Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
முலாம்பழம் உங்களுக்கு பிடிக்குமா? அதுல இருக்கிற இந்த பிரச்னையும் தெரிஞ்சிக்கோங்க
இங்கே முலாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் பற்றி விளக்கமாகக் கொடுக்கபட்டுள்ளன.
கிர்னி பழம், தர்பூசணி மற்றும் தேன் முலாம் பழம் இனி திரும்பிய இடமெல்லாம் கிடைக்கும். வெயில் காலத்திற்கு ஏற்ற ஜீஸ் பழங்கள் இவை. சுவை மற்றும் சத்துகள் நிறைந்தது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இந்த பழங்கள் கண் பார்வையை அதிகரிக்க, இரத்த அழுத்தத்தை சீராக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த முலாம் பழங்கள் பயன்படுகிறது.

முலாம்பழம்
ஆதிகாலத்தில் இருந்தே இந்த பழங்கள் நம் உணவு அட்டவணையில் உள்ளது. ' குணப்படுத்தும் மருந்துகள் ' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது படி முலாம் பழத்தில் பிட்டா கேரோட்டின், விட்டமின் சி மற்றும் பல விதமான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து உள்ளன. பொட்டாசியம் நிறைந்த இந்த பழங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிப்படி இந்த பழத்தையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இரத்த சர்க்கரை அளவு
மெலிட்டஸ் எனப்படும் நீரிழிவு நோய் இரத்த சர்க்கரை அல்லது குளுக்கோஸ் கூடுவதால் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா கூறுகிறார் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதால் நீரிழிவு நோயாளிகள் முலாம் பழத்தை தவிர்க்க வேண்டும் என்று. தர்பூசணி பழத்தில் கிளைசிமிக் அளவு 72 இது மிக அதிகம். பரங்கிகாயில் 90% நீர்ச்சத்து தான் உள்ளது. ஆனாலும் இதில் 9% இனிப்பு சத்துகள் உள்ளது. இந்த பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

இரைப்பை பாதிப்புகள்
ஆயுர்வேத மருத்துவ குறிப்பின்படி குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்து உண்பதால் நம் இரைப்பையின் செயல்பாட்டை பாதிக்கிறது . மருத்துவர் வசந்த் லாட் தன்னுடைய புத்தகத்தில் எல்லா வகையான முலாம் பழத்தையும் தனியாக சாப்பிடுங்கள் இல்லையென்றால் சாப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் இந்த பழங்களை எதனுடனும் சேர்த்து சாப்பிட கூடாது என தெரியலாம். பெங்களூரில் உள்ள மருத்துவர் அஞ்சு, நிறைய முலாம் பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார். முலாம் பழத்தில் தண்ணீர்,இனிப்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நாம் இதை சாப்பிட்ட பின் தண்ணீர் அதிகம் குடித்தால் பாக்டீரிய மற்றும் நுண்ணியிர் தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு
மருத்துவர் ஷில்பா கூறுகிறார் முலாம் பழங்களை இரவில் கண்டிப்பாக சாப்பிட கூடாது என்று. இந்த பழங்களை செரிமானம் செய்வது இரவு நேரங்களில் நமது இரைப்பைக்கு மிகவும் கடினமானது. பொதுவாகவே உணவு செரிமானம் இரவு நேரங்களில் மந்தமாக தான் நடக்கும். எனவே இந்த நேரங்களில் இனிப்பு மற்றும் அசிடிட்டி நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தர்பூசணி பழத்தில் இயற்கையான இனிப்பு அதிகம் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் இனிப்பு மற்றும் அசிடிட்டி நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால் நமது உறக்கம் பாதிப்பு அடையும்.

அத்தியாவசியமான மற்ற சத்துகள்
உங்களுக்கு முலாம் பழம் பிடிக்குமா?. எவ்வளவு தந்தாலும் சாப்பிடுவிர்களா? ஆனால் இதை மட்டுமே சாப்பிடாமல் மற்ற ஊட்டச்சத்து உணவு வகைகளையும் சாப்பிட வேண்டும். முலாம் பழம் மட்டுமே சாப்பிட்டால் கொழுப்பு மற்றும் புரதம் மட்டுமே உடலில் சேரும். நமது உடலுக்கு எல்லா விதமான சத்துக்களும் வேண்டும்.

வயிற்றுப் போக்கு
தர்பூசணி பழத்தில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும் என சில மருந்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். தர்பூசணி பழத்தில் சோர்பிட்டோல் என அழைக்கப்படும் ஒரு மூலப் பொருள் உள்ளது. இது போதுமான அளவில் எடுத்து கொண்டால் பிரச்சினை இல்லை ஆனால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு மற்றும் வாயுத்தொல்லை ஏற்படும்.
ஒரு பழத்தை நமக்கு பிடிக்கும் என்பதால் அதிகம் சாப்பிட்டு அதனால் தொல்லை அனுபவிக்க கூடாது. அதனால் முலாம் பழம் சீசன் வரும் போது எல்லாம் விதமான முலாம் பழத்தையும் கொஞ்சமாக சாப்பிட்டு பாருங்கள்.



Click it and Unblock the Notifications