நீரிழிவு நோயாளிகளுக்கு டிபி வரும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்

By Mayura Akilan

Tuberculosis
உலக அளவில் பெரும்பாலோனோர் இன்றைக்கு டிபி எனப்படும் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உடம்பை உருக்கி வாழ்நாள் முழுவதும் வேதனையை ஏற்படுத்திவிடும். நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு காசநோய் வரும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு காசநோய் தாக்கினால் அவர்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு 5 மடங்கு அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களில் வசிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்குதல் அதிகம் இருக்கிறது. அவர்களில் பெரும்பாலோனோருக்கு வருங்காலத்தில் காசநோய் பாதிப்பு ஏற்ழுடும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் ஆய்வை மேற்கொண்டவர்கள்.

கோபென்கேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தான்சானியாவில் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது, மனிதர்களை தாக்கும் நீரிழிவு நோய் கண், காது, நரம்பு மண்டலங்களை பாதிப்பதோடு அவர்களுக்கு காசநோய் தாக்குதலையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது நிபுணர்களின் கருத்து.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் காசநோயினால் பாதிக்கப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். எனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஆய்வை மேற்கொண்ட டேனியல். எனவே நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் காசநோய் ஏற்படுவதையும் தடுக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும் காசநோய் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு நீரிழிவு பரிசோதனை மேற்கொண்டு சரியான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, November 6, 2012, 13:45 [IST]
Desktop Bottom Promotion