Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
நடிகர் அக்ஷய் குமாருக்கு 3-வது முறையாக கொரோனா.. அப்ப மீண்டும் இந்தியாவில் கோவிட் தலைதூக்கப் போகுதா?
Akshay Kumar Tests Positive For Coivd-19: பாலிவுட் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான அக்ஷய் குமாருக்கு மூன்றாவது முறையாக கொரோனா தாக்கியுள்ளது. 56 வயதிலும் இன்னும் ஃபிட்டாக உடலைப் பராமரித்து வரும் நடிகர் அக்ஷய் குமார், ஜூலை 12 ஆம் தேதி வெளிவரவிருந்த தனது 'சர்ஃபிரா' என்னும் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் மிகவும் பிஸியாக சுற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரது உடலில் வெளிப்பட்ட அறிகுறிகளைத் தொடர்ந்து அவருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

நடிகர் அக்ஷய் குமாருக்கு முதல் முறையாக கோவிட் வைரஸ் தாக்கவில்லை, இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் ஏப்ரல் 2021 ஆம் ஆண்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தர். அதன் பின் 2022 ஆம் ஆண்டில் மீண்டும் கோவிட்-19 வைரஸ் தாக்கியது.
இதனால் அவரால் அப்போது நடந்த கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது முறையாக கோவிட்-19 வைரஸ் தாக்கி, திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
மீண்டும் இந்தியாவில் கோவிட்-19 தலைத் தூக்கப் போகிறதா?
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கோவிட்-19 வழக்குகள் இன்னும் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன. அதுவும் தற்போது FLiRT வகை கோவிட் மாறுபாடுகளான KP.2, JN.1.7, மற்றும் பிற KP மற்றும் JN வகை பிறழ்வுகளின் வழக்குகள் பதிவாதி வருகின்றன. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் படி, FLiRT மாறுபாடு என்பது ஸ்பைக் புரோட்டீனில் உள்ள 456, 346, 572 ஆகிய நிலைகளில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கின்றன.
இந்த வகை மாறுபாடு முந்தைய வகை கோவிட் மாறுபாடுகளை விட வேறுபட்டது. இதுவரை இந்தியாவில் இந்த வகை மாறுபாட்டின் வழக்குகள் அதிகம் பதிவாகியிருப்பது தெரியாவிட்டாலும், நடிகர் அக்ஷய் குமாருக்கு கோவிட் தொற்று ஏற்பட்ட பின், எங்கு மீண்டும் இந்தியாவில் கோவிட்-19 தலைத் தூக்கிவிடுமோ என்ற அச்சம் பலரது மனதில் எழுந்திருக்கும்.
கவனிக்க வேண்டிய கோவிட்-19 பொதுவான அறிகுறிகள்
கோவிட்-19 அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும். அதுவும் தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், நிச்சயம் பலரும் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். முக்கியமாக இவை அனைத்தும் கொரோனா அறிகுறிகளைப் போன்றே இருப்பதால், பலர் கண்டுகொள்ளாமல் இருக்க வாய்ப்புள்ளது. இப்போது எந்த அறிகுறிகளை எல்லாம் ஒருவர் சந்தித்தால், அது கோவிட்-19ன் அறிகுறிகள் என்பதைக் காண்போம்.
* காய்ச்சல்
* தொடர்ச்சியான இருமல். அதோடு தொண்டை புண் மற்றும் தொண்டை கரகரப்பு
* மூசசு விடுவதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல்
* மிகுந்த உடல் சோர்வு
* தலை மற்றும் உடல் வலி
* சுவை அல்லது மணம் இழப்பு
* தலைவலி
* மூக்கு ஒழுகல் அல்லது மூக்கடைப்பு
* குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அடிவயிற்று வலி
உடனே மருத்துவ உதவி பெற வேண்டியதைக் குறிக்கும் அறிகுறிகள்
கோவிட்-19 தொற்றின் பெரும்பாலான வழக்குகள் மிதமானது முதல் தீவிரமான வரையிலான அறிகுறிகள் உள்ளன. இப்போது எந்த அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பதைக் காண்போம்.
* மூச்சு விட முடியாமல் திணறுவது
* நெஞ்சு வலி அல்லது நெஞ்சு பகுதியில் அழுத்தம்
* மனக்குழப்பம்
* ஆக்ஸிஜன் குறைபாட்டால் உதடு அல்லது முகம் நீல நிறத்தில் காணப்படுவது
தடுக்கும் வழிகள்
கோவிட்-19 தொற்றைத் தடுக்கவும், அதன் அபாயத்தைக் குறைக்கவும் ஒவ்வொருவரும் பின்வரும் விஷயங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவை:
* பொது இடங்களுக்கு செல்லும் போது அல்லது கூட்ட நெரிசல் நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது தவறாமல் மாஸ்க்குகளை அணியுங்கள்.
* எப்போதும் மற்றவர்களிடம் இருந்து, அதாவது உங்கள் வீட்டில் உள்ளவர்களைத் தவிர, மற்றவர்களிடம் குறைந்தது 6 அடி தூர இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.
* எப்போது வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததாலும் கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். ஒருவேளை சோப்பு கிடைக்காவிட்டால், சானிடைசரைப் பயன்படுத்துங்கள்.
* அதிக கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் வைரஸ் பரவலைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications