Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
சுதந்திர தின விழாவின் போது ராஜஸ்தானி ஸ்டைல் தலைப்பாகை அணிந்து வந்த பிரதமர் மோடி!
Independence Day 2023: இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையை அடைவதற்கு முன்பு பிரதமர் ராஜ்காட் வந்து நாட்டு மக்களுக்கு உடையாற்றினார். பாரதத்தின் பிரதமரான மோடி அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும், அவரது ஸ்டைல்கள் அதிகமாக பேசப்படுவதுண்டு.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் 77 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும் போது பிரதமர் மோடி பல வண்ணங்களைக் கொண்ட ராஜஸ்தானி ஸ்டைல் தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.

அதுவும் இந்த விழாவிற்கு இவர் வெள்ளை நிற குர்தா, வெள்ளை நிற பேண்ட், சதுர வடிவ பாக்கெட் கொண்ட ஜாக்கெட் போன்றவற்றிற்கு பொருத்தமாகக்கூடிய பல வண்ணங்களைக் கொண்ட தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.
பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தலைப்பாகை அணியும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். அதில் 2022 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தேசிய கொடியின் நிறங்களுடன் பொருந்தக்கூடிய காவி, பச்சை, வெள்ளை கொண்ட தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.
அதேப் போல் 2021 ஆம் ஆண்டில் சிவப்பு நிறத்துடன் காவி கலந்த தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார். 2020 ஆம் ஆண்டில் காவி மற்றும் க்ரீம் நிற தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.
77 ஆவது சுதந்திர தினமானது அசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் இறுதியைக் குறிக்கிறது. இந்த அசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டமானது 2021 ஆம் ஆண்டு 75 ஆவது ஆண்டை நினைவுக்கூறும் வகையில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செங்கோட்டையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரைக்கு முன்னதாக, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications











