Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நீரிழிவு நோயாளிகளுக்கு டிபி வரும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்

நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு காசநோய் தாக்கினால் அவர்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு 5 மடங்கு அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களில் வசிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்குதல் அதிகம் இருக்கிறது. அவர்களில் பெரும்பாலோனோருக்கு வருங்காலத்தில் காசநோய் பாதிப்பு ஏற்ழுடும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் ஆய்வை மேற்கொண்டவர்கள்.
கோபென்கேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தான்சானியாவில் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது, மனிதர்களை தாக்கும் நீரிழிவு நோய் கண், காது, நரம்பு மண்டலங்களை பாதிப்பதோடு அவர்களுக்கு காசநோய் தாக்குதலையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது நிபுணர்களின் கருத்து.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் காசநோயினால் பாதிக்கப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். எனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஆய்வை மேற்கொண்ட டேனியல். எனவே நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் காசநோய் ஏற்படுவதையும் தடுக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலும் காசநோய் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு நீரிழிவு பரிசோதனை மேற்கொண்டு சரியான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications