Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
உடல் பருமனாக இருப்பவர்கள் எப்படி குளுகோஸ் அளவை குறைக்கலாம் ?
உடல் பருமனானவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான அறிகுறிகள் அதிகம். இதனை எப்படி தடுக்கலாமென ஃபீனிக்ஸிலுள்ள அரிஜோனா மாநில பல்கலைக் கழகம் ஆராய்ச்சி செய்தது.
இன்றைய காலங்களில் உடல் உழைப்பு என்பது அரிதாகவே இருக்கிறது. பெரும்பாலோனோர் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே குறைந்த பட்சம் 8 மணி நேரம் வேலை செய்கின்றனர்.

அவர்கள் தொடர்ந்து அமர்ந்த நிலையிலேயே இருந்தால், ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகரிக்கும். இதனை குறைக்க அலுவலக நேரத்திலேயே சில நிமிடங்கள் செலவிடலாம் என தலைமை ஆராய்ச்சியாளர் க்ளென் கேஸர் கூறுகிறார்.
இந்த ஆய்வில் உடல் பருமனான 9 பேரை ஈடுபடுத்தினர். அவர்கள் தொடர்ந்து உட்கார்ந்த நிலையில் 8 மணி நேரம் அமரும்போது, அவர்களின் ரத்தத்தில் குளுகோஸின் அளவை கண்காணித்தனர். பின்னர் அதற்கு அடுத்த வாரம், அடிக்கடி எழுந்து நிற்கச் சொல்லிக் கேட்டனர்.
அப்போதும் குளுகோஸின் அளவை கணக்கெடுத்தனர். அதற்கும் அடுத்த வாரம் கழித்து, நிற்பதற்கு பதிலாக அரைமணி நேர இடைவேளையில் ட்ரெட்மில்லில் நடக்கச் சொன்னார்கள். பின்னர் 4 வது வாரம் நடப்பதற்கு பதிலாக இடைவேளைகளில் சைக்கிள் பயிற்சி கொடுத்தார்கள்.
ஆராய்ச்சியின் இறுதியில் உட்கார்ந்த நிலையில் இருக்கும்போது, குளுகோஸின் அளவு ரத்தத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. நிற்கும்போது குறைந்தது. நடக்கும்போது இன்னும் அதிகமாக குளுகோஸின் அளவு குறைந்தது. அதே சைக்கிள் பயிற்சி செய்யும்போது குளுகோஸின் அளவு கணிசமாக ஆச்சரியப்படும்படி குறைந்தது என தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று பயிற்சியிலும் சைக்கிள் பயிற்சியில் 24 மணி நேரத்திற்குள்ளாகவே 12 சதவீதம் குறைந்து காணப்படுகிறது. காரணம் சாப்பிட்டவுடன் குளுகோஸின் அளவு அதிகரிக்கும்.
பொதுவாக தசைகளுக்கு சைக்கிள், உடற்பயிற்சி அளிக்கும்போது, தசைகள் குளுகோஸை உட்கிரகித்துக் கொள்ளும். பின்னர் அதனை லாக்டிக் அமிலமாக மாற்றி கல்லீரலுக்கு அனுப்பும். இந்த வளர்சிதையின்போது இன்சுலின் ஹார்மோனை அதிகமாக சுரக்கச் செய்யும். இதனால் குளுகோஸின் அளவு ரத்தத்தில் கட்டுக்குள் வருகிறது.
ஆகவே அவ்வப்போது சிறிய சிறிய பயிற்சியினால் குளுகோஸின் அளவை அதிகரிக்கச் செய்யாமல் இருக்கலாம். உடல் பருமன் சர்க்கரை வியாதியை உண்டு பண்ணும்.
சர்க்கரை வியாதி மற்ற வியாதிகளை கொண்டு வரும். இப்படி எல்லா வியாதிகளும் வருவதற்கு மூல காரனம் உடல் பருமன்தான். ஆகவே உடல் நலத்தில் அக்கறை கொண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது உங்களின் முக்கிய கடமைகளில் ஒன்று
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



