Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்..
90% மக்கள் புறக்கணிக்கும் குடல் புற்றுநோயின் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
Colon Cancer: உலகளவில் அதிகளவில் மரணம் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது புற்றுநோய். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு நோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
குறிப்பாக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், மரணத்தைத் தவிர்க்கலாம். ஆனால் தற்போது நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளின் ஆரம்ப கால அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், மக்கள் குழப்பமடைந்து, அந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

புற்றுநோய்களிலேயே மிகவும் பொதுவான புற்றுநோய் தான் பெருங்குடல் புற்றுநோய். இதை குடல் புற்றுநோய் என்றும் அழைப்பார்கள். சொல்லப்போனால் இது உடலைத் தாக்கும் மூன்றாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் இந்த வகை புற்றுநோயின் அபாயத்தைக் கொண்டுள்ளோம் என்பது தெரியுமா?
சமீப காலமாக சர்க்கரை நோயைப் போன்றே, இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே போதுமானதாக இல்லை என்பதே. உண்மையைக் கூற வேண்டுமானால், பெருங்குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், 100% முழுமையாக குணமாகலாம்.
எனவே தமிழ் போல்ட்ஸ்கை பெருங்குடல் புற்றுநோயின் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை கீழே கொடுத்துள்ளது. அந்த அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்து, சிகிச்சையை உடனே மேற்கொள்ளுங்கள்.
மலத்தில் இரத்தம்
ஒருவரது மலத்தில் இரத்தம் கசிவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் அது ஆரோக்கியமற்ற குடலின் முக்கிய அறிகுறி. முக்கியமாக குடல் புற்றுநோயின் பொதுவான ஆரம்ப கால அறிகுறி. அதுவும் அடர் சிவப்பு நிறத்தில் சளியுடன் கலந்து மலம் வெளியேறுவதை நீங்கள் கவனித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மலக்குடல் இரத்தக்கசிவு
குடல் புற்றுநோயின் மிகவும் நிலையான அறிகுறிகளில் ஒன்று மலக்குடல் இரத்தக்கசிவு. இந்த வகையான இரத்தக்கசிவை மலம் கழிக்கும் போது அல்லது மலம் கழிக்காத போதும் காணலாம். பெரும்பாலானோர், மலக்குடல் இரத்தக்கசிவிற்கு பின் கடுமையான வலி அல்லது அசௌகரியத்தை சந்திப்பார்கள். எனவே உங்கள் ஆசனவாயில் இருந்து இரத்தக்கசிவைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மலம் கழிப்பதில் சிரமம்
குடல் புற்றுநோயை இருந்தால், ஒருவர் மலம் கழிப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். நிறைய நோயாளிகள் மலத்தை வெளியேற்ற முடியாமல் அவதிப்படுவார்கள். வயிற்று உப்புசத்துடன், கடுமையான மலச்சிக்கலை அனுபவித்தால், அவர்களுக்கு குடல் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே உங்களின் குடலியக்கத்தில் நீங்கள் மாற்றங்களைக் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
எதிர்பாராத எடை இழப்பு
நீங்கள் திடீரென்று எதிர்பாராத எடை இழப்பை சந்திந்தால், அதற்கு மகிழ்ச்சியடைய வேண்டாம். ஏனெனில் இது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் பசியின்மை மற்றும் நாள்பட்ட மலச்சிக்கலுடன், எடை இழப்பை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுக்காமல், உடனே மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
வாந்தி/குமட்டல்
திடீரென்று எந்த காரணமும் இல்லாமல் உங்களுக்கு வாந்தி அல்லது குமட்டலை அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் அது குடல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். சில சமயங்களில் பெருங்குடல் புற்றுநோயாக இருந்தால் மற்ற அறிகுறிகள் தென்படுவதற்கு முன் இந்த அறிகுறிகள் வெளிப்படும். ஆகவே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.
குடல் புற்றுநோய் ஒரு ஆபத்தான நோய். இதற்கு எதிரான சிறந்த பாதுகாப்பு ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை பெறுவது தான். எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். மேலும் உண்ணும் உணவுகளில் கவனத்தை செலுத்துங்கள். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுங்கள். மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பது போன்ற கெட்டப் பழக்கங்களை கைவிடுங்கள். இவற்றை ஒருவர் சரியாக பின்பற்றி வந்தால், குடல் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














