For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' மூன்று பொருட்களை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கும் பானம் சர்க்கரை நோய் வராமல் தடுக்குமாம்!

நம் சமையலறைகளிலும் தோட்டங்களிலும் பல இயற்கையான பொருட்கள் உள்ளன. அவை அற்புதமான மருத்துவ குணங்களுடன் நிறைந்துள்ளன.அவை பல நோய்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் சிகிச்சையும் அளிக்கின்றன.

|

மனிதர்களாகிய நாம் எப்போதும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோம் என்ற பயம் இருக்கும் இல்லையா? நாம் சிந்திக்க கற்றுக்கொண்ட நாட்களிலிருந்தே, நோய்கள் மற்றும் இறப்பு பற்றிய பயம் நம்மில் வளர தொடங்குகிறது. ஏனென்றால், எல்லா மனிதர்கள் இந்த விஷயங்களுக்கு பயப்படுவது இயற்கையானது. ஏனெனில் நாம் உயிர்வாழும் உள்ளுணர்வுடன் கட்டமைக்கப்படுகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலில் மக்களின் மனநிலையையும் இதைப்போலவே உள்ளது. நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம். கொரோனா பரவலில் நம் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

Homemade Drink Can Reduce Diabetes Symptoms Naturally in Tamil

சில நோய்களால் அவர்கள் இறப்பதைக் கூட பார்க்கிறோம். எனவே, மற்றவற்றை விட ஆபத்தான நோய்கள் என்ன என்பது பற்றிய ஒரு யோசனை நமக்கு கிடைக்கிறது மற்றும் இதய நோய்கள், புற்றுநோய், எய்ட்ஸ் மற்றும் நீரிழிவு போன்ற பெரிய நோய்கள் அவற்றில் சில. இக்கட்டுரையில், வீட்டில் தயாரிக்கப்படும் பானம் இயற்கையாகவே சர்க்கரை நோய் அறிகுறிகளை எப்படி குறைக்கும்? எப்படி சிகிச்சை அளிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

நாம் ஏற்கனவே அறிந்திருப்பதைப் போல, நீரிழிவு நோய் என்பது ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும். இதில் உடலில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் இன்சுலின் ஏற்ற இறக்கம் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாகிறது. நீரிழிவு நோயின் அறிகுறிகள், அதிக தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுதல், மெதுவாக காயம் குணமாவது. மேலும், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, எடை ஏற்ற இறக்கங்கள், சோர்வு போன்றவை.

மருந்துகள்

மருந்துகள்

நீரிழிவு நோய்க்கு இப்போது நிரந்தர சிகிச்சை இல்லை. ஆனால் அதன் அறிகுறிகளை வழக்கமான மருந்துகள், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் உதவியுடன் சிகிச்சையளிக்கவும் நிர்வகிக்கவும் முடியும். நோயாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தினசரி அடிப்படையில் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். பல நேரங்களில் இறப்புக்கும் வழிவகுக்கிறது. ஆதலால், தான் சர்க்கரை நோயை நாள்பட்ட நோய் என்று கூறுகிறார்கள்.

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

நமக்குத் தெரியும், வலுவான இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை தினசரி அடிப்படையில் உட்கொள்வது, நோய்களின் அறிகுறிகளைக் குறைப்பதில் வேலை செய்தாலும், நீண்ட காலத்திற்கு நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, உங்கள் மருத்துவரிடம் பேசிய பிறகு, இயற்கையாகவே அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், மருந்துகளின் அளவைக் குறைக்கவும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.

இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம்

நம் சமையலறைகளிலும் தோட்டங்களிலும் பல இயற்கையான பொருட்கள் உள்ளன. அவை அற்புதமான மருத்துவ குணங்களுடன் நிறைந்துள்ளன.அவை பல நோய்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் சிகிச்சையும் அளிக்கின்றன. பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன. இயற்கை வைத்தியம் ஒரு சிறிய தலைவலி முதல் புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற பெரிய நோய்கள் வரை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். எனவே, நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைக்கும் இயற்கையான, வீட்டில் தயாரிக்கப்பட்ட பானம் இங்கே உள்ளது.

