Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஸ்வீட் அதிகம் சாப்பிடுவதை எப்படி நிறுத்தலாம்!!!

உடலில் இருக்கும் சத்துக்களில் பற்றாக்குறை ஏற்பட்டால் தான், பசி ஏற்படும். மேலும் எப்போதெல்லாம் இனிப்பு சாப்பிட வேண்டும் என்பது போல் தோன்றுகிறதோ, அப்போதும் பசி ஏற்படும். ஆனால் உண்மையில் அவ்வாறு பசி ஏற்படுவதற்கு புரோட்டீன் குறைபாடு ஆகும். அவ்வாறு பசி ஏற்பட்டால், புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அதிலும் இந்த நேரத்தில் பதப்படுத்தப்பட்ட பாலால் ஆன உணவுப் பொருட்களை உண்பதை விட, முட்டை, சிக்கன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் எப்போதும் பசி ஏற்படாமல் இருப்பதோடு, இனிப்பை சாப்பிட வேண்டும் என்ற நினைத்தாலும் சாப்பிட முடியாது.
வீட்டில் இருக்கும் போது தெருவில் பல இனிப்பு பண்டங்களை விற்றுக் கொண்டு செல்வார்கள். அப்போது எந்த ஒரு வேலையும் இல்லாமல் வீட்டில் படுத்துக் கொண்டு இருக்கும் போது, அதனை வாங்கி சாப்பிடலாம் என்று தோன்றும். ஆகவே அப்போது எண்ணத்தை அதன் மேல் செலுத்தாமல், ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடலாம். உதாரணமாக வாக்கிங், ஜாக்கிங், படம் பார்த்தல், புத்தம் படித்தல் போன்றவாறு கவனத்தை திசைத் திருப்பலாம்.
இல்லை எதாவது சாப்பிட்டாக வேண்டும் என்று இருப்பவர்கள், அந்த நேரத்தில் சுவையான பழங்களை வாங்கி சாப்பிடலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் கூடாமல் இருக்கும்.
இரத்ததில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தாலும் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்போது இத்தகைய பசியை சரிசெய்ய, காலை வேளையில் உண்ணும் உணவில், சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் உணவுகளை உண்ணலாம். அதிலும் தானியங்கள், செயற்கை முறையில் தயாரிக்கும் இனிப்பான உணவுப் பொருட்கள் போன்றவற்றை தவிர்த்து, சிவப்பு அரிசி, புரோட்டீன் நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை உண்ணலாம். முக்கியமாக மதிய வேளையில் 3 மணிக்கு முன்பு இனிப்புகள் உண்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நாள் முழுவதும் பசித்துக் கொண்டே இருக்கும். காய்கறிகளால் ஆன ஜூஸ் வேண்டுமென்றால் சாப்பிடலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எந்த ஒரு நோயும் உடலைத் தாக்காமல் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications