பீரியட்ஸ் டைம்ல வயிற்று பிடிப்பு மற்றும் வீக்கம் அதிகமா இருக்கா? அப்ப இந்த பானங்கள குடிங்க சரியாகிடுமாம்!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். உடல் மிகவும் சோர்வாக இருக்கும் நேரத்தில் வயிற்று பிடிப்புகள், முதுகுவலி மற்றும் வீக்கம் ஆகியவற்றைக் கையாள்வது என்பது மிகவும் சவாலானது. ஒரே நேரத்தில் இத்தனை பிரச்சனைகளை எப்படி சமாளிக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா?

சரி, மாதவிடாய் உடலில் உள்ள ஹார்மோன்களை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், மனநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் வலி மற்றும் வீக்கம் போன்ற வடிவத்தில் உடலில் எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்துகிறது. மாதவிடாய் காலங்களில் வீக்கத்தை சமாளிக்க, உங்களுக்கு உதவும் பானங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Drinks That Can Cure Bloating During Periods In Tamil

பெருஞ்சீரக விதை நீர்
பொதுவாக உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் விதைகள் சாப்பிடப்படுகிறது. ஏனெனில் அவை செரிமானத்திற்கு உதவுகின்றன. ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர், ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அடுப்பை அனைத்து தண்ணீர் குளிர்ந்த பின் வடிக்கட்டி குடிக்க வேண்டும்.

பெருஞ்சீரக விதைகளில் காணப்படும் முக்கிய சேர்மங்களில் ஒன்று அனெத்தோல் ஆகும். இது இயற்கையான ஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு முகவராக இருக்கிறது. அனெத்தோல் செரிமான மண்டலத்தில் உள்ள தசைகளை தளர்த்த உதவுவதோடு மட்டுமல்லாமல், பிடிப்புகள் மற்றும் வீக்கம் இரண்டையும் குறைக்க உதவுகிறது.

புதினா தேநீர்
பெப்பர்மின்ட் டீ என்பது மாதவிடாய் காலங்களில் அருந்தக்கூடிய ஒரு இயற்கையான தீர்வாகும். புதினாவின் முதன்மையான செயலில் உள்ள மூலப்பொருள் மெந்தோல் ஆகும். இது செரிமான அமைப்பில் பல சிகிச்சை விளைவுகளைக் கொண்டுள்ளது.

புதினா தேநீர் ஒரு கார்மினேடிவ் விளைவைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அதாவது செரிமான அமைப்பிலிருந்து வாயுவை வெளியேற்ற உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் தினமும் குறைந்தது ஒரு கப் புதினா டீயையாவது அருந்துங்கள்.

ஜீரா அஜ்வைன் டீ
ஒரே நேரத்தில் வயிற்று பிடிப்பு மற்றும் வீங்கியதாக உணர்கிறீர்களா? ஆம், எனில் உங்களை மீட்க ஜீரா அஜ்வைன் டீ பயன்படும். சீரக விதைகள் மற்றும் அஜ்வைன் இவை இரண்டும் இயற்கையாகவே சூடான தன்மை கொண்டவையாக இருப்பதால் பிடிப்புகளை போக்க உதவும். வீக்கத்தைக் குறைப்பதைத் தவிர, ஜீரா அஜ்வைன் டீ செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

வெள்ளரி தண்ணீர்
வெள்ளரி தண்ணீர் தயாரிக்க, ஒரு கண்ணாடி குடுவை முழுவதும் தண்ணீர் நிரப்பவும். அதில் 5-6 கிளாஸ் தண்ணீரை நிரப்ப வேண்டும். ஒரு வெள்ளரிக்காயை எடுத்து துண்டுகளாக நறுக்கி, அதை தண்ணீரில் சேர்க்கவும்.

புத்துணர்ச்சிக்காக சில புதினா இலைகளையும் அதில் சேர்க்கலாம். ஒரே இரவு முழுவதும் அல்லது சில மணி நேரம் ஊறிய, பின்னர் நாள் முழுவதும் இந்த வெள்ளரி தண்ணீரைக் குடிக்கலாம். இது வீக்கத்தைக் குறைப்பது மட்டுமின்றி உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

கெமோமில் தேயிலை
கெமோமில் தேநீர் அதன் அமைதியான மற்றும் நிதானமான விளைவுகளுக்கு பிரபலமானது. இது பதட்டத்தைக் குறைக்கவும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும். இந்த தேநீரின் இயற்கையான அமைதியான விளைவு ஃபிளாவனாய்டுகள் மற்றும் டெர்பெனாய்டுகளின் அதிக செறிவு காரணமாகும், அவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட இயற்கை கலவைகள் ஆகும். எனவே, வீக்கத்தைக் குறைக்க பகலில் எப்போது வேண்டுமானாலும் இந்த டீயை நீங்கள் அருந்தலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, April 11, 2023, 20:10 [IST]
Desktop Bottom Promotion