Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஆன்டிபயாடிக்கால் அடுத்த 25 ஆண்டுகளில் 39 மில்லியனுக்கும் அதிகமான மரணம் ஏற்படலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Antibiotic Resistance: ஆன்டிபயாடிக் எதிர்ப்பு கடந்த சில காலமாகவே கவலையாகவே இருந்து வருகிறது. அதுவும் சமீபத்தில் லான்செட் நாளிதழிலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு பெரிய அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளது.
அது என்னவெனில், முந்தைய ஆண்டுகளின் தரவுகளின் படி 1990 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு காரணமாக உலகெங்கிலும் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறந்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த 25 ஆண்டுகளில் இந்த ஆன்டிபயாடிக் எதிர்ப்பால் சுமார் 39 மில்லியனுக்கும் அதிகமான மரணம் ஏற்படக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது. அதுவும் இந்த ஆன்டிபயாடிக் எதிர்ப்பால் எந்த பகுதியில் இறப்புகள் அதிகம் ஏற்படும் என்பது குறித்தும் லான்செட் நாளிதழில் வெளிவந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் இந்த ஆன்டிபயாடிக் எதிர்ப்புகளால் ஏற்படக்கூடிய இறப்புகள் உலகம் முழுவதும் புவியியல் இருப்பிடங்களைப் பொறுத்து வேறுபடும். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பகுதிகளில் இப்படியான இறப்புகள் அதிகமாக ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆன்டிபயாடிக் எதிர்ப்பு என்றால் என்ன?
ஆன்டிபயாடிக்குகள் என்பவை மருத்துவர்களால் குறிப்பிட்ட நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட மருந்தாகும். இந்த மருந்தை நோயாளிகள் மருத்துவர் கூறிய அளவுகளுடன், குறிப்பிட்ட கால அளவில் எடுத்து வருவதுண்டு. இந்த வகையான மருந்துகள் பூஞ்சை மற்றும் பாக்டிரியாக்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில நேரங்களில் இந்த மருந்துகள் நுண்ணுயிரிகளின் பரிணாமம் மற்றும் பிறழ்வுகளால் திறம்பட செயல்பட முடியாமல் போய், உடலில் உள்ள செல்களையே தாக்க ஆரம்பித்துவிடும்.
இந்த ஆய்வில் வேறு என்னவெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
உலகளவில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பால் மரணங்கள் அதிகரித்து வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் பரிணாமம் அல்லது போக்கு பற்றிய முதல் உலகளாவிய பகுப்பாய்வு ஆகும்.
நுண்ணுயிர் எதிர்ப்பின் தலைப்பில் முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, 1990 மற்றும் 2021 க்கு இடையில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுள் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்திற்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று வெளிப்படுத்தியது.
மேலும் எதிர்காலத்திலும் இது இப்படியே மக்களை பாதிக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதாவது வயதானவர்கள் சற்று அதிகமாக பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே வேளையில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படும் இறப்பு வழக்குகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறையலாம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











