Latest Updates
-
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
உங்க முகத்துல சீழ் பருக்கள் இருக்கா? அப்ப மென்மையான பளபளப்பான சருமத்தை பெற 'இத' ஃபாலோ பண்ணுங்க!
பருக்கள் உங்கள் முக அழகை சீர்குலைக்கின்றன. இது ஆண், பெண்கள் என அனைவருக்கும் ஏற்படலாம். ஒவ்வொருவரும் பருக்கள் இல்லாத மென்மையான பளபளப்பான சருமத்தை பெற வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.
பெரும்பலான மக்கள் எதிர்கொள்ளும் ஓர் சரும பிரச்சனை முக பருக்கள். சில பருக்கள் முகத்தில் வந்து, சில நாட்களுக்கு பின்பு மறைந்துவிடலாம். ஆனால், சில பருக்கள் உங்கள் முகத்தில் அப்படியே இருக்கலாம். அவை, சீழ் நிரம்பிய பருவாகவும் அல்லது கரும்புள்ளிகளாகவும் மாறலாம். அதனால், முகத்தில் பருக்கள் வந்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சீழ் நிரம்பிய பரு உங்கள் அழகான தோற்றத்தை பாதிப்பதோடு, வலியையும் ஏற்படுத்துகிறதா? ஆம். எனில், இனி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இந்த தொல்லை தரும் பருக்களை நீக்குவதற்கு சில மிக எளிதான மற்றும் பயனுள்ள தீர்வுகள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்
உங்கள் சரும பராமரிப்பில் எப்போதும் முதல்படியாக இருப்பது, முகத்தை கழுவி சுத்தமாக வைத்திருப்பது. அதனால் முதலில் அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயைப் போக்க லேசான க்ளென்சர் மூலம் உங்கள் முகத்தை மெதுவாகக் கழுவ வேண்டும். மேலும் பருக்கள் வராமல் தடுப்பதில் இந்த எளிய நடவடிக்கை நீண்ட காலம் உங்களுக்கு உதவும்.
இது ஏன் வேலை செய்கிறது: சுத்தமான சருமத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், பாக்டீரியாக்கள் உங்கள் பரு பிரச்சனையை மோசமாக்கும். கூடுதலாக, இது எந்தவொரு நல்ல தோல் பராமரிப்பு வழக்கத்திற்கும் முதன்மையானது ஆகும்.
கூல் கம்ப்ரஸ்
உங்கள் ஃப்ரீசரில் இருந்து ஒரு ஐஸ் க்யூப் எடுத்து, அதை ஒரு சுத்தமான துணியில் போர்த்தி, உங்கள் பருக்கள் மீது சில நிமிடங்கள் தடவவும். இது சிவத்தலைக் குறைத்து வலியைக் குறைக்கும்.
இது ஏன் வேலை செய்கிறது: ஐஸ்கட்டி வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது, இதனால் உங்கள் பரு குறைய ஆரம்பிக்கும். அதோடு, இந்திய கோடைகாலங்களில் இது ஒரு அருமையான தீர்வாகும்.
மஞ்சள்
ஒரு சிட்டிகை மஞ்சளுடன் சில துளிகள் தண்ணீரில் கலந்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். அதை முகப்பருவில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.
இது ஏன் வேலை செய்கிறது: மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை பருக்களை ஆற்றவும், வேகமாக குணப்படுத்தவும் உதவுகிறது. இது காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்திய அழகு ரகசியம்.
அலோ வேரா
புதிய அலோ வேரா ஜெல்லை பிரித்தெடுத்து, அதை நேரடியாக உங்கள் பருக்கள் மீது தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இது ஏன் வேலை செய்கிறது: அலோ வேரா நம்பமுடியாத குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் குளிர்ச்சியூட்டும் பண்புகளுக்காக அலோ வேரா பிரபலமாக அறியப்படுகிறது. இது வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்கிறது. இதனால் உங்கள் பருக்கள் விரைவாக மறைந்துவிடும். மேலும், கற்றாழை இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் ஓர் பொருள்.
எலுமிச்சை
சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, பருத்தி உருண்டையால் உங்கள் பருக்கள் மீது தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.
இது ஏன் வேலை செய்கிறது: எலுமிச்சை சாறு ஒரு இயற்கை கிருமி நாசினியாக செயல்படுகிறது மற்றும் பருக்களை உலர்த்துகிறது. ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் நீங்கள் காணக்கூடிய விரைவான மற்றும் எளிதான தீர்வு இது.
இறுதிக்குறிப்பு
எந்தவொரு புதிய தோல் பராமரிப்பு வைத்தியத்தையும் முயற்சிக்கும் முன், ஒவ்வொருவரின் சருமமும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஒருவருக்கு வேலை செய்வது இன்னொருவருக்கு வேலை செய்யாமல் போகலாம்.
உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் அல்லது ஏதேனும் மூலப்பொருள் பற்றி உறுதியாக தெரியாவிட்டால், முதலில் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் அல்லது எரிச்சல் ஏற்பட்டால், உடனே தோல் மருத்துவரை அணுக வேண்டும்.



Click it and Unblock the Notifications












