Latest Updates
-
5500 பணக்காரர்கள் மரணமிலா வாழ்க்கைக்காக அவங்க உடலை உறைய வைக்கப்போறாங்களாம்..மரணத்தை எப்டி ஜெயிப்பாங்க தெரியுமா -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
வெயில் தாங்க முடியாமல் தலைவலி வருதா? உடனே இதை செய்யுங்கள்.. !
தலைவலி என்பது பலர் அன்றாடம் சமாளிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இவை, இயல்பான பிரச்சனையாக இருந்தாலும், அவை உங்கள் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும். மனச்சோர்வு, உடல்சோர்வு, உணவு பழக்கம் போன்ற பலவித காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. பல வகையான தலைவலிகள் இருந்தாலும், டென்ஷனால் உண்டாகும் தலைவலி மிகவும் பொதுவானது.
தலைவலி என்றது, நம்மில் பலர் யோசிக்காமல் மாத்திரைகளை வாங்கி போடுவோம். அது வலியையும் குறைக்கும். ஆனால், அந்த நிலை தொடர்ந்தால் பல ஆபத்துக்கள் ஏற்படும். தலைவலியை போக்கும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கு காணலாம்.

அடிக்கடி தலைவலி வருவதற்கான முக்கிய காரணங்கள்:
உங்கள் உடலில் இரத்தத்தில் சிவப்பணு குறைவாக இருந்தால், அதாவது ஹூமோகுளோபின் குறைவாக இருந்தால், காலையில் எழுந்தவுடன் தலையில் வலியை உணரலாம். அதே நேரத்தில், உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தாலும் தலைவலியுடன் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே அடிக்கடி காலை எழுந்த உடன் தலைவலி ஏற்பட்டால், ரத்த பிரிசோதனை செய்து கொள்வது நல்லது.
நீரிழப்பு
குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வருவதற்கு தண்ணீர் பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம். போதிய அளவு தண்ணீர் குடிக்காததால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வரலாம் என்று சொல்லலாம்.
தூக்கமின்மை
தூக்கமின்மை காரணமாக காலையில் தலைவலியை உணரலாம். அதே சமயம், பலருக்கு மன அழுத்தம் காரணமாகவும், தலைவலி பிரச்சனை உள்ளது. இரவு ஷிப்டில் அதிகம் பணிபுரிபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலியை உணரலாம்.
சர்க்கரை அளவு
உங்கள் உடலில் சர்க்கரை அளவு அசாதாரணமாக இருந்தால், காலை தலைவலி ஏற்படலாம். இது சர்க்கரை அளவு தாறுமாறாக இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலி இருந்தால், உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.
தலைவலிக்கு உடனடி தீர்வு தரும் எளிய வீட்டு வைத்தியங்கள்:
1. பட்டையை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலி கணப்பொழுதில் மறைந்து போவதை உணரலாம்.
2. ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு சிறிது நேரம் வைத்திருப்பது, தலைவலியில் இருந்து சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்.
3. சில மூலிகைகள் வலி நிவாரணத்துக்கு பயன்படுகிறது. இஞ்சி தலைவலியில் நிவாரணம் அளிக்க உதவுகிறது. மேலும், சுக்கு பொடியை நீர் விட்டு குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகிவிடும்.
4. புதினா எண்ணெயை, நெற்றி மற்றும் தலையில் நன்றாக தேய்த்து கொண்டால் தலைவலிக்கு சிறந்த வலி நிவாரணியாக இருக்கும். இந்த எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இறுக்கமான தசைகளை தளர்த்தில், தலைவலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
5. மேலும், உடலில் தேவையான அளவு நீரில்லாத போது சூடேறி தலைவலி உண்டாகலாம். அதனால், தண்ணீரை குடிப்பதாலும் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தலைவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற உதவும். இல்லையெனில், உடலை நிரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவும் இளநீர் மற்றும் பழச்சாறுகளை பருகுவதும் நல்ல பலன் தரும். ஏனென்றால், உடலில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் சில சமயங்களில் தலைவலி அல்லது தலை கணம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.
6. ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம்.
7. சிறிது இஞ்சி, சீரகம், தனியா ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்த தலைவலியில் இருந்து விடுபடலாம்.
8. தலைவலி இருக்கும் போது கழுத்து மற்றும் தலை பகுதியில் வெந்நீர் பையை கொண்டு ஒத்தடம் தருவது நல்ல பலனை கொடுக்கும். மேலும், வெதுவெதுப்பான நீர் கொண்டு தலைக்கு குளிப்பதும் தலைவலியில் இருந்து நிவாரணம் பெற உதவும்.
9. அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட ரோஸ்மேரி எண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்ய, தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம். தலைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெயுடன் ஒரு சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்ய தலைவலி மட்டும் அல்ல முடி உதிர்வும் குறையும்.
10. 3 சொட்டு மிளகுக்கீரை எண்ணெயுடன் ஒரு சொட்டு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நெற்றி மற்றும் கழுத்து பகுதியில் மசாஜ் செய்தால் தலைவலி படிப்படியாக குறையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











