Latest Updates
-
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா?
மார்ச் 27 வரை தினமும் அதிகளவு நீர் குடிக்க வேண்டும், ஏன் தெரியுமா? இதப்படிங்க!
ஏன் மார்ச் 27 வரை அதிக நீர் குடிக்க வேண்டும்? சம இரவு நாள் என்றால் என்ன?
பொதுவாகவே தினமும் நம்மில் யார் போதுமான அளவு நீர் குடிக்கிறோம். கணினியின் முன்னர் அமர்ந்த பிறகு நமக்கு நம்மை சுற்றி இருக்கும் உலகமே மறந்து போகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப அனுதினம் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு வேறுபடுகிறது. சராசரியாக நாளுக்கு 2 - 3 லிட்டர் அவசியம்.

ஆனால், வரும் மார்ச் 27 தேதி வரை உங்களால் முடிந்த வரை சற்று அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன் மார்ச் 27 வரை மட்டும்? எதனால்?

வருடத்தில் இரண்டு முறை!
வருடத்தின் எல்லா நாட்களும் பகல் இரவு நேரம் சமமாக அமையாது. வருடத்தில் இரண்டு முறை மட்டுமே இது அமைகிறது. ஒன்று மார்ச் மாதத்திலும், மற்றொன்று செப்டம்பர் மாதத்திலும் அமைகிறது.

மார்ச் 20 - 27 வரை!
இந்த சம இரவு நாட்களில் அதிக அளவு நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அந்த வகையில் இம்மாதம் மார்ச் 20 - 27 வரை (இலையுதிர் கால சம இரவு நாள்) அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சம இரவு நாள் என்றால் என்ன?
எந்த தருணத்தில் சூரியனின் மையப்பகுதி நேரடியாக பூமியின் பூமத்திய ரேகையை அவதானிக்கிறதோ, அதை தான் சம இரவு நாள் என கூறுகிறோம். இதை ஆங்கிலத்தில் Equinox என்று அழைக்கின்றனர்.
சம இரவு நாளின் போது வானநடுவரை எனப்படும் "Celestial equator" சூரியனுடன் கச்சிதமான வரிசையில் அமைந்திருக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் பூமியின் அனைத்து தாக்கமும் சமநிலையில் இருக்கும்.

நன்மைகள்?
இந்த சம இரவு நாளில் பல நன்மைகள் விளைகின்றன என இயற்கை மருத்துவம் பயின்றவர்கள் கூறுகின்றனர். இது தான் உட்பாகங்களை முழுவதுமாக சுத்தப்படுத்த உகந்த நேரம் என்றும் கூறப்படுகிறது.

பலன்கள்!
இந்த நாளில் அதிக தண்ணீர் பருக வேண்டும். மேலும், இதன் மூலம் அதிக உடற்சக்தி பெற முடியும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், செரிமானத்தை ஊக்கவிக்க முடியும், ஒட்டுமொத்த உயிராற்றலை புத்துயிர் பெற செய்ய உகந்ததாக அமையும் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications