சுதந்திர தின விழாவின் போது ராஜஸ்தானி ஸ்டைல் தலைப்பாகை அணிந்து வந்த பிரதமர் மோடி!

Independence Day 2023: இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையை அடைவதற்கு முன்பு பிரதமர் ராஜ்காட் வந்து நாட்டு மக்களுக்கு உடையாற்றினார். பாரதத்தின் பிரதமரான மோடி அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும், அவரது ஸ்டைல்கள் அதிகமாக பேசப்படுவதுண்டு.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் 77 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும் போது பிரதமர் மோடி பல வண்ணங்களைக் கொண்ட ராஜஸ்தானி ஸ்டைல் தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.

Independence Day 2023: PM Modi wears Rajasthani-style turban On Independence Day 2023

அதுவும் இந்த விழாவிற்கு இவர் வெள்ளை நிற குர்தா, வெள்ளை நிற பேண்ட், சதுர வடிவ பாக்கெட் கொண்ட ஜாக்கெட் போன்றவற்றிற்கு பொருத்தமாகக்கூடிய பல வண்ணங்களைக் கொண்ட தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.

பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தலைப்பாகை அணியும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். அதில் 2022 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தேசிய கொடியின் நிறங்களுடன் பொருந்தக்கூடிய காவி, பச்சை, வெள்ளை கொண்ட தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.

அதேப் போல் 2021 ஆம் ஆண்டில் சிவப்பு நிறத்துடன் காவி கலந்த தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார். 2020 ஆம் ஆண்டில் காவி மற்றும் க்ரீம் நிற தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.

77 ஆவது சுதந்திர தினமானது அசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் இறுதியைக் குறிக்கிறது. இந்த அசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டமானது 2021 ஆம் ஆண்டு 75 ஆவது ஆண்டை நினைவுக்கூறும் வகையில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செங்கோட்டையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரைக்கு முன்னதாக, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Story first published: Tuesday, August 15, 2023, 9:40 [IST]
Desktop Bottom Promotion