Latest Updates
-
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும்
உடல் பருமனாக இருப்பவர்கள் எப்படி குளுகோஸ் அளவை குறைக்கலாம் ?
உடல் பருமனானவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான அறிகுறிகள் அதிகம். இதனை எப்படி தடுக்கலாமென ஃபீனிக்ஸிலுள்ள அரிஜோனா மாநில பல்கலைக் கழகம் ஆராய்ச்சி செய்தது.
இன்றைய காலங்களில் உடல் உழைப்பு என்பது அரிதாகவே இருக்கிறது. பெரும்பாலோனோர் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே குறைந்த பட்சம் 8 மணி நேரம் வேலை செய்கின்றனர்.

அவர்கள் தொடர்ந்து அமர்ந்த நிலையிலேயே இருந்தால், ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகரிக்கும். இதனை குறைக்க அலுவலக நேரத்திலேயே சில நிமிடங்கள் செலவிடலாம் என தலைமை ஆராய்ச்சியாளர் க்ளென் கேஸர் கூறுகிறார்.
இந்த ஆய்வில் உடல் பருமனான 9 பேரை ஈடுபடுத்தினர். அவர்கள் தொடர்ந்து உட்கார்ந்த நிலையில் 8 மணி நேரம் அமரும்போது, அவர்களின் ரத்தத்தில் குளுகோஸின் அளவை கண்காணித்தனர். பின்னர் அதற்கு அடுத்த வாரம், அடிக்கடி எழுந்து நிற்கச் சொல்லிக் கேட்டனர்.
அப்போதும் குளுகோஸின் அளவை கணக்கெடுத்தனர். அதற்கும் அடுத்த வாரம் கழித்து, நிற்பதற்கு பதிலாக அரைமணி நேர இடைவேளையில் ட்ரெட்மில்லில் நடக்கச் சொன்னார்கள். பின்னர் 4 வது வாரம் நடப்பதற்கு பதிலாக இடைவேளைகளில் சைக்கிள் பயிற்சி கொடுத்தார்கள்.
ஆராய்ச்சியின் இறுதியில் உட்கார்ந்த நிலையில் இருக்கும்போது, குளுகோஸின் அளவு ரத்தத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. நிற்கும்போது குறைந்தது. நடக்கும்போது இன்னும் அதிகமாக குளுகோஸின் அளவு குறைந்தது. அதே சைக்கிள் பயிற்சி செய்யும்போது குளுகோஸின் அளவு கணிசமாக ஆச்சரியப்படும்படி குறைந்தது என தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று பயிற்சியிலும் சைக்கிள் பயிற்சியில் 24 மணி நேரத்திற்குள்ளாகவே 12 சதவீதம் குறைந்து காணப்படுகிறது. காரணம் சாப்பிட்டவுடன் குளுகோஸின் அளவு அதிகரிக்கும்.
பொதுவாக தசைகளுக்கு சைக்கிள், உடற்பயிற்சி அளிக்கும்போது, தசைகள் குளுகோஸை உட்கிரகித்துக் கொள்ளும். பின்னர் அதனை லாக்டிக் அமிலமாக மாற்றி கல்லீரலுக்கு அனுப்பும். இந்த வளர்சிதையின்போது இன்சுலின் ஹார்மோனை அதிகமாக சுரக்கச் செய்யும். இதனால் குளுகோஸின் அளவு ரத்தத்தில் கட்டுக்குள் வருகிறது.
ஆகவே அவ்வப்போது சிறிய சிறிய பயிற்சியினால் குளுகோஸின் அளவை அதிகரிக்கச் செய்யாமல் இருக்கலாம். உடல் பருமன் சர்க்கரை வியாதியை உண்டு பண்ணும்.
சர்க்கரை வியாதி மற்ற வியாதிகளை கொண்டு வரும். இப்படி எல்லா வியாதிகளும் வருவதற்கு மூல காரனம் உடல் பருமன்தான். ஆகவே உடல் நலத்தில் அக்கறை கொண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது உங்களின் முக்கிய கடமைகளில் ஒன்று
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