இயற்கை மருந்துகளின் சக்தி

இயற்கை மருந்துகளின் சக்தி

ஆயுர்வேதத்தின் பண்டைய மருத்துவ வடிவத்தைப் பற்றி நம்மில் பெரும்பாலோர் கேள்விப்பட்டிருப்போம், இது இந்தியாவில் தோன்றியது மற்றும் பல நோய்களைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் சக்திவாய்ந்த மருந்துகளைத் தயாரிக்க இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துகிறது. நவீன மருந்துகளை விட இயற்கை மருந்துகள் கொண்டிருக்கும் சிறந்த நன்மைகளில் ஒன்று, பக்கவிளைவுகள் இல்லாதது. ஏனெனில் அவற்றில் எந்த இரசாயனங்களும் உட்செலுத்தப்படுவதில்லை. அதனால், பக்கவிளைவுகளுக்கு பயப்படாமல், இயற்கையான மருந்துகளை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம்.

நீரிழிவு அறிகுறிகளை குணப்படுத்தும் இயற்கை பானம்

நீரிழிவு அறிகுறிகளை குணப்படுத்தும் இயற்கை பானம்

தேவையான பொருட்கள்

  • புதிதாக தயாரிக்கப்பட்ட நெல்லிக்காய் ஜூஸ் - 4 தேக்கரண்டி
  • இலவங்கப்பட்டை தூள் - 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 5-6
  • தயாரிக்கும் முறை:

    பரிந்துரைக்கப்பட்ட அளவு நெல்லிக்காய் சாறு, இலவங்கப்பட்டை தூள், கறிவேப்பிலை மற்றும் ½ கப் தண்ணீர் ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் சேர்க்கவும். ஒரு பானத்தை உருவாக்க நன்றாக அரைக்கவும். இந்த சாற்றை, தினமும் காலையில், காலை உணவுக்கு முன் குடிக்கவும். இந்த பானத்தில் சர்க்கரை அல்லது உப்பு சேர்க்க வேண்டாம்.

    கிடைக்கும் பலன்கள்

    கிடைக்கும் பலன்கள்

    நெல்லிக்காய் சாற்றில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும், இதனால் நீரிழிவு அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சீராக்கக்கூடிய சக்திவாய்ந்த நொதிகளைக் கொண்ட இலவங்கப்பட்டை மற்றொரு இயற்கை மூலப்பொருள் என்றும் பல ஆய்வுகள் காட்டுகின்றன.உணவு வகைகளாகப் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையில் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி இருப்பதால், சர்க்கரை நோய் அறிகுறிகளைக் குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் அதில் உள்ளன.

    வாழ்க்கை முறை மாற்றம்

    வாழ்க்கை முறை மாற்றம்

    நீரிழிவு அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கும் இந்த வீட்டு வைத்தியம் விதிவிலக்காக நன்றாக வேலை செய்யும். வழக்கமான அடிப்படையில், சரியான அளவுகளில் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்யப்பட்டால் மட்டுமே இந்த இயற்கை மருந்தை உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை முற்றிலுமாக நீக்குதல், சமச்சீரான உணவை உண்ணுதல், தினமும் மிதமான உடற்பயிற்சி செய்தல், புகைபிடித்தல் மற்றும் மது பானங்கள் போன்ற தீய பழக்கங்களை கைவிடுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

    வெந்தயம்

    வெந்தயம்

    வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். இவற்றில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயமின், நிகோட்டின் அமிலங்களும் நிறைந்து உள்ளன. அவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ சர்க்கரைநோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கிறது.

    நாவல் பழம்

    நாவல் பழம்

    நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். நாவல் பழக் கொட்டைகளை பொடியாக தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.

    இறுதிகுறிப்பு

    இறுதிகுறிப்பு

    எனவே, இந்த மூன்று இயற்கை பொருட்களின் கலவையானது நீரிழிவு அறிகுறிகளை திறம்பட குணப்படுத்தும். இந்த இயற்கை மருந்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும், உங்கள் மருத்துவரிடம் பேசும் வரை நீரிழிவு நோய்க்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளை நிறுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த இயற்கை பானத்தை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Drink Can Reduce Diabetes Symptoms Naturally in Tamil

Here we are talking about the Homemade Drink Can Reduce Diabetes Symptoms Naturally in Tamil.
Story first published: Monday, February 21, 2022, 18:02 [IST]
Desktop Bottom Promotion