Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
தேசிய விருதைப் பெற பட்டு வேஷ்டி சட்டை அணிந்து காதல் மனைவி ஜோதிகாவுடன் க்யூட்டாக வந்த சூர்யா!
கொரோனா லாக்டவுன் காரணமாக 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான விருதுகள் 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில் தமிழில் வெளிவந்த 'சூரரைப் போற்று' என்னும் திரைப்படம் 5 விருதுகளை அள்ளியது.
சமீபத்தில் டெல்லியில் 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். கொரோனா லாக்டவுன் காரணமாக 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான விருதுகள் 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில் தமிழில் வெளிவந்த 'சூரரைப் போற்று' என்னும் திரைப்படம் 5 விருதுகளை அள்ளியது.

அவற்றில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா பெற்றார் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதை சுதா கொங்கரா பெற்றார். மேலும் சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளி பெற்றார். முக்கியமாக இப்படத்தை தயாரித்த 2D நிறுவனத்தின் தயாராரிப்பாளரான நடிகை ஜோதிகா பெற்றார். கீழே 2022 ஆம் ஆண்டில் தேசிய விருதைப் பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகாவின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதை வென்ற நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தேசிய விருதை வாங்குவதற்கு பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டையில் அழகாக வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த தாடி ஸ்டைல் ஒரு கம்பீரமான தோற்றத்தை வெளிக்காட்டியது. இது சூர்யா விருதை வாங்கும் போது எடுத்த போட்டோ.

தேசிய விருதை வென்ற நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா மிகவும் அழகான க்ரீம் மற்றும் கிரே நிற சில்க் புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் வெள்ளி நகைகளை அணிந்து, தலைக்கு மல்லிகைப் பூ வைத்து, நெற்றியில் வட்ட வடிவ பொட்டு வைத்து கொண்டு தனது தோற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

அழகிய ஜோடி
திரையுலகில் எத்தனையோ நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுள் அஜித்-ஷாலினிக்கு அடுத்தப்படியாக ஏராளமானோரின் மனதில் சிறந்த தம்பதிகள் என்ற பெயரைப் பெற்றவர்கள் தான் சூர்யா-ஜோதிகா. இதை இந்த தேசிய விருது விழாவிலும் ஒரே நிறத்திலான உடையை அணிந்து வந்து சிறந்த தம்பதி என்பதை வெளிக்காட்டியுள்ளனர் என்றே கூறலாம்.

சூரரைப் போற்று குழுவுடன்..
இது இயக்குநர் சுதா கொங்கரா, நடிகை அபர்ணா பாலமுரளி மற்றும் தயாரிப்பாளரும் தனது ஆசை மனைவியுமான ஜோதிகாவுடன் சூர்யா எடுத்த செல்ஃபி போட்டோ.

ஜோவுடன் சூர்யா
இது 68 ஆவது தேசிய விருது விழா நடக்கும் இடத்தில் தனது காதல் மனைவியான ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா சேர்ந்து எடுத்த செல்ஃபி போட்டோ.

தியா-தேவ்
இது சூர்யாவும், ஜோதிகாவும் தாங்கள் வாங்கிய தேசிய விருதை தியா மற்றும் தேவ் உடன் சேர்ந்து எடுத்த போட்டோ. இந்த போட்டோவில் தியா அப்படியே ஜோதிகா மாதிரியும், தேவ் சூர்யாவைப் போன்றும் உள்ளனர் தானே!

தந்தை-தாயுடன் சூர்யா
இது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தாங்கள் வாங்கிய விருதை தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வைத்துக் கொண்டு சந்தோஷமாக எடுத்த போட்டோ.
Image Courtesy: Instagram



Click it and Unblock the Notifications











