Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் தனசக்தி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் மலைப்போல குவியும்... -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 28 பிப்ரவரி 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண்செலவுகள் தேடிவரப்போகுதாம்...! -
30 ஆண்டு கழித்து மீனத்தில் உருவாகும் சக்திவாய்ந்த யோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
2026-ன் முதல் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டமும், துன்பமும் துரத்தப்போகுதாம்..உங்க ராசி என்ன -
கர்நாடகா ஸ்பெஷல் கெம்பு சட்னி ரெசிபி... ஒரு தடவை செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்...! -
உங்களுக்கு பிம்பிள் அதிகமா வருதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
எகிப்திய மகாராணிகள் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய எண்ணெய்கள் என்னென்ன தெரியுமா? நீங்களும் ட்ரை பண்ணுங்க...! -
ரம்ஜான் நோன்பு கஞ்சி: குக்கரில் 2 விசில்-ல சூப்பரா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க... -
40 வயதுக்குள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள 4 நட்சத்திரங்கள்... நீங்க பிறந்த நட்சத்திரம் இதுல இருக்கா?
இந்த ஒரு டம்ளர் டீ சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
சர்க்கரை நோயாளியாக இருந்து, நீங்கள் ஒரு டீ பிரியராக இருந்தால், செம்பருத்தி டீ குடிக்கலாம். இந்த செம்பருத்தி டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
இன்று உலகில் பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிதது வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றங்களும், மோசமான உணவுப் பழக்கங்களும் தான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதோடு சரியான நேரத்தில் தவறாமல் உணவுகளை உட்கொண்டு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

ஆனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஒருசில இயற்கை பானங்கள் உதவும். சர்க்கரை நோயாளியாக இருந்து, நீங்கள் ஒரு டீ பிரியராக இருந்தால், செம்பருத்தி டீ குடிக்கலாம். இந்த செம்பருத்தி டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இப்போது சரக்கரை நோயாளிகள் செம்பத்தி டீயை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.

செம்பருத்தி
செம்பருத்தி என்பது அழகாக இருக்கும் ஒரு வகையான பூ. பொதுவாக செம்பருத்தி செடியின் இலைகள், பூக்கள் என அனைத்துமே நன்மைகளை உள்ளடக்கியது. சிலர் செம்பருத்தியின் பூக்களை சாப்பிடுவார்கள். ஆனால் அந்த பூக்களைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம் என்பது தெரியுமா? ஆம், செரும்பருத்தி டீ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதன் பூக்கள் எவ்வளவு அழகாக இருக்குமோ, அதே அளவில் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்குகிறது.

செம்பருத்தியின் மருத்துவ பண்புகள்
செம்பருத்தியின் பூக்கள் மற்றும் இலைகளில் பீட்டா-கரோட்டின், வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. இவை தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. நீங்கள் சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், செம்பருத்திப் பூக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செம்பருத்தி டீ செய்முறை:
* செம்பருத்தி டீ தயாரிப்பதற்கு, முதலில் செம்பருத்திப் பூக்களை நீரில் கழுவி அதன் இதழ்களை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, இரண்டு செம்பருத்தி பூக்களின் இதழ்களை நீரில் போட்டு 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி, வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இந்த செம்பருத்தி டீயை தினமும் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இப்போது இந்த டீயின் பிற நன்மைகளைக் காண்போம்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்
மன அழுத்தத்தால் போராடிக் கொண்டிருப்பவர்கள், செம்பருத்தி டீயைக் குடித்து வருவது நல்லது. இந்த டீயைக் குடிப்பதனால், உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் நீங்கும். அதோடு இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

எடை இழப்பிற்கு உதவும்
செம்பருத்தி உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. செம்பருத்தியில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. எனவே செம்பருத்தி டீயைக் குடித்து வருவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

வைரல் தொற்றுகளை எதிர்த்து போராடும்
இன்று நம் கண்ணுக்கு தெரியாத பல கிருமிகள் நம்மை தாக்கி பெரும் அவஸ்தைப்பட வைக்கின்றன. குறிப்பாக பலர் வைரஸ் தொற்றுகளால் அடிக்கடி பாதிக்கப்படுவதுண்டு. இதைத் தவிர்க்க செரும்பருத்தி டீ உதவும். ஏனெனில் செரும்பருத்தியில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளன.



Click it and Unblock the Notifications











