Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
Summer Skin Care Tips: கோடையில் முகப்பரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்கணுமா? இதோ சில டிப்ஸ்...
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் வந்தாலே நிறைய பேர் சந்திக்கும் ஒருவித சரும பிரச்சனை தான் முகப்பரு/பிம்பிள். பருவ காலங்களிலேயே கோடையில் தான் ஒருவர் முகப்பரு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு காரணம் அதிகப்படியான வெப்பம், அதிகளவு வியர்வையால் எப்போதும் சருமம் எண்ணெய் பசையுடன் பிசுபிசுப்பாக இருப்பது, தூசி போன்றவை தான் முக்கிய காரணங்களாக உள்ளன.
கோடைக்காலத்தில் சந்திக்கும் முகப்பரு பிரச்சனையைத் தவிர்க்க வேண்டுமானால், ஒருசில பழக்கங்களை தவறாது மேற்கொள்ள வேண்டும். இப்போது கோடையில் வரும் முகப்பரு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து இப்போது காண்போம்.

* கோடைக்காலத்தில் சருமம் பிசுபிசுப்பாக இருப்பதால், இந்த பிசுபிசுப்பை போக்க ஒரு நாளைக்கு 1-2 முறை மைல்டு கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்யும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும்.
* முகத்தில் பருக்கள் வந்தால், அதை கிள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி கிள்ளினால், அந்த முகப்பரு காயமாக மாறி, முகத்தில் அசிங்கமான மற்றும் கருமையான தழும்புகளை விட்டுச் செல்வதோடு, முகத்தில் பரவத் தொடங்கும்.
* கோடையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து பருக்களை அதிகம் வரத்தூண்டும்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளிலும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும். இது சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, பருக்களை வரத் தூண்டும்.
* நார்ச்சத்து உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே நார்ச்சத்து அதிகம் உள்ள செரில்கள், நார்ச்சத்துள்ள ப்ளூபெர்ரி, கிரேப்ஃபுரூட் போன்ற பழங்களை உண்பதன் மூலம், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் சுத்தமாக இருக்கும்.
* கோடையில் பருக்கள் அதிகம் வரக்கூடாதெனில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்த உணவுகளான கேரட், பப்பாளி, பசலைக்கீரை மற்றும் தக்காளி ஜூஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
* முகத்தில் பருக்கள் இருந்தால், ஃபவுண்டேஷன் பயன்படுத்துவதை ஒரு வாரத்திற்கு நிறுத்துங்கள். இது முகப்பருக்களை போக்குவதோடு, பருக்களில் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கும்.
* முகப்பரு அதிகம் வருபவர்கள் முகத்தில் மேக்கப் அதிகம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது சருமத்தில் பருக்கள் இன்னும் அதிகமாக வரத் தூண்டும்.



Click it and Unblock the Notifications

