Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உங்களுக்கு செலுலைட் வந்துருச்சா... ? உடற்பயிற்சி செய்யுங்க!

பெண்களுக்கு அதிகப்படியாக கொழுப்பு சேரும் இடம், தொடை, இடுப்பு மற்றும் பின் பகுதி தான்! இந்த கொழுப்புக்கு பெயர் தான் செலுலைட். அதாவது கெட்டியான கொழுப்பு திசுக்கள் ஆங்காங்கே தேங்கியிருக்கும். ஆயுர்வேதத்தில் செல்லுலைட் பற்றி ‘வாசா’ என்று கூறப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியின்மை
அதிக உடல் உழைப்பு இல்லாத வேலையும், உடற்பயிற்சியின்மையும் செலுலைட் உருவாக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எண்ணையில் பொரித்த உணவு, மது, கஃபைன் ( காபியில் உள்ளது) சர்க்கரை போன்றவையும் செலுலைட் உருவாக காரணம். அத்தோடு, ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவது, பரம்பரையாகவும் செலுலைட் உருவாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
அறிகுறிகள்
கப தோஷத்தினால் செலுலைட் உருவாகிறது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான அறிகுறிகளாக நம் உடம்பில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே வரிகள் ஏற்படும் சுருக்கங்கள் உருவாகும். தொட்டால் வலியை உணரலாம். கெட்டியான தசைகளில் ஊசியை வைத்து குத்தினால் வலி உணரப்படும். பின் கழுத்து வலி ஏற்படும். சளி பிடித்தது போன்று உணரப்படும். பதற்றம் ஏற்படும்.
வருமுன் காப்போம்
எந்த நோயையும் வருமுன் காப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். கொழுப்பு சத்துள்ள உணவுகளை நன்றாக சாப்பிட்டு விட்டு பின்னர் உடம்பில் கொழுப்பு கூடிவிட்டது என்று கூறுவதில் பயன் இல்லை. உணவு கட்டுப்பாட்டால் தான் செலுலைட் உருவாகுவதை தடுக்கலாம். வறுத்த, பொரித்த உணவுப் பொருட்கள், நெய், அசைவ உணவு ஆகியவற்றை சாப்பிடுவது குறைத்துக் கொள்ள வேண்டும்.
பட்டினி வேண்டாம்
செலுலைட் வந்து விட்டது என்பதற்காக எடையை குறைக்கிறேன் என்று பத்து நாள் பட்டினி கிடந்தால் நீங்கள்தான் பலவீனமாவீர்கள். உடற்பயிற்சியால் தற்போது இருக்கும் செலுலைட்டை தான் குறைக்க முடியும். ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது 1/2 மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்தால் தான் பயனளிக்கும்
யோகாசனம் நல்லது
ஆயுர்வேத மசாஜ் மூலமும், யோகாசம் மூலமும் செலுலைட் வராமல் தடுக்க முடியும். தண்ணீர் குடிப்பது குறைந்தாலும் செலுலைட் உருவாகும். அதனால் தினமும் பத்து டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.அதேபோல் மூலிகை தேநீர் அருந்துவதன் மூலம் செலுலைட் ஏற்படாமல் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தேய்த்து குளிங்க
தேங்காய் நார், பறவையின் கூடு போன்றவைகளைப் பயன்படுத்தி உடலை தேய்த்து குளிப்பது முன்னோர்களின் வழக்கம். இது எந்த அளவுக்கு நம் உடலுக்கு நல்லது என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் நார், உடலை தேய்க்கும் பிரஷ் போன்றவற்றை உபயோகிக்கவும். ஆங்காங்கே கொழுப்பு தேங்குவது தடுக்கப்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











