Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
இந்த 3 பொருள மட்டும் உங்க முகத்துல யூஸ் பண்ணா போதுமாம்... ஹீரோயின் மாதிரி பளபளன்னு ஜொலிக்கலாமாம்!
Skin Care Tips In Tamil: அதிகப்படியான செபம் ஒரு நபரின் சரும துளைகளைத் தடுக்கும் மற்றும் எண்ணெய் சருமத்தை ஏற்படுத்தும். எண்ணெய் சருமத்தால் உங்களுக்கு முகப்பருவும் ஏற்படலாம். உங்கள் சருமத்தை சரியாக கவனித்துக்கொள்வதன் மூலம் முகப்பரு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பொதுவாக குழந்தையாக இருக்கும்போது உங்கள் தோல் மென்மையாகவும், பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும். ஆனால் வயதாகும்போது, சுருக்கங்கள், சூரிய ஒளியில் பாதிப்பு, தோல் தொங்குதல் போன்ற பிற பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். உங்கள் சுற்றுப்புறத்தின் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதற்கு வழக்கமான தோல் பராமரிப்பு முக்கியமானது.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், முகப்பரு மற்றும் சரும பிரச்சனையையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆதலால், உங்கள் சருமத்தை பாதுகாக்க பளபளப்பாக ஜொலிக்க ஆயுர்வேத தீர்வுகளை முயற்சி செய்யுங்கள். இக்கட்டுரையில், எண்ணெய் சருமத்திற்கு இயற்கையான ஆயுர்வேத வைத்தியம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
சந்தனம்
சரும பராமரிப்பு பொருட்களில் சந்தனம் மிகவும் பிரபலமானது. அதன் குளிர்ச்சி மற்றும் சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளுக்காக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. சரும எரிச்சலைக் குறைப்பதன் விளைவாக, முகப்பரு, பருக்கள் மற்றும் தோல் வெடிப்புகள் குறைகின்றன. மேலும், இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யவும், புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் உதவும்.
சந்தனம் மற்றும் ரோஸ்வாட்டர்
சந்தனம் மற்றும் ரோஸ்வாட்டர் இரண்டும் சரும பராமரிப்பு பொருட்களில் மிகவும் முக்கியமானது. இவை இரண்டையும் நீங்கள் தனித்தனியாகவும் பயன்படுத்தலாம், சேர்த்தும் பயன்படுத்தலாம். சந்தன் பவுடர் மற்றும் ரோஸ் வாட்டரால் செய்யப்பட்ட பேஸ்ட்டை உங்கள் சருமத்தில் தடவவும். உங்கள் சருமம் ஈரப்பதமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
தேன்
தேன் இயற்கையான மாய்ஸ்சரைசராக இருந்தாலும், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, முகப் பருக்கள் வருவதைத் தடுக்கிறது. இது ஆண்டிசெப்டிக் குளிரூட்டும் தைலமாகவும் செயல்படுகிறது. மேலும், இது ஆயுர்வேத நம்பிக்கைகளின்படி காயங்கள் மற்றும் புண்களை குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
எண்ணெய் பசை சருமத்திற்கும், முகப்பரு உள்ள சருமத்திற்கும் தேன் நல்லது. முகப்பரு மற்றும் பரு வெடிப்புகளை திறம்பட குறைக்க உதவும் தேன் ஃபேஸ் பேக்குகளை வீட்டிலேயே நீங்கள் முயற்சி செய்யலாம்.
எண்ணெய் சருமத்திற்கும் ஈரப்பதம் தேவை
இந்த சுவையான திரவம் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சினைகளை தீர்க்கிறது. எண்ணெய் சருமத்தை உலர்த்துவது செபாசியஸ் குழாயின் செயலிழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் சருமத்தை இன்னும் எண்ணெய் மிக்கதாக மாற்றுகிறது. நீங்கள் தேனை சருமத்தில் பயன்படுத்தி தண்ணீரால் கழுவலாம்.
முல்தானி மிட்டி
எண்ணெய் சருமத்திற்கு மிகச்சிறந்த இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் முல்தானி மிட்டி ஆகும். இது சருமத்தை நன்கு சுத்தப்படுத்தி, முகப்பரு மற்றும் பருக்கள் வராமல் தடுக்கிறது. இது உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது, கூடுதல் எண்ணெயை நீக்குகிறது, மற்றும் புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது.
முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவதற்கான சிறந்த முறை ஃபேஸ் பேக் ஆகும். முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தி ஃபேஸ் பேக்கை உருவாக்க வேண்டும். தேன், தயிர் மற்றும் முல்தானி மிட்டியுடன் சேர்த்து மற்றொரு ஃபேஸ் பேக் உருவாக்கலாம்.



Click it and Unblock the Notifications












