Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
நீரிழிவு நோயாளிகளுக்கு டிபி வரும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்

நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு காசநோய் தாக்கினால் அவர்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு 5 மடங்கு அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களில் வசிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்குதல் அதிகம் இருக்கிறது. அவர்களில் பெரும்பாலோனோருக்கு வருங்காலத்தில் காசநோய் பாதிப்பு ஏற்ழுடும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் ஆய்வை மேற்கொண்டவர்கள்.
கோபென்கேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தான்சானியாவில் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது, மனிதர்களை தாக்கும் நீரிழிவு நோய் கண், காது, நரம்பு மண்டலங்களை பாதிப்பதோடு அவர்களுக்கு காசநோய் தாக்குதலையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது நிபுணர்களின் கருத்து.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் காசநோயினால் பாதிக்கப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். எனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஆய்வை மேற்கொண்ட டேனியல். எனவே நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் காசநோய் ஏற்படுவதையும் தடுக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலும் காசநோய் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு நீரிழிவு பரிசோதனை மேற்கொண்டு சரியான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications