Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
வாழ்க்கை முறை மாற்றத்தினால் நீரிழிவை சீராக வைக்கலாம்!!!
தற்போதைய நோய்களில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. இத்தகைய நோய் உண்மையில் முற்றிலும் குணமாகாது. ஆனால் அவற்றை அளவுக்கு அதிகமாகவிடாமல், சீராக வைக்க முடியும். இவை அனைத்தும் வாழும் வாழ்க்கை முறையைப் பொறுத்ததே ஆகும். ஆகவே நீரிழிவு இருப்பது தெரிந்துவிட்டால், பின் நிச்சயம் வாழும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் வேண்டும். இத்தகைய மாற்றங்களை மேற்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்க முடியும்.
ஆனால் அவ்வாறு வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வராவிட்டால், பின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரித்து, சில நேரங்களில் கண் தெரியாமல் கூட போய்விடும். மேலும் தற்போதைய அவசர உலகில் வாழ்க்கை முறையானது சரியாக இல்லை. அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு, அதிக வேலைப் பளுவினால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்பட்டு, உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, ஒருசில மாற்றங்களை அவ்வப்போது நிகழ்த்தினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, நீரிழிவு இருந்தாலும் அதிகரிக்காமல் இருக்கும்.
அதுமட்டுமின்றி, நீரிழிவைக் கட்டுப்படுத்த மருத்துவர் கொடுத்த போதிய மருந்துகளையும் மறக்காமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது எத்தகைய மாற்றங்களை பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போமா!!!

நடைப்பயிற்சி
இறுக்கமான வாழ்க்கை முறையில் நடைப்பயிற்சி ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான உடற்பயிற்சி. எனவே அலுவலகத்திற்கு செல்லும் போதோ அல்லது காலையில் எழுந்தோ சிறிது நேரம் நடைப்பயிற்சியை செய்யும் பழக்கத்தை கொள்ள வேண்டும். இதனால் உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்.

யோகா
சில ஸ்பெஷல் யோகாசனங்களை செய்து வந்தாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். எனவே தினமும் உடலை பிட்டாகவும், நீரிழிவை சரிசெய்யவும் யோகாசனங்களை செய்ய வேண்டும்.

இயற்கை இனிப்புகள்
செயற்கை இனிப்பான சர்க்கரையை உணவில் சேர்ப்பதை தவிர்த்து, இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் சுகர்-ப்ரீ போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

மனஅழுத்தத்தை குறைப்பது
தற்போது நிறைய பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அதிகப்படியான வேலை அழுத்தம் தான். எனவே அதனை சரிசெய்ய அவ்வப்போது தியானம் செய்வதைப் பழக்கமாக கொள்ள வேண்டும்.

கார்போஹைட்ரேட்டை தவிர்ப்பது
டயட்டில் கார்போஹைட்ரேட்டை அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஒளிச்சேர்க்கை செய்யும் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் உருளைக்கிழங்கை அறவே தவிர்க்க வேண்டும். இந்த இரண்டையும் சிறிது கூட உணவில் சேர்க்கக் கூடாது. அதற்கு பதிலாக ப்ரௌன் அரிசி, கோதுமை பிரட் மற்றும் தினை மாவு போன்றவற்றை அளவாக சேர்த்துக் கொள்ளலாம்.

எடை
அளவான எடை இருந்தால், நீரிழிவை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். அதற்கு அதிக எடையும், நீரிழிவும் உள்ளவர்கள், எடையை குறைக்கும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

மாத்திரைகள் சாப்பிடுவது
என்னதான் வாழ்க்கை முறையை மாற்றினாலும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மாத்திரை மற்றும் மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இல்லையெனில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலின் மற்ற அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படும்.

அடிக்கடி சாப்பிடுவது
நீரிழிவு இருந்து, அதனை தடுப்பதற்கு மருந்துகளை உட்கொள்ளும் போது, இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடாவிட்டால், பின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து ஆபத்தான நிலையை உண்டாக்கிவிடும்.

அடிக்கடி இரத்த பரிசோதனை
மாதத்திற்கு ஒரு முறை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும். பின், அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.

ஆல்கஹால்
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, ஆல்கஹால் மிகப் பெரிய எதிரி. ஏனெனில் இதில் சர்க்கரை மற்றும் கொழுப்புக்கள் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஆல்கஹாலில் எளிய சர்க்கரைகள் இருப்பதால், எளிதில் ஆக்ஸிஜனேற்றப்படுகிறது.

முழு உடல்நல பரிசோதனை
நீரிழிவு என்பது சாதாணமான நோய் அல்ல. அது முற்றினால் உடலின் மற்ற உறுக்கபுளான கண்கள், சிறுநீரகம், இதயம் மற்றும் பல உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடலை முழுமையாக பரிசோதித்துவிட வேண்டும்.



Click it and Unblock the Notifications











