Latest Updates
-
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
தேசிய விருதைப் பெற பட்டு வேஷ்டி சட்டை அணிந்து காதல் மனைவி ஜோதிகாவுடன் க்யூட்டாக வந்த சூர்யா!
கொரோனா லாக்டவுன் காரணமாக 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான விருதுகள் 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில் தமிழில் வெளிவந்த 'சூரரைப் போற்று' என்னும் திரைப்படம் 5 விருதுகளை அள்ளியது.
சமீபத்தில் டெல்லியில் 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். கொரோனா லாக்டவுன் காரணமாக 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான விருதுகள் 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில் தமிழில் வெளிவந்த 'சூரரைப் போற்று' என்னும் திரைப்படம் 5 விருதுகளை அள்ளியது.

அவற்றில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா பெற்றார் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதை சுதா கொங்கரா பெற்றார். மேலும் சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளி பெற்றார். முக்கியமாக இப்படத்தை தயாரித்த 2D நிறுவனத்தின் தயாராரிப்பாளரான நடிகை ஜோதிகா பெற்றார். கீழே 2022 ஆம் ஆண்டில் தேசிய விருதைப் பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகாவின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதை வென்ற நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தேசிய விருதை வாங்குவதற்கு பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டையில் அழகாக வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த தாடி ஸ்டைல் ஒரு கம்பீரமான தோற்றத்தை வெளிக்காட்டியது. இது சூர்யா விருதை வாங்கும் போது எடுத்த போட்டோ.

தேசிய விருதை வென்ற நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா மிகவும் அழகான க்ரீம் மற்றும் கிரே நிற சில்க் புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் வெள்ளி நகைகளை அணிந்து, தலைக்கு மல்லிகைப் பூ வைத்து, நெற்றியில் வட்ட வடிவ பொட்டு வைத்து கொண்டு தனது தோற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

அழகிய ஜோடி
திரையுலகில் எத்தனையோ நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுள் அஜித்-ஷாலினிக்கு அடுத்தப்படியாக ஏராளமானோரின் மனதில் சிறந்த தம்பதிகள் என்ற பெயரைப் பெற்றவர்கள் தான் சூர்யா-ஜோதிகா. இதை இந்த தேசிய விருது விழாவிலும் ஒரே நிறத்திலான உடையை அணிந்து வந்து சிறந்த தம்பதி என்பதை வெளிக்காட்டியுள்ளனர் என்றே கூறலாம்.

சூரரைப் போற்று குழுவுடன்..
இது இயக்குநர் சுதா கொங்கரா, நடிகை அபர்ணா பாலமுரளி மற்றும் தயாரிப்பாளரும் தனது ஆசை மனைவியுமான ஜோதிகாவுடன் சூர்யா எடுத்த செல்ஃபி போட்டோ.

ஜோவுடன் சூர்யா
இது 68 ஆவது தேசிய விருது விழா நடக்கும் இடத்தில் தனது காதல் மனைவியான ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா சேர்ந்து எடுத்த செல்ஃபி போட்டோ.

தியா-தேவ்
இது சூர்யாவும், ஜோதிகாவும் தாங்கள் வாங்கிய தேசிய விருதை தியா மற்றும் தேவ் உடன் சேர்ந்து எடுத்த போட்டோ. இந்த போட்டோவில் தியா அப்படியே ஜோதிகா மாதிரியும், தேவ் சூர்யாவைப் போன்றும் உள்ளனர் தானே!

தந்தை-தாயுடன் சூர்யா
இது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தாங்கள் வாங்கிய விருதை தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வைத்துக் கொண்டு சந்தோஷமாக எடுத்த போட்டோ.
Image Courtesy: Instagram



Click it and Unblock the Notifications