ஏற்படும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்களில் மாரடைப்பு வழக்குகள் 12.5% அதிகரித்துள்ளன. பாலினம், வயது, இனம் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகளில் குறிப்பிடத்தக்கவை.

வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை இதய நோய்க்கான முக்கிய சிகிச்சைகள் ஆகும். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு இதய நோய்க்கான பல்வேறு அறிகுறிகள் உள்ளன, எனவே கூடிய விரைவில் மருத்துவரை அணுகுவது ஆரம்பகால நோயறிதலுக்கு உதவும்.

சர்க்கரை நோய்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் படி, நாட்டில் நீரிழிவு நோயின் பாதிப்பு சுமார் 10.1 கோடியாக உள்ளது. இந்தியாவில் மிகவும் பரவலாக இருப்பது டைப் 2 சர்க்கரை நோயாகும். 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 77 மில்லியன் மக்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 25 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கு நிலையில் உள்ளார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம். டைப் 2 நீரிழிவு உங்கள் உடல் இன்சுலினுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. இது வாழ்க்கை முறை காரணிகள், உடல் பருமன், மரபியல் அல்லது இந்த மூன்றின் கலவையிலிருந்து உருவாகலாம். கார்போஹைட்ரேட், நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை குறைத்து, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது இதனைத் தடுக்க அவசியம்.

உடல் பருமன்

உட்கொள்ளும் மற்றும் எரிக்கப்படும் கலோரிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு காரணமாக உடல் பருமன் ஏற்படுகிறது. அதிகப்படியான உணவு மற்றும் செயலற்ற தன்மை ஆகியவை இதற்கான முக்கிய பங்களிப்பாக இருந்தாலும், மரபணுக்கள் மற்றும் ஹார்மோன் காரணிகளும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்வது முக்கியம், அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை கட்டுப்படுத்துவதும் முக்கியம்.

வழக்கமான உடல் செயல்பாடு, விறுவிறுப்பான நடைபயிற்சி கூட உடல் பருமனைக் குறைக்க உதவியாக இருக்கும். இந்த மாற்றங்களைச் செய்து, சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான பழக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம், நாம் உடல் பருமனைத் தடுக்கலாம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தலாம்.

காசநோய்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.8 மில்லியன் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்திய காசநோய் அறிக்கை 2024 ஊட்டச்சத்து குறைபாடு, எச்.ஐ.வி மற்றும் நீரிழிவு போன்ற ஆபத்து காரணிகளை எடுத்துக்காட்டுகிறது.

ஸ்கிரீனிங் மேம்படுத்தப்பட்டாலும், Drug-Resistant காசநோய் ஒரு முக்கிய கவலையாக உள்ளது, கடந்த ஆண்டு நாட்டில் 63,000 க்கும் மேற்பட்ட காசநோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். BCG மற்றும் பல்வேறு மருந்துகள் நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, April 14, 2024, 18:46 [IST]
Desktop Bottom Promotion