இளநீர் அல்லது தேங்காய் தண்ணீரால் முகம் கழுவுவது... சம்மரில் உங்க சருமத்திற்கு அதிசயங்களை செய்யுமா?

கோடை வெயிலில் சுட்டெரிக்கும்போது, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவதை விட ஆனந்தம் வேறொன்றுமில்லை. குறிப்பாக வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் வரும்போது, உங்கள் முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்வது முகப்பருவைத் தடுக்கவும், கறைகளை அகற்றவும், உங்கள் நிறத்தை மேம்படுத்தவும், மிக முக்கியமாக, உங்கள் சரும துளைகளை சுத்தம் செய்யவும் உதவும்.

அதே போல் இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் கோடையில் உங்கள் சருமத்தை குளிர்விக்க மற்றொரு சிறந்த வழி. கோடை மாதங்களில் பொதுவாகக் காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் வியர்வை சருமத்தை நீக்குவதற்கு தேங்காய் நீர் பயனுள்ளதாக இருக்குமா? என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Why Wash Your Face With Coconut Water In Tamil

தேங்காய் நீரில் முகத்தை ஏன் கழுவ வேண்டும்?
உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை தேங்காய் நீரில் கழுவுவதன் மூலம் உங்கள் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தலாம். உங்கள் முகத்தை கழுவ பழுப்பு தேங்காய் தண்ணீரையும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வது கோடைகால டானை அகற்ற உதவுகிறது.

கோடையில் கடற்கரைக்கு செல்ல நாம் அனைவரும் விரும்புவோம். கடற்கரைப் பயணத்தைத் தொடர்ந்து, உங்கள் முகத்தை தேங்காய்த் தண்ணீர் மற்றும் எலுமிச்சைக் கரைசலைக் கொண்டு கழுவும்போது, அது சூரிய ஒளியைப் போக்கி உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.

சரும கறைகளை நீக்குகிறது
கோடை காலத்தில், சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பது, வியர்வை வெளியேறுவது மற்றும் துளைகளில் அதிக அடைப்பு ஏற்படுவது போன்றவை சரும கறைகளுக்கு வழிவகுக்கும். தேங்காய் நீரில் உள்ள பண்புகள் அந்த கறைகளை நீக்கி சருமத்தை ஒளிர வைக்கிறது. இதனால் உங்கள் சருமம் தெளிவான தோற்றத்தோடு அழகாக ஜொலிக்கும்.

முகப்பருவைப் போக்குகிறது
தேங்காய் நீர் மட்டும் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்காது என்றாலும், குணப்படுத்தும் உதவும் மற்ற தோல் பராமரிப்பு பொருட்களுடன் அதை சேர்க்கலாம். முகப்பரு ஒரு பொதுவான கோடைகால தோல் பிரச்சனை. முகப்பரு உள்ள சருமத்திற்கு, தேங்காய் தண்ணீர் மற்றும் மஞ்சள் சேர்த்து ஃபேஸ் மாஸ்க்கை உருவாக்கவும். இந்த ஃபேஸ் மாஸ்க் வறண்ட சருமத்தை பளபளக்க வைக்கிறது.

கரும்புள்ளிகளை நீக்குகிறது
தேங்காய் தண்ணீரின் பல நன்மைகளில், அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் நச்சு நீக்கம் ஆகியவையும் அடங்கும். இது முகப்பரு புள்ளிகள், கறைகள் மற்றும் தோலில் உள்ள கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது.

சன்டானை நீக்குகிறது
சூரிய ஒளியைத் தணிப்பது மட்டுமல்லாமல், தேங்காய் நீரில் சூரியனால் ஏற்படும் வடுக்கள் மற்றும் புள்ளிகளை மங்கச் செய்யும் கனிமங்கள் உள்ளன. தீக்காயத்தைத் தணிக்க, வீக்கம் அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிது தேங்காய்த் தண்ணீரைத் தடவலாம்.

தேங்காய் நீர் பொதுவாக தோல் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. உங்களுக்கு ஒவ்வாமை இல்லாவிட்டாலும், நீங்கள் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து பயன்படுத்துங்கள்.

Story first published: Sunday, April 9, 2023, 10:40 [IST]
Desktop Bottom Promotion