Latest Updates
-
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த ஜூஸை குடிங்க!!
நாம் நம் வீட்டை சுத்தப்படுத்தாமலே இருந்தால் என்னாகும்? குப்பைகள் சேர்ந்து போகும். என்னதான் சுத்தமாக இருந்தாலும் தினமும் தூசிகள் வராமல் இருக்காது. அப்படிதான் நம் உடலுக்குள்ளும்.
நமது உறுப்புகளே தம்மைத்தாமே சுத்தப்படுத்திக் கொள்கிறது. இருந்தாலும் மது, ராசயனம் மற்றும் அதிக மசாலா கொண்ட உணவுகளை சாப்பிடும்போது, அவற்றின் நச்சுக்கள் அங்கேயே தங்கி, வெளியேறாமல் இருக்கும்போது அவற்றுடன் மல்லு கட்ட முடியாமல் கல்லீரல் சோர்ந்து போகிறது என்பது உண்மை.

கல்லீரல் மிகப்பெரிய மற்றும் மிக மிக முக்கிய உறுப்பு. அதோடு உடலில் மிக அதிகமான வேலைகளை கல்லீரல் மற்றும் சிறு நீரகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
ஜீரணத்தை செய்வது, வளர்சிதை மாற்றத்தை நடத்துவது, நச்சுக்களை வெளியேற்றுவது, ரத்தத்தை வடிகட்டி அனுப்புவது என பல்வேறு வேலைகலை இழுத்து போட்டு கல்லீரல் செய்கிறது.
இந்த நேரத்தில் அதற்கு அநாவசியமான வேலைகளையும் நாம் தருவது அதன் வேலைகளை பாதிப்படைய செய்யும். இதனால் கல்லீரலும் பாதிக்கும் நிலைமை உண்டாகும்.
ஆகவே கல்லீரலுக்கு மிகவும் உகந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம். அது தவிர்த்து நீங்கள் நச்சுக்களை வெளியேற்ற உதவும் வகையில் உணவுகளை சாப்பிடுவதால் கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அதன் வேலைகளை எளிமைப்படுத்துவதாகவும் அமையும்.
அவ்வாறு எளிமையான மற்றும் நச்சுக்களை வெளியேற்றும் ஒரு ஜூஸை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.
புதினா ஜூஸ் :
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
புதினா ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
ஒரு கப் நிறைய வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, புதினா சாறு மற்றும் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இந்த மூன்றுமே நச்சுக்களை சிறு நீரகத்திற்கு அடித்துக் சென்று விடும்.
கல்லீரலில் உண்டாகும் பாதிப்பை சரிபடுத்தும். வீக்கங்களை குறைக்கும். வாரம் இரு நாட்கள் இப்படி குடித்து பாருங்கள். உங்களுக்கு பயனை தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



